14
Oct
எழுத்து இயக்கம் - இரா சரவணன் நடிப்பு - ஜோதிகா, சசிக்குமார், சமுத்திரகனி, சூரி கதை - பாசாமான அண்ணன், தங்கை. தங்கையின் கல்யாணத்திற்கு பிறகு வீட்டோடு வரும் மாப்பிள்ளை. ஒரு பிரச்சனையில் இரு குடும்பமும் பிரிகிறது. மீண்டும் அந்த இரு குடும்பமும் எப்படி சேர்கிறது என்பதே கதை. கதையை படித்தவுடன் கிழக்கு சீமையிலே ஞாபகம் வந்தால் நீயும் என் தோழனே. தமிழ் சினிமாவில் அடித்து துவைத்து போட்ட கதை. ஜோதிகாவின் 50 வது படம், இத்தனை வாய்ப்புகள் கிடைக்கும் போது ஒரு திரைக்க்தை எப்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒழுங்கான திரைக்கதைக்கு எந்த ஒரு அறிகுறியும் படத்தில் இல்லை. படம் முழுதுமே தேமேவென நகர்கிறது. தொலைக்காட்சி சீரியல்களின் தன்மை படத்தில் அப்பட்டமாய் தெரிகிறது. படம் எதைப்பற்றியது என்கிற படம் முடிந்தும் கூட புரியவில்லை. ஒரு பாசமான அண்ணன் தங்கை பிரிகிறார்கள் பின் சேர்கிறார்கள் அவர்கள் உறவின் பலத்தையும், உணர்வையும்…