விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் செய்யுது ஒரு மாஃபியா கும்பல்!

காஞ்சி போன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதலையும்.. அந்த நதியே காஞ்சி போயிட்டா.. என்ற டயலாக்கின் நிகழ்கால வடிவமாகி விட்டார் விஷால். ஆம்.. நடிகர் விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இரும்புத்திரை’. இந்தப் படம் வரும் மே 11 வெள்ளிக்கிழமையன்று வெளியாக உள்ளது. இதற்கான விளம்பர வேலைகள் அனைத்தும் தற்போது மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் இந்தப் படத்திற்கு தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் தலைவரான அருள்பதி மறைமுகமாக தடை விதித்திருப்பதால் இதுவரையிலும் தியேட்டர்கள் உறுதி செய்யப்படவில்லையாம். விநியோகஸ்தர் அருள்பதி தமிழ்த் திரைப்பட துறையில் பலம் வாய்ந்த சென்னை, செங்கல்பட்டு மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருப்பதால் அவருடைய உத்தரவின் பேரில்தான் ‘இரும்புத் திரை’ படத்திற்கு மறைமுகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர் ஸ்ரீதரனும், தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும் புகார் கூறியுள்ளார். இது பற்றி இன்று மதியம் நடைபெற்ற அவசர பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில்…
Read More