29
Oct
ஆகச் சிறப்பான சொற்கோர்வை, சந்தம் என தமிழ் இலக்கணத்தின் அத்தனை கூறுகளையும் மிகச் சிறப்பா கையாண்ட கவிஞர் வாலி தாயைப் பற்றி எழுதியுள்ள அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே, தாய் இல்லாமல் நான் இல்லை, நானாக நான் இல்லை தாயே, ஆசைப்பட்ட எல்லாத்தையும் போன்ற பாடல்கள் எல்லாம் இன்னிக்கும் நம்மை தாலாட்டிக் கொண்டு தானே இருக்கின்றன. அதே மாதிரி கற்பகம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மன்னவனே அழலாமா', 'அத்தை மடி மெத்தையடி', அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் இடம் பெற்று 'உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன்' தளபதி படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்கள், மௌன ராகம் திரைப்படத்தில் இடம் பிடிச்ச 'மன்றம் வந்து தென்றலுக்கு', காதல் தேசம் திரைப்படத்தில் இடம் பெற்ற 'என்னை காணவில்லையே நேற்றோடு', காதலர் தினத்தில் இடம் பெற்ற 'என்ன விலை அழகே', சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் இடம் பெற்ற 'முன்பே வா என் அன்பே…
