நக்கல் மகாராஜா கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

நக்கல் மகாராஜா கவுண்டமணி பிறந்த நாள் ஸ்பெஷல்!

கவுண்டமணி’ எனும் பெயர் இல்லாமல் தமிழ் சினிமாவின் நகைச்சுவை பக்கங்களை நிரப்ப முடியாது. 70களில் நடிக்கத் தொடங்கினாலும் 2கே கிட்ஸையும் 2.1கே கிட்ஸையும் கவரும் காலத்தால் அழிக்க முடியா நகைச்சுவைக் காட்சிகளையும் தமிழ் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கின் தவிர்க்க முடியா அங்கமாகிவிட்ட வசனங்களையும் கொடுத்த நடிகர் கவுண்டமணி. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் சகாப்தம் படைத்தவர் கவுண்டமணி. அவர் இன்று தனது 85-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்💐 உடுமலைப்பேட்டை அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம் பகுதியில் பிறந்தவரின் நிஜப் பெயர் சுப்ரமணி. திரையில் தலைகாட்டத் தொடங்குவதற்கு முன்பே திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டனர். 1970இல் வெளியான 'ராமன் எத்தனை ராமனடி' கவுண்ட மணியின் முதல் படமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பே 'சர்வர் சுந்தரம்', 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்களில் அவர் கூட்டத்தில் ஒருவராகத் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் திரையுலகில் இயக்குனர் பாரதிராஜாவால் 16 வயதினிலே படத்தின் மூலம் கவுண்டமணியாக அறிமுகம்…
Read More
‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி !

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும்…
Read More
கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார் கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது.. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & பிந்து மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா. கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்..இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர்…
Read More
நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

நடிகர் கவுண்டமணியின் அடுத்த பட அறிவிப்பு ! இத்தனை பிரபலங்கள் இணையப் போகிறார்களா!

  ``நடிகர் கவுண்டமணி சாரைத் தேடி நிறைய கதைகள் வந்து கொண்டுதான் இருந்தது. ஆனால், கதை பிடிக்காமல் போனதால், எதிலும் கமிட் ஆகாமல் இருந்தார். இந்த நேரத்தில் தான் `பழனிசாமி வாத்தியார்' கதையைக் கேட்டார் அந்த கதை பிடித்து போனதும் உடனே அதில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தில் கவுண்டமணியின் ஜோடியாக சஞ்சனா சிங் நடிக்கிறார். யோகி பாபு, கஞ்சா கருப்பு, ராதாரவி, சித்ரா லட்சுமணன், ரைடர் ரவி, டி.சிவா, ஆர்.கே.சுரேஷ், ஜே.எஸ்.கே. சதீஷ் என 11 தயாரிப்பாளர்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர். ஒயிட் ஆங்கிள் ரவிஷங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் சிவகார்த்திகேயனும் நடிக்க சம்மதித்துள்ளார் . படப்பிடிப்பு அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது. முழுக்க முழுக்க சென்னையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இசையமைப்பாளர் `கே' இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். இந்த படத்தின் கதை கவுண்டமணி சாரை மிகவும் கவர்ந்து விட்டது. படத்தில்…
Read More