சமந்தா 200 கோடியை நிராகரித்தார்!

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் விவாகரத்து செய்ய போவதாக, கடந்த சில நாட்களாக தகவல் வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து, சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே மனகசப்பு உருவாகி இருவரும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர்.

பிரபலமான ஜோடியான நாகசைத்தன்யா-சமந்தா உடைய விவாகரத்து செய்தி பரபரப்பை கிளப்பி இருந்தது. முன்னரே இந்த தீர்மானத்தை எடுத்த, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா ஜோடி, இப்போது தான் இதனை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். இந்த பிரிவை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா, தமிழிலும் சில படங்களை கையில் வைத்துள்ளார்.

இந்த விவாகரத்து பற்றிய இதர தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவர் நாக சைத்தன்யாவை பிரிந்த சமந்தாவிற்கு, ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாய் கொடுக்க, நாக சைத்தன்யா குடும்பம் முன் வந்ததாகவும், அதனை சமந்தா வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.