தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் ; நடிகர் விஷால் வெற்றி!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. புதிய நிர்வாகிகளுக்கான இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர் விஷால், ஆர். ராதாகிருஷ்ணன், கேயார் ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதையடுத்து, பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவருக்கு போட்டியிட்ட விஷால் 478 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதேபோன்று, பொருளாளர் பதவிக்கு விஷால் அணி சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர்.பிரபு 344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 326 வாக்குகளும், விஜய் முரளி 212 வாக்குகளும் பெற்றனர். துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட, நடிகர் பிரகாஷ்ராஜ் 408 வாக்குகளும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் 357 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும், செயற்குழு உறுப்பினர்களாக விஷால் அணியை சேர்ந்த…
Read More
‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

‘வெங்காயம்’ படத்தின் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், ‘நெடும்பா’ வெளியீட்டுக்காக படும் துயர்!

சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான படம் 'வெங்காயம்'. கவுரவ வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். இப்படத்துக்கு பலரும் தங்களுடைய பாராட்டைத் தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் சங்ககிரி ராஜ்குமார் தன்னுடைய அடுத்த படமான 'நெடும்பா'வை வெளியிட தான் அடையும் துயரங்களின் வேதனையை தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சங்ககிரி ராஜ்குமாரின் ஃபேஸ்புக் பதிவு: '' 'நெடும்பா' திரைப்படம் முடிந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தை அவ்வளவு எளிதாக திரையிட்டு விட முடியாது. அப்படி வெளியிட்டாலும் எந்த பயனும் இருக்காது. இந்நிலையில் படம் பார்த்த சேரன் அண்ணன் 'வெங்காயம்' திரைப்படத்தை விட பல மடங்கு சிறந்த படம் என சிலாகித்து இதை நானே வெளியிடுகிறேன் என சொல்லி ஒப்பபந்தம் செய்திருந்த நிலையில், சில சிக்கல்களால் ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டன. அதன் பிறகு வேறு நிறுவனம் மூலமாக வெளியிடலாம் என அவர் முயற்சித்த போது உயர்மதிப்பு நோட்டு பிரச்சினை உட்பட…
Read More
சந்திரஹாசன் நடித்த திரைப்படம் -அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

சந்திரஹாசன் நடித்த திரைப்படம் -அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க

ஒரு முதியோர் இல்லம், முதுமை காலத்தில் காதலை அனுபவிக்க எண்ணும் ஒரு ஜோடி, அவர்களின் காதலை தடுக்க நினைக்கும் உறவுகள், காதலை காப்பாற்ற கைக்கொடுக்கும் நண்பர்கள், இறுதியில் காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்தார்களா என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைக்கதையாய் உறுமாற்றி புதுமுக இயக்குனர் N.ஸ்டிபன் ரங்கராஜ் இயக்கியுள்ள படம் "அப்பத்தாவ ஆட்டய போட்டுட்டாங்க" GB Studio நிறுவனத்திற்காக பிரான்சிஸ் ஆல்பர்ட் ஆண்டனி மற்றும் Leo Vision நிறுவனத்திற்காக V.S. ராஜ்குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சந்திரஹாசனும், கதாநாயகியாக நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் டெல்லிகணேஷ், காத்தாடி ராமமூர்த்தி, ஷண்முகசுந்தரம், ஜெயராவ் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பின் போது பல ஆலோசனைகளை தந்து ஆசானாய் விளங்கிய சந்திரஹாசனின் மறைவு, இப்படக்குழுவை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக்கொள்ளும் இவ்வேளையில் அவரது நீங்கா நினைவாக இப்படம் அனைவரையும் கவரும்…
Read More
போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம் ‘இந்தியன் டூரிஸ்ட்’

தமிழில் ஒரு குறும்படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார்.  இக் குறும்படம்பார்பிக்யூ நேஷன் அனுசரனையுடன்  காமன் மேன் மீடியா  வழங்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது.வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு சுற்றுலாப் பயணி சந்திக்கும் நல்ல, கெட்ட அனுபவங்கள்தான்கதையின் அடிப்படை . இங்கு வரும் அவர்களுக்கு நேரும் கசப்பான அனுபவத்தின் மூலம் நம் இந்திய நாடு பாதுகாப்பற்ற நாடுஎன நினைக்கிற நிலை உள்ளது. ஆனால் சில இனிப்பான அனுபவங்களைக் காட்டி இந்தியாஅப்படிப்பட்ட தேசமல்ல என்று வெளிநாட்டினரை  உணர வைப்பது போலுள்ளது கதை. பிரதான பாத்திரமாக போலந்து நாட்டிலிருந்து மாமல்லபுரம் வருகிற சுற்றுலாப் பயணியாக டொமினிக்கா காமின்ஸ்கா  நடித்துள்ளார். இவர் போலந்துக்காரர் .வேறு துணை பாத்திரங்களும் வருகின்றன. கே.பி. செல்வா, காமன் மேன் சதிஷ், ரேக்ஸ், சண்முகம் , தேவ்காளிதாசன், சுபுசிவா, விஷ்ணு ஆனந்த்,விஜயன், சக்தி சரவணன், பார்த்தி, சத்யன் என இளைஞர்களின் கூட்டணியில் இக்குறும்படம்உருவாகியுள்ளது.  இக் குறும்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் திரு.…
Read More
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி திருட்டுக் கும்பல்! -ஏமாந்த தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!

