நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

நடிகை வரலட்சுமி சரத்குமார் டைரக்ட செய்யப் போகும் ‘கண்ணாமூச்சி’!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் பட நிறுவனம் ‘மெர்சல்’ படத்திற்குப் பிறகு தயாரிக்க இருக்கும் புதிய திரைப்படம் ‘கண்ணாமூச்சி’. இந்தப் படத்தை நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்கவிருக்கிறார் என்பது இன்றைய தினத்தில் தமிழ்த் திரையுல கத்தை அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியப்படவும் வைத்திருக்கும் ஒரு செய்தி. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குநரும் இவர்தான். பல்வேறு மொழி திரைப்படங்களில் பல சவாலான வேடங்களை ஏற்று தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதித்து வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.  அவர் திரையில் இதுவரையிலும் ஏற்று நடிக்காத ஒரு வேடத்தை ஏற்று இந்தப் படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். புதுமையான திரைக்கதையையும் அமைத்து தனது முதல் படமாக இந்த ‘கண்ணாமூச்சி’ படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுக்கிறார். ‘கண்ணாமூச்சி’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு தாங்கிய போஸ்டரை இன்று (18.10.2020 ஞாயிறு) காலையில்  அரசியல், சமூகம், விளையாட்டு மற்றும் திரை உலகை சார்ந்த பெண் பிரபலங்கள் பலரும் இணைந்து ஒரே சமயத்தில் வெளியிட்டுள்ளனர்.…
Read More