காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக்கி உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படம் -“SSHHH”!

காமத்தை மையமாக வைத்து உருவாகும் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “SSHHH”, தமிழில் முதல் முறையாக மாறுப்பட்ட கோணத்தில் உருவாகும் ஆந்தாலஜி திரைப் படமான “SSHHH” படத்தின், சமீபத்திய அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் ஆவலை தூண்டியது. இந்த நிலையில் தற்போது “SSHHH” படக்குழு தமிழ் சினிமா முன்னெப் போதும் கண்டிராத வகையில், மிக விரைவாக படத்தின் படப்பிடிப்பினை முடித்து உள்ளனர். நான்கு வேறுவேறு வயது நிலைகளில், வேறுவேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் காம உணர்வுகளை பேசும், நான்கு அழகான கதைகளை உள்ளடக்கிய, இத்திரைப்படத்தின் இரண்டு பகுதிகளுக்காக, 1999 ஆம் ஆண்டு மற்றும், 2005 ஆம் ஆண்டு காலத்தை பிரதிபலிக்கும் வகையிலான வீடு மற்றும் இடம் செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. 2010 மற்றும் 2020 காலகட்டங்கள் நேரிடையான லொகேஷன்களில் படமாக்கப்பட்டது. Lust Stories” எனும் ஹிந்தி படத்தினை போன்று தமிழில் காமத்தினை பேசுபோருளாக கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் தான் “SSHHH”. BIG PRINT…
Read More
இந்த “ஷகிலா” – கிறிஸ்துமஸ்ஸிற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும்!

இந்த “ஷகிலா” – கிறிஸ்துமஸ்ஸிற்கு ரசிகர்களை தியேட்டருக்கு அழைத்து வரும்!

தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய அடல்ட் நடிகை ஷகிலா வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் தான் “ஷகிலா”. இந்தி மொழியில் எடுக்கப்பட்டு, ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு இப்படம் வெளியாகவுள்ளது. படக்குழுவினர் கலந்துகொண்ட, இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா கூறியதாவது.... வழக்கமாக பயோபிக் எடுப்பது என்பதே கடினமானது. நிறைய உழைப்பு தேவைப்படும். ஷகிலாவின் படம் எடுப்பது இன்னும் கடினமானது. படத்தில் ஒரு காட்சியில் “நான் திரைக்கு வெளியே யாரையும் ஏமாற்றுயதில்லை” என்று ஷகிலா சொல்வதாக ஒரு வசனம் வரும் அது நூறு சதம் உண்மை. நிஜத்தில் அவர் மிக இளகிய மனம் கொண்டவர். அது தான் அவர் வெற்றி பெற மிகப்பெரும் காரணம். இப்படம் பல மொழிகளில் வெளியாகிறது. “மாஸ்டர்” படம் தியேட்டருக்கு ரசிகர்களை இழுத்து வரும்…
Read More
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு தொடரும் எதிர்ப்பால் அதிகரிக்குது ஆடியன்ஸ்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்துக்கு தொடரும் எதிர்ப்பால் அதிகரிக்குது ஆடியன்ஸ்!

சிலரால் ‘பிட்டு படம்’ என்ற ரேஞ்சில் விமரிசிக்கப்பட்ட 'இருட்டு அறையில் முரட்டு குத்து' பட இயக்குநர், தயாரிப்பாளர் மீது காவல் ஆணையரிடம் மாணவர் அமைப்பினர் புகார் அளித்தனர். உங்கள் குடும்பத்துடன் சென்று இந்தப் படத்தைப் பார்ப்பீர்களா? என மாணவர் அமைப்பினர் கேள்வி எழுப்பினர். அத்துடன் இயக்குநர் பாரதிராஜா இப்படம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 'ஹரஹர மஹா தேவகி' படத்தை இயக்கிய சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் எழுதி இயக்கிய படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். நடிகர் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பெண்களை மோசமாக சித்தரித்தும், இரட்டை அர்த்த வசனங்கள், காட்சிகள் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. அதிகப்பட்ச ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படத்திற்கு இயக்குநர் பாராதிராஜா கடும் கண்டங்களை தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “திரைப்படங்களால் தேசத்தையே கைக்குள்…
Read More
எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

எக்ஸ் வீடியோஸ் படத்தை குடும்பத்தோடு வந்து பார்க்க வேண்டும்! – இயக்குநர் வேண்டுகோள்!

கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் சஜோ சுந்தர் இயக்கியுள்ள படம் ‘ எக்ஸ் வீடியோஸ் ‘ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஆர்.கே.வி .ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவர் இயக்குனர் ஹரியிடம் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர். பிரகாஷ்ராஜ் இயக்கிய தோனி, உன் சமயலறையில் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். இந்தப்படம் குறித்தும், இதை எடுக்க வேண்டிய எண்ணம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.. இது குறித்து இயக்குநர் சஜோசுந்தர் விவரித்த போது ,” நான் இந்தப் படத்தை சமூக விழிப்புணர்வு நோக்கத்தில் தான் எடுத்திருக்கிறேன். தொழில்நுட்பம் இன்று எந்த அளவுக்கு நம்மை அபாய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை எச்சரிக்கும்படி ஒரு படம் தேவை என்பதை உணர்ந்து இப்படத்தை எடுத்திருக்கிறேன். ஒரு ஆண்ட்ராய்ட் போன் இருந்தால் போதும் நம்மை எங்கிருந்தாலும் கண்காணிக்க முடியும். நம்மை வைத்து எப்படி வேண்டுமானாலும் தகவல் தொடர்பைத் தவறாக பயன்படுத்த முடியும்.…
Read More