குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.
![](https://cinemapressclub.com/wp-content/uploads/2018/02/jiiva-feb-6.jpg)
இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.
Related posts:
அல்டி திரைப்பட இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா!October 24, 2019
இயக்குனர் செல்வராகவன் மற்றும் எச் வினோத் கலந்து கொண்ட 'லெவன்' படத்தின் பூஜை!August 16, 2023
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நடிகை அனுஷ்காவின் படம் வெளியாகியுள்ளது!September 7, 2023
சினிமாவை ஒதுக்கி வைக்க போகிறோம் !செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஆர...February 17, 2024
மீண்டும் நாயகனாக களமிறங்கும் நடிகர் மோகன் !December 29, 2021