இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

இசை வெளியீடு விழாவை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த திட்டமுள்ள “சந்திரமுகி 2” படக்குழு!

  லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.…
Read More
நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

நடிகை வரலட்சுமி சரத்குமார் 50 படங்கள் நடித்தது குறித்து உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார்!

"போடா போடி" படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். பின்னர் "தாரை தப்பட்டை" மற்றும் "விக்ரம் வேதா" போன்ற பல வெற்றிப் படங்களில் நடிச்சிருக்கார். அவரது நடிப்பிற்காக விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்று இருக்கார். நடிப்பு மட்டுமின்றி, வரலட்சுமி சமூக பணிகளில் ஈடுபட்டு உள்ளார். மேலும் பல்வேறு சமூக பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் விலங்குகளின் உரிமைகளுக்காக ஒரு வலுவான வக்கீல் மற்றும் விலங்கு நலனை மேம்படுத்துவதற்காக பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஹீரோயினாக மட்டுமே ஜோடி சேர்ந்து நடிப்பேன் என்பது இல்லாமல் பெண்கள் சார்ந்த படங்களின் அதிகமாக கவனம் செலுத்தி வாறார். இவர் தற்போது 50 படங்கள் நடித்து இருக்கிறார். இது குறித்து நெகிழ்ச்சியான பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “எனது பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்..அது எளிதான ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியும்.…
Read More