தனது கே.3 சினி கிரியேஷன்ஸ் சார்பில் 'திட்டிவாசல்' என்கிற படத்தை எடுத்து முடித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாஸ்ராவ். இப்படத்தை அறிமுக இயக்குநர் மு.பிரதாப் முரளி இயக்கியுளார். நாசர், மகேந்திரன், தனிஷ்ஷெட்டி, வினோத்குமார், தீரஜ் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாகூட அண்மையில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் பாடல்களை வெளியிட்டார். யூடிவி' தனஞ்ஜெயன், நடிகர் எஸ்.வி.சேகர் பெற்றுக் கொண்டனர். காடும் காடு சார்ந்த நல்ல கதை என்பதால் நடிகர் நாசர் சிரமப்பட்டுத் தேதி கொடுத்து நடித்ததாக இப்படத்துக்குப் பாராட்டு வழங்கியுள்ளார். அப்படிப் பட்ட ஒரு படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளரைப் பண மோசடி செய்து ஏமாற்றியிருக்கிறார் மோசடி ஆசாமி ஒருவர். இதோ தயாரிப்பாளர் ஸ்ரீனிவாஸ்ராவ் அதைப் பற்றிப் பேசுகிறார். ''என் பெயர் ஸ்ரீனிவாஸ்ராவ் .நான் கன்னடத்தில் தெலுங்கில் சில படங்களைத் தயாரித்திருக்கிறேன்.தமிழ்ப்படங்கள் பற்றி எனக்கு மரியாதை உண்டு. எனவே தமிழ்த் திரையுலகில் கால்பதிக்க ஆர்வமாக இருந்தேன் . தமிழில்…
Read More
ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் நடிகை!

ஆஸ்கர் விழாவை புறக்கணித்த ஈரான் நடிகை!

சிரியா, சூடான், சோமாலியா, ஈராக், ஈரான், லிபியா, ஏமன் ஆகிய 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவில் டொனால்ட் டிரம்ப் விரைவில் கையொப்பமிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை புறக்கணிப்பதாக ஈரான் நாட்டின் பிரபல நடிகை அறிவித்துள்ளார். உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இருந்தும் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் ‘ஆஸ்கர்’ விருதுக்கு போட்டியிடுகின்றன. அவ்வகையில், இந்த ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கான படங்கள், நடிகர்-நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த பட்டியலில் ஈரான் நாட்டு தயாரிப்பான ‘தி சேல்ஸ் மேன்’ என்ற திரைப்படம் சிறந்த வெளிநாட்டு மொழி படம் என்ற…
Read More
அரசியலுக்கு குட்பை… குழப்பத்தில் குஷ்பு?

அரசியலுக்கு குட்பை… குழப்பத்தில் குஷ்பு?

குழப்பங்கள் குஷ்புவுக்கு புதிதல்ல. குழப்பி விட்டு அதில் இருந்து மீனைப் பிடிக்கும் அரசியலிலும் குஷ்பு கில்லாடி தான். ஆனால் இப்போது குஷ்புவுக்கு ஏற்பட்டிருப்பது குழப்பத்தை தாண்டிய தயக்கம். காங்கிரஸின் திடீர் அதிமுக பாசம் கலைஞர் குடும்பமும், ஸ்டாலினும் என்ன நினைத்தாலும் சரி… குஷ்பு இன்னமும் கலைஞர் அபிமானியாகத் தான் இருக்கிறார். திமுக கைவிட்ட பின்பு கூட காங்கிரஸில் இணைந்தது திமுகவையோ கலைஞரையோ விமர்சிக்க கூடாது என்பதற்கு தான். இப்போது கூட கலைஞருக்கு உடல் நலம் இல்லை என்றதும் சந்திக்க முயற்சி செய்தார். ஆனால் அனுமதிக்கப்படவில்லை. நோய்த்தொற்று காரணமாக யாரையுமே அனுமதிக்கவில்லை என்று காரணம் சொல்லிவிட்டார்கள். காங்கிரஸில் சமீபகாலமாக அதிமுகவுடன் நெருங்கலாம் என்ற போக்கு காணப்படுகிறது. காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் திருநாவுக்கரசர் அதிமுக மீது பாசம் கொண்டவர். ஜெயல்லிதாவை நெருங்கும் பொருட்டே அவர் நியமிக்கப்பட்டார் என்கிறார்கள். அதற்கு தகுந்தாற்போல் தலைவரான பின்னர் திமுகவை விமர்சித்தார். அதிமுக அரசுக்கு ஆதரவாக பேசினார். நக்மா…
Read More