மீண்டும் நாயகனாக களமிறங்கும் நடிகர் மோகன் !

கோலிவுட்டில் ரஜினி ,கமல், விஜயகாந்த் என்று பல நடிகர்கள் பட்டைய கிளப்பி கொண்டு இருந்த கால கட்டத்தில் அவர்களுக்கு எல்லாம்பெரும் போட்டியாக இருந்தவர் நடிகர் மோகன்.

80களில் இவரது நடிப்பின் மூலம் தனெக்கென்ற ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் மோகன். பின்னாளில் மைக் மோகன் என்ற பட்டப் பெயருடன் உச்சரிக்கப்பட்டவர்

இவர் 1982 ஆம் ஆண்டு பயணங்கள் முடிவதில்லை என்ற படத்தின் மூலம் பிரபலமான் பின் இவருடைய அம்புட்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்.
மேலும், வருடம் வருடம் சிறந்த நடிகர் விருதையும் இவர் தான் பெறுவார்.

அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகலும் சக்கை போடு போட்டு கொண்டு நடித்தார்.

ஒரு நாளிற்கு 18 மணி நேரம் நடிப்பிலேய நேரத்தை செலவிட்டார். நடிகர் மோகன்

கிட்டத்தட்ட 70 படங்களுக்குப் மேல் நடித்து தூள் கிளப்பியவர். நடிகர் மோகனின் படம் என்றாலே நிச்சயம் வெற்றி விழா கொண்டாடும் அளவிற்கு ஓடும் என்று எல்லோரும் பேசுவார்கள்.

அதுமட்டும் இல்லாமல் இவருடைய படம் எல்லாமே வித்தியாசமான கதை களம், சூப்பர் ஹிட் பாடல்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மேலும், 80ஸ் காலகட்டங்களில் வசூல் மன்னனாக திகழ்ந்தவர். தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையும் ஆவார். கமலஹாசனுக்கு அடுத்த படியாக காதல் மன்னனாக வலம் வந்தவர் நடிகர் மோகன். இப்படி எல்லாவிதத்திலும் சிறந்து விளங்கிய நடிகர் மோகன் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தை இயக்குனர் விஜய்ஸ்ரீ இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’தாதா 87’ ’பவுடர்’ உள்பட சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.