சுதந்திரமாக சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

சுதந்திரமாக சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை என்று நடிகர் சல்மான் கான் வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

  பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. ராஜஸ்தானின் படப்பிடிப்புக்கு சென்ற போது அரிய வகை மான்களை வேட்டையாடியதால் கைது செய்யப்பட்டு கோர்ட்டால் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் வேட்டையாடிய மான்கள் பிஷ்னோய் இன மக்களால் புனிதமாகக் கருதப்படக்கூடியது என்று கூறப்படுகிறது. இதனால் டெல்லியைச் சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோயிடமிருந்து சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்திருக்கிறது. தொடர்ந்து கொலை மிரட்டல் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சல்மான் கானுக்கு மும்பை போலீஸார் ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சல்மான் கான் தனது பாதுகாப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இதனை பற்றி நடிகர் சல்மான் கான் கூறுகையில், பாதுகாப்பற்று இருப்பதை விட பாதுகாப்புடன் இருப்பது மேல். இப்போது பாதுகாப்பு இருக்கிறது. என்னால் சுதந்திரமாக ரோட்டில் சைக்கிள் கூட ஓட்ட முடியவில்லை. என்னால் வெளியில் தனியாக செல்ல முடியவில்லை. நான் வெளியில்…
Read More