கவிதாலயா தயாரிப்பில்  ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

கவிதாலயா தயாரிப்பில் ஜி வி பிரகாஷ் குமார் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு துவங்கியது!

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை - திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்களின் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் குளோப் என்ற குறும்படத்தின் மூலம்…
Read More
கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

கதையின் நாயகனாக ப்ரஜின் நடிக்கும் படத்தின் தொடக்க விழா!

ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா நேற்று வளசரவாக்கத்தில் நடந்தது. இவ்விழா புத்தாண்டின் நல்ல தொடக்கமாக, சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தப் பெயரிடப்படாத புதிய படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இயக்கிய சீயோன் இயக்குகிறார். பொதுநலன் கருதி என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்டவர் இவர், இயக்கும் இரண்டாவது படம் இது. இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா ,சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார். இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும் எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும் என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை. “இப் படம் அரசியல்…
Read More
வரும் 26ம் தேதி எல்லா ஷூட்டிங்களும் ரத்து!

வரும் 26ம் தேதி எல்லா ஷூட்டிங்களும் ரத்து!

தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா வருகிற 26-ஆம் தேதி  (சனிக்கிழமை) பிரம்மாண்டமாக சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சினிமாவை சேர்ந்த அனைவரும் விழாவில் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்யுமாறு சண்டை இயக்குனர்கள் சங்கம் சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஒருநாள் மட்டும் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
Read More