கே.பி.90-மரம் நடும் சபதம்!

இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடுவதாக சபதம் எடுத்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.

இயக்குநர் சிகரம் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு,90 மரக் கன்றுகளை நடுவதற்கு, இயக்குநர் சிகரம் அவர்களின் புதல்வி புஷ்பா கந்தசாமி, மருமகன் .கந்தசாமி ஆகியோர் முதல் இரு மரக்கன்றுகளையும், நன்கொடையாக பத்தாயிரம்(10,000/-)ரூபாயும், கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க பொதுச் செயலாளர் கவிதாலயா வீ.பாபு அவர்களிடம் கொடுத்தார்கள்.

இதை தொடர்ந்து கலைமாமணி நடிகை குமாரி சச்சு, நடிகை .ரேணுகாகுமரன், நடிகர்கள் .ராஜேஷ், .பூவிலங்குமோகன், .ரகுமான், .ராம்ஜி, .குமரன், நடிகரும் கராத்தே மாஸ்டருமான .சிஹான் உசேன் HU, இயக்குநர் நடிகர் தயாரிப்பாளருமான .T.P.கஜேந்திரன்,
நடிகரும் இயக்குநருமான ரமேஷ்கண்ணா, கவிஞர் இயக்குநர் கண்மணி சுப்பு, இயக்குநர் நாகா, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்க தலைவர் தளபதி, பொதுச் செயலாளர் .C.ரெங்கநாதன், இணைச் செயலாளர் T.R.விஐயன், கே.பி. வண்டி ஓட்டுனர், கோவிந்தசாமி, ராஜேந்திரன் ஆகியோர்,முதல் பகுதியாக கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகளிடம் மரக்கன்றுகளை
வழங்கினார்கள்.

தொடர்ந்து, கே.பி.90-மரம் நடும் சபதம் என்கிற தலைப்பில் இந்த வருடம் முழுவதும் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்க நிர்வாகிகள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்படும் என்று தெரிவித்துள்ளனர் அவருடைய ரசிகர்கள்.