மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

மிக மிக அவசரம்…. கதையைக் கேட்டதும் பாடலாசிரியராக மாறிய இயக்குநர் சேரன்!

பெரிய நட்சத்திரங்கள் இல்லை... கவர்ச்சியான பிரமாண்டங்கள் இல்லை... ஆனாலும் ஒரு படம் இன்றைக்கு மீடியாவில் பரபரப்பாகப் பேசப்படுகிறது என்றால் அது மிக மிக அவசரம்.  கதை, இன்றைய சூழலுக்கு அதன் அவசியம்தான் அந்தப் படத்துக்கு இப்படியொரு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பெண் போலீசார் குறித்து இதுவரை பேசப்படாத ஒரு விஷயத்தை மையமாக வைத்து மிகவும் விறுவிறுப்புடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. இயக்குநராக அவருக்கு இது முதல் படம். ஆனால் தயாரிப்பாளராக மூன்றாவது படம். ஏற்கெனவே அமைதிப்படை 2, கங்காரு படங்களை இயக்கியவர். "இந்தக் கதையை எழுதியவர் இயக்குநர் ஜெகன். கதையைப் படித்ததுமே, இதுதான் இயக்குநராக எனக்கு முதல் படமாக இருக்க வேண்டும் எனத் தீர்மானித்து களமிறங்கினேன். திட்டமிட்டபடி படத்தை எடுத்து முடித்துவிட்டோம். திருப்தியாக வந்திருக்கிறது படம். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே, பாடலாசிரியராக மாறிவிட்டார் இயக்குநர் சேரன். அவராகவே முன்வந்து ஒரு பாடலை எழுதிவிட்டார். 'பெண்ணிற்கோர் தீமை செய்தோம்...'…
Read More
மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம். கதை, வசனம் - ஜெகன்நாத். ஒளிப்பதிவு - பாலபரணி, படத் தொகுப்பு - சுதர்சன். இசை - இஷான் தேவ். மக்கள் தொடர்பு- எஸ் ஷங்கர். தயாரிப்பு, இயக்கம்- சுரேஷ் காமாட்சி. பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதே நேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம். இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல 'டாக்' உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. படம் பார்த்து…
Read More