பேய் இல்லாத திகில் படம் “உரு”

பேய் இல்லாத திகில் படம் “உரு”

வையம் மீடியாஸ் படநிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்துவரும் புதிய படம் உரு. இதில் கலையரசன் கதாநாயகனாவும், சாய் தன்க்ஷிகா கதாநாயகியாகவும் நடிக்க, இவர்களுடன் மைம் கோபி, டேனியல் ஆனி, தமிழ்ச்செல்வி, கார்த்திகா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் விக்கி ஆனந்த் கூறியதாவது, உரு என்றால் பயம் என்று பொருள் உண்டு. பயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள கதை என்பதால் இப்படத்திற்கு உரு என்ற தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. கதைப்படி நாயகன் கலையரசன் நல்ல குடும்பக்கதைகளை எழுதி வரும் எழுத்தாளர். ஆனால் இன்றைய மாறிவிட்ட சூழலில் இவரின் கதைகள் வரவேற்கப்படாமல் போகவே, தனது வாழ்வாதாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள இன்றைய காலகட்டத்திற்கேற்ப ரசிகர்களை மிகவும் கவரும் திரில்லர் கதைகளை எழுத முடிவுஎடுத்து, மேகமலை என்ற ஊருக்கு செல்கிறார். அங்கு அவர் கதை எழுதத் தொடங்கும் போது அவரைச் சுற்றி சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து என்ன நடக்கிறது…
Read More
பக்கா  கமர்ஷியலான பேய்படம் – ‘டோரா’

பக்கா கமர்ஷியலான பேய்படம் – ‘டோரா’

அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கியுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வருகிற மார்ச் 31ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகம் இருப்பதாகக் கூறி படத்துக்கு 'ஏ' சான்றிதழ் வலனாகியுள்ளனர். இதையடுத்து படக்குழுவினர் மீண்டும் கோரிக்கை வைத்தபின்னர் 'டோரா' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தாண்டு நயன்தாரா நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படம் 'டோரா' ஆகும். விவேக் சிவா மெர்வின் இசையமைத்துள்ள இப்படத்தில், தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தைப் பற்றி இயக்குநரிடம் கேட்ட போது, “இது பக்கா கமர்ஷியலான பேய்ப்படம்தான். வாராவாரம் வந்துட்டு இருந்த பேய்ப்படங்கள் எப்போ குறைஞ்சதோ அப்போ தான், நான் இந்த பேய்ப்படத்தை ஸ்டார்ட் பண்னேன். மத்த பேய்ப்படங்களில் மக்கள் பார்க்காத விஷயங்களை இந்த படத்தில் காட்டணும்னு…
Read More