​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லர் வெளியானது !!

​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லர் வெளியானது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது. இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி…
Read More
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் குடும்ப படத்தில் நடிக்கும் சாக்‌ஷி அகர்வால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் குடும்ப படத்தில் நடிக்கும் சாக்‌ஷி அகர்வால்!

  தமிழில் அரை டஜன் படங்களை கைவசம் வைத்திருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வாலுக்கு, இந்த தீபாவளி பான் இந்திய தீபாவளியாக அமைந்திருக்கிறது. நடிகை சாக்‌ஷி அகர்வால், தமிழில் அரை டஜன் படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டுமல்லாது, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், பல மொழிகளிலிருந்தும் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அவருக்கு இந்த தீபாவளி மிகச்சிறப்பானதாக அமைந்திருக்கிறது. பிக்பாஸ் மூலம் பட்டிதொட்டியெங்கும் அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால். தற்போது தமிழ்த் திரையுலகில் நாயகியாக வித்தியாசமான வேடங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். ஆக்‌ஷன், வில்லி, கிளாமர், கிராமத்துப்பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்களில் அசத்தி வரும் சாக்‌ஷியின் திறமை, பிற மொழி படைப்பாளிகளையும் கவர்ந்துள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் தங்கை மகன் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக, கிராமத்து பெண் வேடத்தில் நடிக்கிறார். மேலும், கன்னட திரைத்துறையின் முன்னணி இசையமைப்பாளர் பி.அஜெனீஷ் லோக்நாத் தயாரிக்கும் புதிய படத்தில் மிக…
Read More
நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

நடிகை செளகார் ஜானகிக்கு பத்மஸ்ரீ விருது கிடைச்சிடுச்சு – வீடியோ!

ஜஸ்ட் நைண்டீன் ஏஜி வயதில் கையில் மூன்று மாத கைக்குழந்தையோடு தனது முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சௌகார். இன்றும் நட்சத்திர அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் தாரகை. 80+ ல் படு பிசியான நடிகை என்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து மகிழ்ந்து, வாழ்ந்து கொண்டிருக்கும், பாஸிடிவ் எண்ணங்கள் கொண்ட லிவிங் லெஜண்ட் என்பதும் உண்மை. 1931-ம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்த சவுகார் ஜானகி, தன்னுடைய 19-வது வயதில் என்.டி.ராமராவ் நடித்த சவுகார் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 70 வருடங்கள் சினிமாவில் நடித்துள்ள சவுகார் ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஏறக்குறைய 400 திரைப்படங்களில் நடித்துள்ளார். 1950-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை அவர் மிகவும் பிரபலமாக விளங்கினார். கதாநாயகி, வில்லி, குணசித்திர கதாபாத்திரம், என தனது நடிப்பு ஆளுமையை அழுத்தமாக திரை உலகில்…
Read More
`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

`சுஃபியும் சுஜாதாயும்’ படத்தின் மூலமாக நடன இயக்குனர் லலிதா ஷோபி க்கு கிடைத்த பெருமை

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி படங்களில் பணிபுரிபவர் நடன இயக்குனர் லலிதா ஷோபி. தென்னிந்திய திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான இவர் முன்னனி நடிகர்கள் உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், சியான் விக்ரம், பிரபாஸ், ஜுனியர் என் டி ஆர், குஞ்சாக்கோ போபன், ஜோதிகா, நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட பல முன்னணி  நடிகர் நடிகைகள் நடித்த படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். சென்ற வருடம் இவர் நடன இயக்குனராக பணியாற்றிய  `சுஃபியும் சுஜாதாயும்' மலையாள திரைப்படம் வெளியாகி படமும், படத்தின் பாடல் காட்சிகளும் பலரது பாராட்டை பெற்றது. நரணிபுழா ஷாநவாஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜெயசூர்யா, அதிதி ராவ், தேவ் மோகன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது 51 வது கேரள மாநில திரைப்பட விருது பட்டியலில் சிறந்த நடன இயக்கத்துக்கான விருதை `சுஃபியும் சுஜாதாயும்'…
Read More
பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

பிருத்விராஜ் தயாரிச்சு, நடிக்கும் ’குருதி’ ஷூட்டிங் ஆரம்பமாகப் போகுது!

மலையாளத் திரையுலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பணிபுரிந்து வருபவர் பிரித்விராஜ். இவருடைய தயாரிப்பில் '9' மற்றும் 'டிரைவிங் லைசன்ஸ்' ஆகிய படங்கள் உருவாகியுள்ளன. தற்போது தனது மூன்றாவது தயாரிப்பான ’குருதி’ ஷூட் நாளை தொடங்குமென அறிவிச்சிருக்கார். இப்படத்தை மனு வாரியர் டைரக்ட் செய்யப் போறார். ஹிந்தியில் 'காஃபி ப்ளூம்' என்ற படத்தை இயக்கியவர், 'குருதி' படத்தின் மூலம் மலையாளத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் முரளி கோபி, ரோஷன் மேத்யூ, ஸ்ரீண்டா, நவாஸ் வள்ளிக்குன்னு உள்ளிட்ட பலர் பிரித்விராஜுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்காங்க. அனுஷ் பல்யால் எழுதியுள்ள இக்கதைக்கு அபிநந்தன் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியவுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். நாளை -டிசம்பர் 9-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. ஒரே கட்டமாக ஜனவரி 2-ம் வாரத்துக்குள் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டிருக்காய்ங்க
Read More