சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு பற்றி நான் ஸ்டாப்பாக விவரித்த சிவகுமார்!

தமிழ்த் திரையுலகத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், கலைஞரும்தான் நினைவாற்றலில் வல்லவர்கள் என்று சொல்வார்கள். கலைஞர் என்றோ சந்தித்தவரைக்கூட கவனம் வைத்திருந்து அவரைச் சந்தித்த தேதி, ஊர் பெயருடன் நினைவு கூர்வார்; என்றைக்கோ நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய வசனங்களை அப்படியே சொல்லுவார் – அந்த அளவிற்கு நினைவாற்றல் உடையவர் கலைஞர் என்பார்கள். நடிகர் திலகம் சிவாஜி அதற்கும் ஒரு படி மேலே. பத்து நிமிடம் வருகின்ற வசனங்களை எழுதிக் கொடுத்தால் அதனை ஒருவரைவிட்டுப் படிக்கச் சொல்லிக் கேட்பார். கண்களை மூடிக் கொண்டு கேட்பவர், படிப்பவர் படித்து முடித்ததும் “எங்கே இன்னொரு தரம் படிச்சுக் காட்டு” என்பார். மற்றொரு முறை படித்துக் காட்டியதும் முடிந்தது விவகாரம். “கமான் டேக்” என்று டேக்கிற்குத் தயாராகிவிடுவார். 

நடுவில் நிறுத்தச் சொல்வது, துண்டு துண்டாக ஷாட் எடுப்பது என்பதெல்லாம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் கிடையவே கிடையாது. இரண்டு மூன்று டேக்குகள் எல்லாம் கிடையாது. ஒரேயொரு டேக்தான். எழுத்தாளரின் படைப்பாற்றல் அத்தனையும் அந்த மகா நடிகனின் தலையில் ஏற்றப்பட்டு உச்சரிப்புகளாக வந்துவிழும். இது அத்தோடு முடிந்துவிடுவ தில்லை. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடு யாராவது அதனைக் குறிப்பிட்டுப் பேசும்போது ‘அது கெடக்கு கழுதை. அதையெல்லாம் நீ ஏன் அநாவசியமா ஞாபகம் வச்சுக்கிட்டிருக்கே’ – என்று விளையாட்டாக கலாய்த்து விட்டு அந்த வசனங்களை அப்படியே பேசிக் காட்டுவார் என்பதுதான் ஆச்சரியம்.

siva kumar (5)

அம்மாதிரி மனிதரைப் பற்றி விவரிக்கும்போது அவர்போன்ற நினைவாற்ற லுடன் கூடிய இன்னொரு மனிதன்தான் அவரைப் பிரதிபலித்துக் காட்ட முடியும். அப்படியொரு வித்தையை சமீபத்தில் செய்து காட்டினார் நடிகர் சிவக்குமார்.

எழுத்தாளர் ஸ்டாலின் குணசேகரனின் மக்கள் சிந்தனை பேரவையின் சார்பில் ஈரோட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சிவாஜிகணேசன் வாழ்க்கை வரலாறு பற்றி 50 நிமிட நேரத்தில் நடிகர் சிவக்குமார் இடை நிறுத்தாமல், கொஞ்சமும் பிசிறு தட்டாமல், ஓய்வெடுக்காமல் பேசி முடித்தது தமிழகத்தில் இருக்கும் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்ல திரையுலக ரசிகர்களையும் பெருமளவுக்கு கவர்ந்துள்ளது.

அன்றைக்கு சிவாஜி பற்றிய உரையைத் துவக்கிய நடிகர் சிவகுமார் சிவாஜியின் சிறு பருவத்திலிருந்தே, அவர் ஆரம்பப் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே நடிகர் திலகம் சிவாஜி கதையை ஆரம்பித்தார்.

siva kumar (6)

சிவாஜி நடிப்பு ஆர்வத்தில் வீட்டை விட்டு ஓடியது – யதார்த்தம் பொன்னுசாமி   நாடகக் கம்பெனியில் சேர்ந்தது, ‘கணேச மூர்த்தி’ என்ற சின்னப் பையன் ‘சிவாஜி கணேசனாக’ மாறியது, ஒல்லிப்பிச்சானாக இருந்த சிவாஜியின் உடலைப் ‘பராசக்தி’க்காகத் தேற்றியது, அவர் புகழின் உச்சியைத் தொட்டது, சிவாஜியின் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்…… என்று சிவாஜியின் வரலாறு தொடர்ந்து அவருடைய சொற்பொழிவில் தங்குத் தடையில்லாமல் வந்தது.

