பேய்க் காதலைச் சொல்லும் ‘மெஸன்ஜர்’ எப்படி இருக்கிறது ?

 

நடிகர்கள் : ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா, பாத்திமா, வைசாலி ரவிச்சந்திரன், ஜீவா ரவி, லிவிங்ஸ்டன்
இசை : அபுபக்கர்.எம்
ஒளிப்பதிவு : பால கணேசன்.ஆர்
இயக்கம் : ரமேஷ் இளங்கமணி
தயாரிப்பு : பிவிகே பிலிம் பேக்டரி – பி.விஜயன்

 

ரமேஷ் இளங்காமணி இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘மெஸன்ஜர்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

காதல் தோல்வியால் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தொடர்ந்து மெசஜ் வந்துக் கொண்டிருக்கிறது. அதை திறந்து பார்க்கிறார். அதில், “தற்கொலை செய்து கொள்ள வேண்டாம், உங்களை நேசிக்கும் பலர் இந்த பூமியில் இருப்பார்கள்” என்ற செய்தி இருக்கிறது. அதை விட அதிர்ச்சி என்னவென்றால், அந்த செய்தியை அனுப்பிய பெண் இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார், என்பது தான்.

இறந்தவர் எப்படி மெசஜ் அனுப்பு முடியும், அவர் உண்மையில் இறந்து விட்டாரா ? என்பதை விசாரிக்கும் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு மேலும் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அது என்ன ? அதன் பிறகு என்ன நடந்தது ? என்பதை, ”மனிதர் உணர்ந்துக் கொள்ள இது மனிதர் காதல் அல்ல”, என்ற ரீதியில் வித்தியாசமாக சொல்வது தான் ‘மெஸன்ஜர்’.

இறந்து போன ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்க முடியுமா? அவளை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா ? , குழந்தை பெற்றுக் கொள்ள முடியுமா ?, இந்த புதுமை தான் இந்தப்படத்தின் மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

கேட்க புதுமையாக இருக்கும் இந்த ஐடியா, திரைக்கதையாக சரியாக அமையவில்லை, காட்சிகளை முழுக்க கமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

அறிமுக நடிகர் ஸ்ரீராம் வில்லங்கமான கதையை மிக நேர்த்தியாக மிக சாமர்த்தியமாக நடித்து நம் கவனத்தை ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மனிஷா ஸ்ரீ, வழக்கம் போல் கவர்ச்சியில் தாராளம் காட்டவில்லை என்றாலும், அந்த குறையை போக்க லிப் லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். ஆவியாக வந்து குரலிலேயே நடித்து கலக்கியிருக்கிறார்.

நாயகனின் முன்னாள் காதலியாக நடித்திருக்கும் மனிஷா தன் வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

ஜீவா ரவி, லிவிங்ஸ்டன், பிரியதர்ஷினி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையானதை செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பால கணேசன்.ஆர், எளிமையான கிராமத்து லொக்கேஷன்களை பல்வேறு கோணங்களில் காட்சியாக்கி ரசிக்க வைத்துள்ளார். படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்-ன் பணியும் பாராட்டும்படி உள்ளது.

திகில் கதையை இதுவரை யாருமே சொல்லாத கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். காட்சிகளில் சுவாரஸ்யம் கூட்டி, மேக்கிங்கில் கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும்.

error: Content is protected !!