நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி”  ரெடியாகிக் கொண்டிருக்கிறது!

நடிகை அஞ்சலி நடிப்பில் “பூச்சாண்டி” ரெடியாகிக் கொண்டிருக்கிறது!

படத்திற்கு படம் வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் செய்து நடிப்பில் முழுதாக தன்னை மாற்றி, எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி, உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார் நடிகை அஞ்சலி. அவரது நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள “பூச்சாண்டி” திரைப்படமும் அவரது புகழுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக திகழும் என உறுதியாக தெரிகிறது. The Soldiers Factory நிறுவனத்தின் சார்பில் K S சினீஷ் தயாரிக்க, கிருஷ்ணன் ஜெயராஜ் இப்படத்தினை எழுதி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படம் கண்டிப்பாகப் குழந்தைகள் கொண்டாடும் அட்டகாசமான கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை ஆருடம் சொல்வதாக அமைந்திருக்கிறது. படம் குறித்து இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறியது இதோ.... “பூச்சாண்டி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் அபார வரவேற்பு, மனதிற்கு பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையமாக கொண்டு, வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி உள்ளது. இப்படத்தில் அஞ்சலி தனது அற்புதமான நடிப்பால், படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.…
Read More