கூடவே நடிகர் திலகம் சிவாஜி நடித்த திரைப்படங்களில் பேசிய வசனங்களை யும் நடிகர் சிவக்குமார் பேசிக் காட்டினார். ‘பராசக்தி’, ‘மனோகரா’, ‘இல்லற ஜோதி’, ‘அமரதீபம்’, ‘ராஜா ராணி’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘பாசமலர்’, ‘அன்னையின் ஆணை’, ‘திருவிளையாடல்’, ‘வணங்காமுடி’ ஆகிய படங்களின் வசனங்கள் இன்றைக்கும் சிவாஜியின் புகழைப் பாடுகின்றன. ஒரு சின்னத் தவறுகூட இல்லாமல் இந்த வசனங்கள் அனைத்தையும் மளமளவென அதே உச்சரிப்புடசனும், நடிப்புடனும் வெளிப்படுத்தினார் நடிகர் சிவக்குமார். பல இடங்களில் கை தட்டல்களும், விசில் சத்தங்களும் எழுந்துகொண்டே இருந்தன.

சிவாஜியும் எம்ஜிஆரும் தொழிலில் நேர் எதிர்த் துருவங்கள் என்று பொதுப் புத்தியில் இருக்கும் பிம்பத்தை அப்படியே கலைத்துப் போட்டார் சிவகுமார். அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்திருக் கிறார்கள் என்பதையும், வெவ்வேறு சமயங்களில் ஒருவருக்கொருவர் எந்த அளவிற்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் சொன்னார் நடிகர் சிவக்குமார்.

siva kumar (9)

பணத்தைப் பற்றிக் கவலைப்படாத சிவாஜி எத்தனைத் தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு ‘படம் ரிலீசானபிறகு பணம் கொடுங்கள்; இப்போது படத் தைத் துவங்குங்கள்’ என்று நடித்துக் கொடுத்திருக்கிறார் என்பதையும் சம்பவங்களுடன் விளக்கினார். இதில் இயக்குநர்கள் ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், பந்தலு, தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி ஆகியோரைப் பற்றியும், அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் விவரித்தார் சிவக்குமார்.

கடைசியில்…….. இறுதி நாட்களில் நடிகர் திலகத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது, அவரது மனநிலை என்னவாக இருந்தது என்று உடைந்து போன மனநிலையில் கூறினார் சிவக்குமார். 300 படங்களுக்கு மேல் நடித்து திரையுலகையே புரட்டிப் போட்ட ஒரு தலைமகன் கடைசியில் எந்த மனநிலையில் இறக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார்.

இறுதியாக சிவாஜியின் பெருமைகள் மொத்தத்தையும் அடக்கி தாம் எழுதிய ஒரு புதுக்கவிதையுடன் உரையை முடித்தார் நடிகர் சிவகுமார்.

siva kumar (10)

நடிகர் சிவகுமாரின் இந்தப் பேச்சைக் கேட்பதற்காக அயல் நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் நேயர்களும் ரசிகர்களும் திரண்டு வந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவாஜி ரசிகர்கள் பல இடங்களில் நெகிழ்ந்துபோய் கண்ணீர்விட்டு அழுதனர்.

ஏற்கெனவே நடிகர் சிவக்குமார் ‘இராமாயணம்’, ‘மகாபாரதம்’ என்று இரண்டு பெரிய இதிகாசக் கதைகளையும் ஒரு மேடையில் பேசிக் காட்டி பேச்சு மேடை யில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். இந்தப் பேச்சுக்கள் இ்ப்போதும் வீடியோ வடிவத்தில் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் அமோகமாக பரவி வருகிறது. ஒரு சினிமாவை வீடியோ வடிவில் பார்ப்பதற்காக வாங்கு வதை போல நடிகர் சிவக்குமாரின் பேச்சுக்கள் அடங்கிய டிவிடியும் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதுமே மிக அதிகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

இப்போது நடிகர் திலகம் பற்றிய நடிகர் சிவக்குமாரின் இந்த மேடைப் பேச்சும் அவரது வாழ்க்கையில் ஒரு மாணிக்கக் கல்லாக மாறியிருக்கிறது என்றே சொல்லலாம்.