01
Feb
குழந்தைகளை குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு தான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரையரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். தமிழில் அப்படியான படங்கள் மிகவும் குறைவு. தற்போது தமிழில் அப்படியான ஒரு படமொன்று தயாராகியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர் சந்துரு இணைந்து இந்தப் படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். 'ஆலம்பனா' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படம் பேண்டஸி கான்செப்ட் பாணியில் தயாராகியுள்ளது. அந்த கான்செப்ட் பின்னணியில் தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தயாராகியுள்ள படம் இது என்று சொல்லலாம். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் பாரி கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றியவர். வைபவ், பார்வதி நாயர், திண்டுக்கல் ஐ.லியோனி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ஆனந்த்ராஜ், முரளி சர்மா, கபீர்துபான் சிங் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.…