‘சீயான் 62’ இல் இணைந்த மலையாள பிரபலம் சுராஜ் வெஞ்சாரமூடு!

‘சீயான் 62’ இல் இணைந்த மலையாள பிரபலம் சுராஜ் வெஞ்சாரமூடு!

மலையாள திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறை வென்றவரும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றவருமான நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, 'சீயான் 62' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 'சீயான்' விக்ரம் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில், இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் 'சீயான் 62' எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார். மேலும் இவரின் நடிப்பில் வெளியான 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்', 'டிரைவிங் லைசன்ஸ்', 'ஜன கன மன', 'த கிரேட் இந்தியன் கிச்சன்' ஆகிய படங்களிலும் இவரது தனித்துவமான நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவர் முதன்முறையாக தமிழில் 'சீயான் 62' படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.…
Read More
இது சாதி படம் இல்லை ” காடுவெட்டி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர் கே சுரேஷ் !

இது சாதி படம் இல்லை ” காடுவெட்டி ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர் கே சுரேஷ் !

  காடுவெட்டியார், காடுவெட்டி குரு, காடுவெட்டி என்றால் தமிழ் நாட்டு மக்களிடம் அத்தனை பிரபலம். அந்த தலைப்பில் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, சோலை ஆறுமுகம் இயக்கி இருக்கும் படம் ‘காடுவெட்டி’.மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்திருக்கிறார். வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மா.புகழேந்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியபோது, “இந்தப்படத்தில் நானே ஷாக் ஆகிற மாதிரி வணக்கம் தமிழா சாதிக், கானா பாடலை பண்ணியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படத்தில் நிறைய ஆக்ஷன் இருந்தாலும் நல்ல மெசேஜ் இருக்கிறது. முக்கியமா படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய வெற்றியை பெரும். நாயகன் ஆர்.கே. சுரேஷின்…
Read More
மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ?  சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

மீண்டு வந்தாரா ஸ்ரீகாந்த் ? சத்தமின்றி முத்தம் தா விமர்சனம் !!

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் பல வருட இடைவெளிகளுக்கு பிறகு வந்திருக்கும் திருவிழா திரைப்படம் திரில்லர் திரைப்படம் பத்தமின்றி முத்தம் தா எப்படி இருக்கிறது செலிபிரைட் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் கார்த்திகேயன்.S தயாரிப்பில் ஸ்ரீகாந்த் – பிரியங்கா திம்மேஷ் நடிப்பில் ராஜ் தேவ் இயக்கியுள்ளார். ஒரு இளம் பெண் ஆக்சிடென்ட் ஆகி, ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகிறார். அவளது கணவன் நான் தான் என, ஸ்ரீகாந்த் அவளை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு கூட்டி செல்கிறார். ஆனால் அவளது உண்மையான கணவன் போலீசில் தன் மனைவியை காணாமல் போனதாக புகார் செய்கிறார். இன்னொருவனின் மனைவியை ஏன் ஸ்ரீகாந்த் கடத்திக் கொண்டு வந்து வைத்திருக்கிறார் ? அதன் பின்னணி என்ன? எதற்காக இதையெல்லாம் செய்கிறார் ? அந்த பெண்ணுக்கு உண்மை தெரியும் போது தெரிய வரும்போது அவள் என்ன செய்கிறாள் ? இதுதான் படத்தின் கதை கேட்க சுவாரஸ்யமாக இருக்கும் ஒன்லைன் பார்க்கும்போது அந்தளவு…
Read More
சர்ப்ரைஸ் தரும் அதோ முகம் !!

சர்ப்ரைஸ் தரும் அதோ முகம் !!

