புதிய தயாரிப்பாளர் சங்கத்தை பாரதிராஜா கலைக்க வேண்டும்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியின்றி தேர்வு செய்ய தயார்

தயாரிப்பாளர்கள் கூட்டாக பேட்டி

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய

தயாரிப்பாளர் சங்க முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் :

பாரதிராஜாவால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தயாரிப்பாளர் சங்கம் என்பது தாய் வீட்டை பிரிக்கும் செயல். 4 ஆயிரம் உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த தயாரிப்பாளர் சங்கத்தில் 1500க்கும் மேற்பட்டோருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. இந்நிலையில் ஒருசிலர் சுயநலத்திற்காக நமது சங்கம் பிளவு படுவதை ஏற்க முடியாது என தெரிவித்தார்..

தயாரிப்பாளர் வி.சேகர்

புதிய சங்கத்தை உருவாக்க நிச்சயம் ஒரு காரணம் அவசியம் வேண்டும், ஆனால் தற்போது தமிழ் சினிமா ஸ்தம்பித்து உள்ள நிலையில் புதிய சங்கம் துவங்குவது, தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும். எனவே பாரதிராஜா புதிய சங்கம் துவங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவருடன் உள்ளவர்களும் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

தயாரிப்பாளர் கே.ராஜன்

தற்போதைய சங்கத்தால் பாரதிராஜா, உள்ளிட்டவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என தெரியவில்லை. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் சங்கம் தற்போது நஷ்டத்தில் இருக்கும்போது, புதிதாக ஒரு சங்கத்தை உருவாக்குவது என்பது நியாயமானது இல்லை
தற்போது அரசு தான் தயாரிப்பாளர் சங்கத்தை நடத்தி வருகிறது.இந் நிலையில் குற்றச்சாட்டு ஏதேனும் இருந்தால் செய்தித்துறை அமைச்சரை சந்தித்து அனைவரும் பேசுவோம்.கொரோனா காலத்தில் எடுத்த படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர் கள் தவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் அனைவரையும் பாரதிராஜா வழிகாட்ட வேண்டும் –

தயாரிப்பாளர் கமீலா நாசர்

புதிய சங்கம் உருவாக்குவது பெரிய விஷயம் இல்லை. ஆனால் அனைவருக்கும் முன்னோடியாக உள்ள பாரதிராஜா புதிய சங்கம் உருவாக்குவது என்பது வருத்தம் அளிக்கிறது. தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள இந்த நிலையில் புதிய சங்கம் ஏன் உருவாக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.
எங்கள் வீட்டு பெண்களை நாங்கள் பொது சேவைக்கு அனுப்புவது இல்லை என பாரதிராஜா கூறியது வருத்தம் அளிப்பதாக கமீலா நாசர் கூறினார். மேலும் புதுமை பெண் எடுத்த பாரதிராஜா அவ்வாறு கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கலைப்புலி தாணு

“எம்.ஜி.ஆர். ஜெயலலிதா காலத்தில் தொடங்கிய சங்கம் தான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போதைய சூழலில் பாரதிராஜா தவறு செய்யவில்லை அவருடன் இருந்த 4 பேர் இந்த சூழலுக்கு அவரை தள்ளி உள்ளனர் என்ற அவர் பாரதிராஜா வந்தால் தலைவர் பதவிக்கு போட்டியின்றி அவரை தேர்ந்தெடுக்கலாம் அவர் மீது அவ்வளவு மரியாதை வைத்துள்ளோம் உங்கள் காலில் விழுந்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை நாம் ஒன்றாக இருப்போம்” என தெரிவித்தார்..