24                                    
                                    
                                        Feb                                    
                                
                            
                        
                        
                    
                          ஒரு தம்பதிகளுக்குள் ஏற்படும் மனபோராட்டமும் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் பயணம் தான் படம். குழந்தை பிறப்பு எளிய முறையில் நவீன அறுவை சிகிச்சை இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக இயற்கை எழில் கொஞ்சம் ஆயுர்வேத மருத்துவமனைக்கு வரும் தம்பதியினர்.அடுத்தடுத்து சந்திக்கும் சம்பவங்களே படத்தின் கதை. முதல் காட்சியே நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.ஒரு ஆணும் பெண்ணும் கண்ணை கட்டிக்கொண்டு பரந்த வெளியில் தட்டு தடுமாறி நடந்து ஒருவர் மற்றவரின் கைகளைப்பற்றிய பிறகு கட்டை அவிழ்த்து சினேகமுடன் சிரிப்பது பரஸ்பரம் அன்பை பரிமாறிக்கொள்வது என திருமணமாகப்போகும் தம்பதியரின் புரிதலை பற்றி தெளிவாக சொல்வதற்கு இதைவிட சிறப்பான காட்சி இதுவரை எந்த மொழி திரைப்படத்திலும் வந்ததில்லை. தமிழ் சினிமாவில் இதுவரை சொல்ல முயற்சிக்காத கதை கருவை எடுத்துக்கொண்டு கொஞ்சமும் தொய்வில்லாமல் படம் பார்ப்பவர்களை எல்லா உணர்ச்சிகளும் மேலோங்க செய்கிறது படம்.தாய்மை உணர்வையும் அதை பிரசவிக்கும் முறையையும் இயல்பாக எதார்த்தமான காட்சிகள் சிறப்பு. ஒவ்வொரு காட்சியும்…                    
                                            
                                    