  புது முகங்களின் உருவாக்கத்தில் வந்திருக்கும் திரில்லர் திரைப்படம் ரீல் பெட்டி தயாரிப்பில் தயாரித்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, சைதன்யா பிரதாப், அனந்த நாக், கவுரவத் தோற்றம் அருண் பாண்டியன் நடிப்பில் சுனில் தேவ் எழுதி இயக்கி இருக்கும் படம். தமிழில் தெளிவான திரைக்கதை உடன் திரில்லர் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்காகவே வந்திருக்கும் படம் அதோ முகம். மிக சிம்பிளான ஒரு கதையை எடுத்துக்கொண்டு, அதற்கு மிக அட்டகாசமான ஒரு திரைக்கதை வடிவத்தை தந்து, இறுதிவரை நம்மை பரபரப்புக்கு உள்ளாக்கி, சுவாரசியமாக சீட்டு நுனியில் உட்கார வைத்து, ஒரு அழகான படைப்பை தந்திருக்கிறார்கள் இந்த புதுமுகங்கள். கதை மிகச் சின்ன கதை காதலால் ஒன்று சேர்ந்து வாழும் ஒரு தம்பதி. தன் மனைவியை சர்ப்ரைஸ் செய்வதற்காக போராடுகிறான் கணவன். அவளுக்கு சர்ப்ரைஸ் தர வேண்டி, அவளது ஃபோனில் அவளுக்கே தெரியாமல் கேமரா ஆப் இன்ஸ்டால் செய்து அவளை கண்காணிக்க…
Read More
ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

ஆக்சன் விருந்து தருகிறதா இந்த ஜோஷ்வா ?

இயக்கம்: கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர்கள் : வருண், ராஹேய், கிருஷ்ணா, மன்சூர் அலி கான், டிடி நீலகண்டன், யோகி பாபு, விசித்ரா பல வருடக் காத்திருப்புகளுக்கு பின்னர் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது ஜோஷ்வா இமை போல் காக்க. தமிழில் ஒரு ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் படம். இதுவரையிலும் முன்னணி நடிகர்களை மட்டுமே இயக்கி இருக்கும் கௌதம் மேனன் இயக்கத்தில், அறிமுக நடிகரான வருண் நடிப்பில் வெளிவந்திருக்கிறது இப்படம். கிட்டத்தட்ட ஐந்து வருடமாக தயாரிப்பில் இருந்து படம் வெளியாகி இருந்தாலும், ரசிகர்களிடம் ஓரளவு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் இந்த படத்தின் கதையை தெளிவாக சொல்லிவிட்டது. ஹீரோயினை காக்க மொத்த எதிரிகளுடன் ஹீரோ மோதுவது தான் கதை. இதுபோன்ற கதைகள் ஹாலிவுட்டில் அதிகம் வரும். ஆக்சனுக்கு அதிகம் மதிப்பு கொடுத்து, கதையை கொஞ்சமாக சொல்லி, முழுக்க முழுக்க சண்டை காட்சிகளுடன் படமாக்கும் படங்கள், சண்டை காட்சி…
Read More
பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் நடிகர் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. ஜீவி பிரகாஷ், ஷிவானி ராஜசேகர், பசுபதி, ஸ்ரீநாத்பாஸி, லிங்கேஷ், விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இயக்குனர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அகிரன் மோசஸ் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது பா.இரஞ்சித் படப்பிடிப்பை துவக்கி வைத்தார். இயக்குனர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். படத்திற்கு ஒளிப்பதிவு- ரூபேஷ் சாஜி, படத்தொகுப்பு- செல்வா RK. கலை- ரகு, சண்டைப்பயிற்சி- ஸ்டன்னர் சாம். உடைகள் - சபீர் நிழல்படம் - Rs ராஜா PRO- குணா.
Read More
தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ! ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகர்ஜூனா!

தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் ! ‘ரெக்கார்ட் பிரேக்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் நாகர்ஜூனா!

