தீவிரமான திட்டமிடுதலே ஒரு இலக்கை அடைவதற்கான மிகச்சரியான வழிமுறை. முக்கியமாக சினிமாவிற்கு இதுபொருந்தும். குறிப்பாக யோகிபாபுவின் “கூர்கா” திரைப்படத்தை நிலையான வேகத்தில் , சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தனர்.
” இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். குறிப்பாக உதவி இயக்குனர்கள் செய்த அயராத உழைப்புக்கு எனது மனமார்ந்த நன்றி. “கூர்கா” கதையின் தொடர்ச்சியை அதிகமாக நம்பியிருந்ததால், அதை அவர்கள் மிகவும் கச்சிதமாக கடைப்பிடித்தனர். நடிகர்கள் யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா ,மற்றும் அனைத்து நடிகர்களும் நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிக சிறப்பாக அளித்தனர். தற்பொழுது இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் கூர்கா , கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்” என்றார் படத்தின் இயக்குனர் சாம் ஆன்டன்.
காமெடி மற்றும் action கலந்த திரைப்படமாக வளரும் “கூர்கா”, ஒரு கடத்தப்பட்ட காரை , ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே மையக்கரு.
சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை, தனது நண்பர்களோடு இணைந்து “4 மங்கீஸ்” ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். ராஜ் ஆர்யன் இசையமைக்க , கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பை கவனிக்கிறார் .
Related posts:
பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை'.May 3, 2022
கொரோனா தொற்றை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள முடக்கறுத்தான்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!December 27, 2023
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் தயாரான படம் ஷூட்டிங் முடிந்தது!February 15, 2019
வீரமே வாகை சூடும் எப்படி இருக்கிறது ?-திரைவிமர்சனம்February 5, 2022
"ஒண்டிக்கட்ட" திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது!May 24, 2018