நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் என்ன செய்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது

நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் என்ன செய்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது

அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தன் தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை, படம் இயக்குவதில்தான் ஆர்வம் என்று தீவிரமாக வெப்சீரிஸ்களுக்குக் கதை எழுதுவதில் ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் ஷாருக் கான் மற்றும் ஆர்யன் கான் இருவரும் இணைந்து 'D'YAVOL X' என்ற விலையுயர்ந்த ஆடை தயாரிப்புக் கம்பெனியின் விளப்பரத்தில் நடித்துள்ளனர். இதன் புகைப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 30-ம் தேதி) வெளியாகியிருந்தது. இதை ஷாருக் கான் மற்றும் ஆர்யன் கான் தங்களின் சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்திருந்தனர். இவை சமூக வலைதளங்களில் வைரலாகியிருந்தன. இதையடுத்து அவர்கள் விளம்பரத்தில் அணிந்திருந்த 24 லட்சம் மதிப்புள்ள ஜாக்கெட் மற்றும் 24,000 ரூபாய் மதிப்புள்ள டி-சர்ட்கள் ஒரே நாளில் விற்பனையாகித் தீர்ந்துள்ளன என்று கூறப்படுகிறது. ஆர்யன் கான் நடித்த முதல் விளம்பரமே இவ்வளவு வரவேற்ப்பைப் பெற்றிருந்தாலும் 'இந்த ஆடைகளை கிட்னியை விற்றுத்தான் வாங்க வேண்டும்' எனப்…
Read More
தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த பிறகு அவர் செய்யும் யாவும் வைரல் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் படிப்பை முடித்துள்ள ஆர்யன் கான் தனது தந்தையைப் போல் திரைப்படத்துறையில் நுழையத் திட்டமிட்டு இருந்தார். ஏற்கெனவே வெப் சீரிஸ்களை இயக்கத் தேவையான கதையை பிலால் சித்திக் என்பவருடன் சேர்ந்து ஆர்யன் கான் எழுதிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாகக் கடந்த டிசம்பர் மாதமே தான் கதை எழுதிக்கொண்டிருப்பதாக சோசியல் மீடியாவில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், அவர் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தனது படத்தில் நடிக்க வைப்பதாகத் தெரிவித்தார். ஆனால் அதனை ஆர்யன் கான் நிராகரித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆர்யன் கான் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார். அதுவும் தனது தந்தையையே இயக்கும் வாய்ப்பு ஆர்யன் கானுக்குக் கிடைத்திருக்கிறது. பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்காக அந்த விளம்பரம்…
Read More
போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

போதை பொருள் கொண்டாட்டத்தில் ஷாருக் கான் மகன்!

நடிகர் ஷாருகான் மகன் ஆர்யன் கான் தனது நண்பர்களுடன் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில், போதை பொருட்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக, போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பையில் இருந்து கோவா செல்ல உள்ள கப்பலில் போதை பொருள் விருந்து பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், என்சிபி குழு, அதன் மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான போலீசார், நேற்று மும்பை கடற்கரையில் கப்பலில் நடந்த பார்ட்டி ஒன்றை சோதனை செய்தனர். இதுகுறித்து என்சிபி தெரிவித்துள்ள சமீபத்திய தகவலின்படி, பாலிவுட் நடிகர் ஷாருகானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விருந்தில் பார்ட்டியில் நேற்று நடைபெற்ற பொது சோதனையில் 3 பெண்கள் உள்பட மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
Read More