என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

என் கேரக்டருக்காக டெய்லி ஒன்றரை மணி நேரம் மேக் அப்- கேஜிப் 2 குறித்து சஞ்சய்தத்!

வில்லன் பாத்திரம் பிடிக்கும் என்பதால் ஆதிரா ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று நடிகர் சஞ்சய் தத் விளக்கமளித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கே.ஜி.எஃப் 2'. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், 2-ம் பாகத்துக்கு மாபெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.'கே.ஜி.எஃப் 2' படத்தில் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட சில கதாபாத்திரங்களை இணைத்துள்ளார் பிரசாந்த் நீல். தற்போது யாஷுக்கு வில்லனாக நடித்திருப்பது குறித்து சஞ்சய் தத் கூறியிருப்பதாவது: "ஆதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இதுவரை நான் செய்ததிலேயே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் இது. கதைப்படி ஆதீரா அச்சமற்றவன், துணிச்சலானவன், இரக்கமற்றவன். இந்த கதாபாத்திரமாக மாற உடல்தகுதியை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதாக இருந்தது. ஒவ்வொரு நாள் படப்பிடிப்பின் போதும் சுமார் 1.5…
Read More