முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் ‘மரகதக்காடு’

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன் ,ஜே.பி. மோகன். , ராமச்சந்திரன், பாவா லட்சுமணன்   மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்கள் தவிர காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்க பயணித்துள்ளன . படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “” அழிந்துவரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது . நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும்  அநீதி பற்றி  படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க  முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின்  அடிப்படையில்  உருவாக்கப்பட்டிருக்கும்…
Read More