23
Dec
திரைப்படங்கள் பல்வேறு விதமாக உருவாகின்றன. நிஜவாழ்க்கை, உண்மை சம்பவங்கள், பிற மொழி கதைகளின் தாக்கம், கற்பனை, புராணம். இதிகாசம் நாவல்கள், சிறுகதை எனப் பரிமாணங்களிலிருந்து கதைகள் உருவாகின்றன. ஒரு கதையை மனைவியின் பேச்சைக் கேட்டு உருவாக்கி ரிலீஸ் செய்கிறார் ஒரு நடிகர்.சியான்கள் என்ற படத்தில் ஹீரோ என்று ஸ்டார் நட்சத்திரங்கள் யாரும் கிடையாது 60 வயதை கடந்த 7 பெரிசுகளின் கதாபாத்திரங்களைச் சுற்றி படம் உருவாகி உருக்குகிறது. சுப்ரமணியபுரம் படத்தில் சசிகுமாரிடம் உதவி இயக்குனராக இருந்த வைகறை பாலன் இப்படத்தை இயக்கி உள்ளார். படத்தைத் தயாரித்து டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் கரிகாலன். இப்படத்தின் மீடியா சந்திப்பில் படத்தில் நடித்த சியான்கள் அதாவது பெரிசுகள் நளினி காந்த், பசுபதி ராஜ், ஈஸ்வர் தியாகராஜன், துரை சுந்தரம், சமுத்ரசீனி, சக்திவேல் நாராயணசாமி, மற்றும் நடிகர் இமை ராஜ் குமார், இயக்குனர் வைகறை பாலன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது இப்பட தயாரிப்பாளாரும்…