நடிகை ஜெயசுதா மகன் நிஹார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெக்கார்ட் பிரேக்' படம் எட்டு மொழிகளில் எட்டுத் திக்கும் மார்ச் 8 அன்று வெளியாகிறது...இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரிப்பில் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் 'ரெக்கார்ட் பிரேக்'. மார்ச் 8 அன்று இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், நடிகர் நாகர்ஜூனா பேசியதாவது , "இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்" என்றார். நடிகை ராக்தா பேசியதாவது , " நான் முதல் முறையாக சென்னைக்கு வந்து இருக்கிறேன். இந்த படம்…
Read More
குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ !!

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் ‘ஜெ பேபி’ !!

குடும்ப உறவுகளின் அழகான கதையை சொல்லும் 'ஜெ பேபி' . மகளிர் தினத்தில் வெளியாகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிகை ஊர்வசி , தினேஷ் , மாறன் நடிப்பில் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று வெளியாகவிருக்கும் படம் ஜெ பேபி. பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இதுவரை வெளிவந்த படங்கள் சமூக கருத்துக்களை உள்ளடக்கிய படங்களாகவே வெளிவந்திருக்கிறது. 'ஜெ பேபி ' படம் குடும்ப உறவுகளைப்பற்றி பேசுகிற படமாகவும், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஜெ பேபி திரைப்படத்தின் சிறப்புக்காட்சி சமீபத்தில் திரைத்துறையினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைவரும் படக்குழுவினரையும் படத்தின் இயக்குனர் சுரேஷ் மாரி, படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித் இருவரையும் வெகுவாக பாராட்டியுள்ளனர். குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம் , சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். படம் பார்க்க தியேட்டர் வருபவர்கள் அவசியம் தங்களது அம்மாக்களையும் அழைத்து வாருங்கள். இது எல்லோருக்குமான படம் என்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. 'ஜெ பேபி' படத்தை…
Read More
ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு ஜோஷ்வா செம விருந்தாக அமையும்” – நடிகர் வருண்!

  நடிகர் வருண் தனது திரை இருப்பைப் பொருட்படுத்தாமல் பலவிதமான கதாபாத்திரங்களை அச்சமின்றி ஏற்று, தனது கடின உழைப்பை ஒவ்வொரு படத்திலும் கொடுத்துள்ளார். ஒரு ரொமாண்டிக்கான கதாபாத்திரம், பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடிப்பது என்ற நிலையில் இருந்து தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய அவரது வரவிருக்கும் திரைப்படமான 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படத்தில் அவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படம் மார்ச் 1, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ள நடிகர் வருண், "கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில்தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான…
Read More
சிவகுமார் சால்வை விவகாரம் உண்மை என்ன?

சிவகுமார் சால்வை விவகாரம் உண்மை என்ன?

சிவக்குமார் சால்வையை வீசி எறிந்தது இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் ஒரு பரபரப்புக் காட்சிக்கு ஒரு வீடியோ கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தியாக்கிக் கொள்ளலாம் என்ற அரை வேக்காட்டு மீடியா உலகை என்ன என்று சொல்வது? காரைக்குடி நடந்த பழ.கருப்பையா புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் திரு. சிவகுமார். நிகழ்ச்சியில் திரு. பழ. கருப்பையாவைப் பாராட்டிப் பேசியவர், அவரின் செயற்கரிய செயல் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் காலைத் தொட்டு வணங்கியும் இருக்கிறார். இப்படியானவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் போது ஒரு பெரியவர் சிவகுமாரை மறித்து சால்வை அணிவிக்க முற்பட்டுள்ளார். அதை சட்டென்று பறித்து, 'எனக்கு சால்வை போடறதே பிடிக்காதுன்னு தெரியும்ல'ன்னு பக்கத்தில் இருந்தவரிடம் உணர்ச்சி மேலிட விசிறியிருக்கிறார் சிவகுமார். இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர்கள். யாரிடமும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உடனே இதை பரபரப்புச் செய்தியாக்கி உள்ளனர். எப்படி என்றால், ஒரு வயதான ரசிகர் சால்வை…
Read More