கண்ணீருடன் பிரியாவிடை😭.. டி.பி.கஜேந்திரன் எனும் நான்…!

கண்ணீருடன் பிரியாவிடை😭.. டி.பி.கஜேந்திரன் எனும் நான்…!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(பிப் 05) உயிர் பிரிந்தது. இவர், புகழ்பெற்ற நடிகை டி. பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார். குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் இயக்குநர் டி. பி. கஜேந்திரன். ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ‘இவர் எங்க ஊரு காவல்காரன்’ ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிலாஸ் மாதவன்’, ‘சீனா தானா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். மேலும், ‘பந்தா பரமசிவம்’, ‘சந்திமுகி’, ‘வேலாயுதம்’, ‘வில்லு’, ‘பேரழகன்’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிபி கஜேந்திரன் தன்னைப் பற்றி சொல்லி இருந்த முன் கதைச் சுருக்கமே அஞ்சலி செய்தியாக இதோ: அன்பு நண்பர்களுக்கு வணக்கம், எனது படங்கள் பற்றி…
Read More
நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

நடிகர் சண்முக சுந்தரம் மரணம் – நடிகர் சங்கம் இரங்கல்

மூத்த தமிழ் திரைப்பட குணச்சித்திர நடிகர் சண்முக சுந்தரம் (79) இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ". சண்முக சுந்தரம் அவர்கள் 1963-ம் ஆண்டு ரத்ன திலகம், கர்ணன் ஆகிய படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நடிப்பில் ஆர்வம் கொண்டு மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டு தன் கலை வாழ்க்கையை தொடங்கியவர். 1972-ம் ஆண்டு வாழையடி வாழை படத்தில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து இன்று வரை கரகாட்டக்காரன், கிழக்கு வாசல், நம்ம ஊரு ராசா, நண்பன், அச்சமின்றி உள்பட நூற்று கணக்கான படங்களில் நடித்து தனது இயல்பான நடிப்பாற்றலால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அன்பானவன் அசறாதவன் அடங்காதவன் தான் கடைசியாக வெளிவந்த அவரது படம். மேலும் அண்ணாமலை, அரசியல்,செல்வி, வம்சம் ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். தனது கடினமான உழைப்பாலும் திறமையாலும் நற்பெயரும் புகழும் பெற்று விளங்கியவர்…
Read More