19
Nov
பிரபலமான திரைப்படத் திருட்டு இணையதளங்களான 'iBomma' மற்றும் அதன் கிளைத் தளங்களின் முதன்மை நிர்வாகி எனச் சந்தேகிக்கப்படும் இம்மாடி ரவி (Immadi Ravi) என்ற தில்லாலங்கடி கேடியை, நவம்பர் 15, 2025 அன்று ஹைதராபாத் சைபர் கிரைம் காவல் துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. தென்னிந்தியத் திரைப்படத் துறைக்கு ₹3,000 கோடிக்கும் மேல் இழப்பை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் இந்த மாபெரும் சைபர் குற்றவாளியின் கைது, திரையுலகிற்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது. யார் இந்த ரவி இமாண்டி? அடையாளம்: ரவி இமாண்டி, 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் iBomma கும்பலின் 'கிங்பின்' ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்தியப் படங்களை அவற்றின் வெளியீட்டு நாளிலேயே அல்லது OTT வெளியீட்டுக்குப் பின் உடனடியாக உயர் தரத்தில் (HD) பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கும் இலவச இணையதளங்களை இயக்கி வந்துள்ளார். சாம்ராஜ்யம்: இவருக்குச் சொந்தமான 65க்கும் மேற்பட்ட மிரர் சைட்கள்…
