பஹத் பாசிலும் கவுதம் மேனனும் நேருக்கு நேர் மோதும் ‘நிலை மறந்தவன்’

பஹத் பாசிலும் கவுதம் மேனனும் நேருக்கு நேர் மோதும் ‘நிலை மறந்தவன்’

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்'…
Read More
கெளதம் மேனன் வெளியிட்ட ‘கோலி சோடா 2’ ஆடியோ டீசர்!

கெளதம் மேனன் வெளியிட்ட ‘கோலி சோடா 2’ ஆடியோ டீசர்!

‘காதல், தீபாவளி, வழக்கு எண் : 18/9’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் SD.விஜய் மில்டன். இவர் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, 10 எண்றதுக்குள்ள’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் ‘கடுகு’. பரத் – ராஜகுமாரன் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, 2014-ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோலி சோடா’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். புதுமுக நடிகர்கள் நடிக்கும் இந்த படத்திற்கு விஜய் மில்டனே ஒளிப்பதிவு செய்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ரஃப் நோட் புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறார். இப்படத்தின் கதையில் ஒரு பகுதி மட்டும் கூடைப்பந்து விளையாட்டின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளதாம். இதில் இயக்குநர் சமுத்திரக்கனி நெகட்டிவ் ஷேடில் நடித்து வருகிறார். அச்சு இசையமைத்து வரும் இதற்கு தீபக் படத்தொகுப்பாளராக…
Read More