வெள்ளித்திரையின் தனிப்பெருங்கவி- ரகுவரன்: பிறந்த நாளின்று!

திரைப்பட ரசிகர்களின் மனவெளியில் ஒருபோதும் மங்காத தனித்துவமான பிம்பம் ரகுவரன். வெறும் நடிகராக மட்டுமல்லாமல், தனது ஆழ்ந்த கவிதை மனம், தனித்துவமான இசை ரசனை, மற்றும் அழுத்தமான உடல்மொழி ஆகியவற்றால் தலைமுறைகளைத் தாண்டியும் ஈர்க்கும் அபூர்வக் கலைஞன் அவர். இன்று டிசம்பர் 11, அந்தக் கலை ஆளுமையின் பிறந்த தினம்.  வில்லனுக்கும் ஒரு ஆத்மா உண்டு ரகுவரனின் நடிப்பு எல்லைகள் அற்றது. அவர் வில்லனாகத் திரையில் தோன்றியபோது, அது வெறும் வில்லத்தனமாக மட்டும் இருந்ததில்லை; அது புத்திசாலித்தனம், வலி, இயலாமை, மற்றும் துரோகம் ஆகிய உணர்வுகளின் சிக்கலான கலவையாக இருந்தது. குறிப்பிட்டு சொல்வதானால் வில்லன் என்றால் காட்டுத்தனமாக கத்த வேண்டும், முரட்டு லுங்கி, அழுக்குப் பனியன், கடா மீசை, கையில் பாட்டில், வாயில் புகை என்ற செட்டப்புக்குள் வராத ஒரே வில்லன் ரகுவரன் மட்டுமே கோட்சூட் அணிந்து ஹைடெக் வில்லனாக வலம் வந்து சாதித்தவர் ரகுவரன் மட்டுமே . புதிய பரிமாணம்:…
Read More
தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார்!

தமிழ் சினிமா இன்று தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக, அரசியல் மற்றும் சமூக தளங்களில் வலுவாக நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சினிமா உலகம் மறந்தாலும் வரலாறு ஒருபோதும் மறக்காது. அவர்களில் மிக முக்கியமானவர், தமிழ் சினிமாவை ஒரு பெரிய ஆலமரமாக வளர்க்க அன்றே அஸ்திவாரமிட்ட ஏவி. மெய்யப்ப செட்டியார் எனும் தொலைநோக்குப் பார்வை கொண்ட மனிதர். அவர் இல்லையென்றால், இன்று ஒரியா அல்லது போஜ்புரி படங்களைப் போலத்தான் தமிழ்சினிமாவின் வளர்ச்சியும் இருந்திருக்கும்; அவர்தான் அதை மாற்றினார். செட்டியார்களின் கலை உணர்வும் தொழில் பக்தியும் பொதுவாக நகரத்தார் எனப்படும் செட்டியார்களின் இயல்பு அல்லது தர்மம் காலத்திற்கேற்ற தொழில்களை மேற்கொள்வதும், அதனை கலை உணர்வுடன் ரசிக்கும்படியாகச் செய்வதும்தான். செட்டியார்களின் பெருவாழ்வுக்குக் காரணம் தொழில்பக்தி என்றாலும், எல்லாவற்றையும் கலை உணர்வுடன் செய்வது அவர்களின் பெருமைக்கு முக்கியக் காரணம். அது வீடு, உணவு, நகை என்றல்லாமல், வழிபாட்டிலும் கோயில்களிலும் கூட ஒரு…
Read More