சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

சோகமான பபூன் நிலைமையில் இருந்தேன் – வடிவேலு உருக்கம்

லைகா நிறுவனம் சார்பில் ‘புரொடக்சன் 23’ என்ற பெயரில் தயாராகும் புதிய பெயரிடப்படாத படத்தில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,” கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோக மயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது. வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்தது இல்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது. இதனை தொடங்க நினைத்தபோது ஏராளமான தடங்கல்கள் ஏற்பட்டது. இறுதியில் ஜி கே எம் தமிழ் குமரன் மூலம் சுபாஷ்கரனிடம் பேசினோம். அவர் வடிவேலுவின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறினார். இதற்காகவே லண்டனிலிருந்து இந்தியாவிற்கு வந்தார். அவர் வாக்குறுதி அளித்தபடி வடிவேலுவின்…
Read More
இம்சை அரசன் 24-ம் புலிகேசி – பூஜை போட்டாச்சு!

இம்சை அரசன் 24-ம் புலிகேசி – பூஜை போட்டாச்சு!

வடிவேலு கதாநாயகனாக நடித்து 2006 ஆண்டு வெளியான ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. சிம்புதேவன் இயக்கிய அந்த படத்தை இயக்குநர் ஷங்கர் தயாரித்திருந்தார். வரலாற்று திரைப்படமான அதில் சமகால அரசியல், சமூக பிரச்சனைகளும் கிண்டலாக விமர்சிக்கப்பட்டிருந்தது. இத்தனிக்கும் மன்னர் காலத்து ஆட்சியை இந்த படத்தில் விமர்சிப்பதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டாலும் அது பெரும்பாலும் நிகழ்காலத்தின் சூழ்நிலைக்கும் பொருத்தமாக அமைந்தது.பிலாக் காமெடி என்ற முறையை கையாண்டு இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் உருவாக்கியிருந்தார். படம் முழுக்க காமெடி வசனங்கள் இடம்பெற்றாலும் , அதனுள் ஒரு ஆழமாக அரசியல் பார்வையும் விதைக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் வடிவேலு கூறும் வசனங்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. ’’எதிர் காலத்தில் வரும் மடையர்களுக்கு நான் எப்படி இருந்தேன் என்று தெரியவாப் போகிறது’, நீர் அடிக்கடி மங்குனி அமைச்சர் என்பதை நிருபித்து விடுகிறீர்கள் ‘’ என்ற வசனங்கள் மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டன. இப்படி ரசிகர்கள்…
Read More