அது என் போட்டோவே இல்ல கதறும் நடிகை மாளவிகா மோகனன் !

மாளவிகா மோகனன் தான் தற்போதைய தென்னிந்திய சினிமாவின் சென்ஸேஷன் நடிகை. பேட்ட, மாஸ்டர் என பிரபல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இணையத்தில் வெளியாகும் இவரது புகைப்படங்கள் கிளாமரில் இவரை அடித்து கொள்ள ஆள் கிடையாது என்று தான் சொல்லும். அவ்வப்போது போட்டோஷூட் செய்து வெளியிட்டு வரும் அவர் எல்லை மீறிய கவர்ச்சியை தான் காட்டி வாரார் என புகார் சொல்லக் கொள்ளுமளவிற்கு போட்டோஷூட்களில் கவர்ச்சி காண்பிச்சு வருகிறார்.

இது ஒருபுறம் அவருக்கு ரசிகர்களை அதிகரித்தாலும், மறுபுறம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. மாளவிகா மோகனனின் புகைப்படங்களை பலர் போட்டோஷாப் செய்து பரப்பி வருகின்றனர். மாளவிகா மோகனன் கவர்ச்சி காண்பிப்பதில் தாராள மனம் கொண்டவர் ஆயிற்றே என அந்தப் போலி புகைப்படங்களையும் பலர் நம்பி பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தன் புகைப்படம் ஒன்று போட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருவதையும், பல முன்னணி ஊடகங்களும் கூட அதை செய்தியாக வெளியிவதால் மாளவிகா கோபடமடைந்துள்ளார்.

“இது சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட எனது புகைப்படம், யாரோ ஒருவர் இந்தப் புகைப்படத்தை போட்டோஷாப் செய்து போலியான மோசமான ஒன்றை உருவாக்கியுள்ளனர். AsiaNet போன்ற ஊடக நிறுவனங்கள் உட்பட பலர் இதைப் பரப்பி வருகின்றனர். இது வெறும் கீழ்த்தரமான ஊடக வேலையைக் காண்பிக்கிறது. போலியான புகைப்படங்களைக் கண்டால் அதைப் பற்றி புகார் அளித்து உதவி செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.