தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

தலைநகரம் 2 பட வெற்றிக்கு நன்றி தெரிவித்த சுந்தர் சி! இப்படி ஒரு வரவேற்பா!

மிகப்பெரும் ப்ளாக்பஸ்டர் திரைப்படமான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியிருந்த இப்படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று, 350 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… வழக்கமான இந்த மாதிரி விழாக்களில் தான் நன்றி சொல்ல வேண்டும் ஆனால் இம்மாதிரி விழாக்களே நடப்பது அரிதாகிவிட்டது. அதனால் இசை விழாவிலேயே எல்லோருக்கும் நன்றி சொல்லிவிடுகிறோம். நான் இந்தப்படத்திற்கு எத்தனை தியேட்டர் என துரையிடம் கேட்டேன் அவர் 350க்கும் அதிகம் என்று சொன்ன போது, பயந்துவிட்டேன். இப்போதெல்லாம் ரிலீஸாகும் நாளிலேயே தியேட்டரில் கூட்டமில்லாமல் ஷோ கேன்சலாகும் காலகட்டத்தில் இருக்கிறோம். பெரிய ஹீரோக்கள் படங்களுக்குத் தான்…
Read More
அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

அரன்மணை படம் போல தொடர்ந்து பல பாகங்களாக வெளியாகும் தலைநகரம்! சுந்தர் சி இன் அறிவிப்பு!!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் சுந்தர் சி மற்றும் வடிவேலு இணைந்து நடித்த காமெடி கலந்த ஆக்சன் படம் தான் தலைநகரம் இந்தப் படம் 2006 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது Right Eye Theatres சார்பில் தயாரிப்பாளர் பிரபாகரன் மற்றும் இயக்குநர் V Z துரை தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தலைநகரம் 2. சுந்தர் சி, பாலக் லல்வாணி நடிப்பில், இயக்குநர் V Z துரை இயக்கியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவினில் .. தயாரிப்பாளர் SM பிரபாகரன் பேசியதாவது.. எங்கப்பாவுக்குப் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமென்று ஒரு ஆசை உண்டு. அவர் ஆசைப்படி எங்களை ஆளாக்கினார். எனக்கு சினிமா மீது நிறையக் காதல். நடிப்பு நமக்கு செட்டாகுது, நாம் ஒரு படம் தயாரிக்கலாம் என்று நினைத்தேன். துரை அண்ணா எனக்கு…
Read More