தற்போது உள்ளங்கையில் அடங்கி விட்ட இணையத்தில் அதிகமாக தென்படும் விஷயம் தமிழ் சினிமாதான். நடப்பு சம்வங்களை ஃபேச் புக் லைவ் மூலம் உடனே டெலிகாஸ்ட் செய்யும் போக்கு அதிகரித்து விட்டது. அது போல் பழைய கால தமிழ் சினிமா பற்றிய கவல்கள், நினைவலைகள் ஆங்காங்கே தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்த செய்திகளும் நினைவுகளும் ஒருவகையான வாய்மொழி வரலாறு என்கிறார்கள். ஆனால் இந்த டெக்னாலஜிக்கு முன்னோடி யாக தமிழ் தென்னிந்திய திரைப்பட உலகின் தகவல் களஞ்சியமாக இருந்தவர் ஃபிலிம் நியூஸ் ஆனந்தன். இவர்தான் திரைப்படத் துறையில் மக்கள் தொடர்புப் பணி என்ற டிப்பார்மெண்டையே ஓப்பன் செய்தவர். இவர் தான் அறிந்த, அறிய விரும்பிய, அறிய ஆவல் படும் அத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் குறித்தான் தகவல்க ளையும் சேகரித்து வைத்திருந்தார். அத்துடன் அவற்றை யார் கேட்டாலும் உடனுக்குடன் பகிர்ந்து வந்தார்.
ஆனந்தன் சென்னையில் பல ஆண்டுகளாக “ஃபிலிம் நியூஸ்” என்ற திரைப்படச் செய்தி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரிடமிருந்துத்தான் தமிழ்த்திரைப்பட செய்திகளை வாங்கி “சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது. மேலும் தமிழ்த் திரையுலகச் செய்திகள் அனைத்தையும் ஆண்டு தோறும் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியாவான ஃபிலிம் நியூஸ் ஆனந்தன் கடந்த வருடம் காலமாகி விட்டார்.
அவருடைய மறைவுக்குப் பிறகு யார் அந்த சேவையைத் தொடர்வது என்கிற கேள்வி எழுந்தது. அந்த வருத்தத்தை ஏ வி எம் மக்கள் தொடர்பாளர் பெரு.துளசி பழனிவேல் பொறுப்பேற்று ஆர்வமுடன் செய்து வருகிறார். கடந்த வருடத்தில் வெளியான திரைப்படங்கள், திரையுலக நிகழ்வுகள், உதிர்ந்து போன நட்சத்திரங்கள் என பலவிதமான சினிமா செய்திகளைத் தொகுத்து இந்தாண்டு ஜனவரி மாதமே ஒரு புத்தகமாகவே வழங்கியிருந்தார்.
பின்னர் இந்த 2017ல் ஆறு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், இந்த ஆறு மாத காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரையுலகத்தின் ஒட்டு மொத்த நிகழ்வுகளையும் “துளசி சினிமா நியூஸ்” என்ற பெயரில் ஒரு புத்தகமாக்கி வெளியிட்டிருக்கிறார். அனைத்துத் தரப்பினருக்கும், அந்த புத்தகத்தை இலவசமாக வழங்கி இரண்டாம் ஃபிலிம் நியூஸ் மேன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.
வாழ்க அவர் பணி!