ஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் “சிவ ரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படத்திற்காக பாலின சமத்துவ (Gender Equality Award) விருதைப் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் மாதத்தில் மும்பை திரைப்பட விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 20வது மும்பை திரைப் படவிழா மும்பையில், அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கி நேற்று (நவம்பர் 01) முடிவடைந்தது.
இந்தத் திரைப்படவிழாவில், இயக்குநர் வஸந்த் எஸ். சாய் இயக்கிய “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” என்கிற திரைப்படம் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில், பார்வதி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்திரன், ஆதவன், ஜெயமோகன் ஆகியோர் எழுதிய சிறுகதைகளை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்திற்காக, ‘பாலின சமத்துவ’ (Gender Equality Award) பிரிவில் SPACIAL JURY MENTION விருது “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்” திரைப்படத்திற்காக இயக்குநர் வஸந்த் எஸ். சாய்க்கு வழங்கப்பட்டது.
Related posts:
விஜய் சேதுபதி & திரிஷா நடிக்கும்முற்றிலும் மாறுபட்ட காதல் கதை ‘96’September 1, 2018
'டிக்:டிக்:டிக்' டிரைலர் - நவம்பர் 24-ல் வெளியாகிறது!November 21, 2017
100 படங்களில் நடித்த நடிகர் ; இன்று வீதி வீதியாக தர்பூசணி விற்கும் அவலம்!March 16, 2018
என் கூடநடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன்? - அப்புக்குட்டி அப்செட்!September 28, 2019
நபிகள் நாயகத்தின் பொன்மொழியை கதையாகக் கொண்ட ‘அனிருத்’!December 19, 2017