ஆரி மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று காலை சென்னை முகபேரிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி சாய் பாபா கோவிலில் பூஜையுடன் துவங்கியது.படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் சென்னையில் நடைபெறுகிறது. இந்த படத்தின் இரண்டு பாடல் காட்சிகள் வெளி நாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு உண்டு.
![](https://cinemapressclub.com/wp-content/uploads/2018/12/0-2.jpg)
60’களில் மதம் காதலுக்கு தடையாக இருந்தது .80’களில் ஜாதி தடையாக இருந்தது.2000-த்தில் அந்தஸ்து காதலுக்கு தடையாக இருந்தது. இன்று காதலே காதலுக்கு தடையாக உள்ளது.இதை பிரதிபலிக்கும் விதமாக எல்லா தரப்பினரையும் கவரும் கதை களம் தான் இப்படம். இந்த படத்தில் கடந்து போன காதலையும் பார்க்கலாம் இன்று நடந்து கொண்டிருக்கும் காதலையும் பார்க்கலாம். உங்க காதலை பார்க்க தயாராகுங்கள் .இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதை கவிதை நயம் கொண்ட காதல் கதை.
“அய்யனார்” படத்தை இயக்கிய S.S.ராஜமித்ரன் இப்படத்தை இயக்குகிறார். A.G.மகேஷ் இசை அமைக்க, ‘அண்ணாதுரை’, ‘தகராறு’ புகழ் தில்ராஜ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் மற்றும் க்ளோஸ்டார் கிரியேஷன் B. தர்மராஜ் இணைந்து தயாரிக்கிறார்கள். மற்ற நடிகர் நடிகைகள் தொழில் நுட்ப குழு மற்றும் தலைப்பு குறித்த தகவல்களும் விரைவில் வெளியிடப்படும்.
Related posts:
கவிதையாய் ஒரு காதல் கதை “மழையில் நனைகிறேன்” !November 24, 2019
இந்தப் படத்துக்காக 70 நாட்கள் கமல் மேக்கப் போட்டு நடித்திருக்கிறார்! இந்தியன் 2 விழாவில் ஷங்கர்!June 27, 2024
வீட்டுக்கு வரும் அரண்மனை 3November 3, 2021
எம். ஜி. ஆர் கொலை முயற்சி வழக்கில் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட நாளின்று: -ஸ...November 4, 2023
சுசீந்திரன் இயக்கும் “சாம்பியன் “ ஷூட் ஆரம்பிச்சாச்சு!May 31, 2018