ஹன்சிகா பிறந்த நாள் கொண்டாட்டம்!

ஹன்சிகா பிறந்த நாள் கொண்டாட்டம்!

தமிழ் சினிமா ரசிகர்களின் 'டார்லிங்' என அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி இன்று தனது பிறந்தநாளை, விமர்சையாக இல்லாமல் , தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடி உள்ளார். காலையில் தன் தாயார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பிறகு தான் தத்தேடுத்து வளர்க்கும் ஆதரவற்ற குழந்தைகளோடு தனது பிறந்தநாள் பரிசுகளையும் கேக்குகளையும் பகிர்ந்துள்ளார். ''பகிருதலில் இருக்கும் சந்தோஷம் எதிலும் இல்லை. சின்ன வயதிலிருந்தே பகிரும் எண்ணத்தையும் பழக்கத்தையும் எனது தாயார் எனது மனதில் பதித்தார். எனக்கு கிடைத்துள்ள பரிகளையும் கேக்குகளையும் இந்த குழந்தைகளுடன் பகிர்வதில் எனக்கு கிடைக்கும் அளவற்ற சந்தோஷம் எனது பிறந்த நாளை மேலும் சிறப்பிக்கும். ''சந்தோஷமாய் இருப்பது, எளியோர்க்கு உதவுவது மற்றும் ஒழுக்கம் கடைபிடிப்பது'' என்ற எனது வாழ்க்கை தீர்மானத்தை இந்த வருடமும் பிறந்தநாள் தீர்மானமாக பின்பற்றவுள்ளேன்'' என புன்னகையுடன் கூறினார் ஹன்சிகா.
Read More
வேலையில்லா பட்டதாரி 2 – அப்டேட் ரிப்போர்ட்!

வேலையில்லா பட்டதாரி 2 – அப்டேட் ரிப்போர்ட்!

'வேலையில்லா பட்டதாரி' என்னும் விஐபி படத்தின் ஸ்கோர் செய்த நடிகர் தனுனுக்கு அந்தப் படத்தின் வெற்றியே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுத வைத்ததாம். தனுஷின் கதை மற்றும் வசனத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் மற்றும் பாடல் என அனைத்தும் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது படத்தின் இயக்குநர் சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்துக்காக நடிகை கஜோலை பாலிவுட் சினிமாவிலிருந்து அழைத்து வந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இந்தப் படத்தில் கஜோல் நடித்திருப்பதால் படத்துக்கான அதிர்வு ரசிகர்களிடம் அதிகமாகவே காணப்படுகிறது. அத்துடன் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் நடித்த அமலா பால், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி ஆகியோர் இந்தப் படத்திலும் தொடர்ந்துள்ளனர். விஐபி-2 திரைப்படத்தின் புரமோஷன்களும், டிக்கெட் முன்பதிவும் முழுவேகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தமிழ் சினிமாவை  கொஞ்சம் பாதித்ததாக சிலர் சொல்கிறார்கள், ஆனால்  நேற்று அபிராமி ராமநாதன் ஒரு…
Read More
ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

ஆகஸ்டில் வெளிவர இருக்கும் ‘ களத்தூர் கிராமம்’!

கிராமம் அதன் மண் , மக்கள் வாழ்க்கையைப் பற்றி செயற்கைப் பூச்சின்றி சொல்லப்பட்ட கதைகள் தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்றுள்ளன. அவ்வரிசையில் இடம் பெறும் வகையில் உருவாகி யுள்ள படம் தான் 'களத்தூர் கிராமம்' . இப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ​​சரண் கே. அத்வைதன். ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ளார்.​ டட்டூ சினிமா ஆரூர் சுந்தரம் தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடுகிறார்​. கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர 'தகராறு  'சு​லீ​ல்​ குமார்​, அஜய் ரத்னம் , தீரஜ் ரத்னம்ர​, ​​ஜினி மகா தேவ​ய்​யா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை என்ன? இது ஒரு புறக்கணிக்கப்பட்ட கிராமத்தின் கதை என்று கூறலாம். அந்தக் கிராமத்தைப் போலீஸ் வஞ்சிக்கிறது. இதனால் அவ மதிப்பும் ஏமாற்றமும் புறக்கணிப்பும் அனுபவிக்கிற மக்கள் போலீசை எதிர்க்கிறார்கள் .…
Read More
‘நம்ம விவசாயம்’ டீம்’ நடத்த போகும் ரியல் பிக் பாஸ்!

‘நம்ம விவசாயம்’ டீம்’ நடத்த போகும் ரியல் பிக் பாஸ்!

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் 'நம்ம விவசாயம்' என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாக்கியிருக்கிறார்கள். சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடல் மற்றும் காட்சி தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இந்த அமைப்பின் அடுத்தடுத்த திட்டங்களை பற்றிய ஒரு அறிமுகமும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் பேசிய பாடலாசிரியர் கிருதயா, “நம்தமிழ்நாட்டில் குறு விவசாயிகள் மட்டும் 82 சதவீதம் இருக்கிறார்கள். சொந்த முயற்சியில் அரசின் ஆதரவு இல்லாமலேயே விவசாயம் செய்து வருகிறார்கள். அரசின் மானியமும் கிடைப்பதில்லை. நம்ம விவசாயம் சார்பில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விவசாயத்தையும், விவசாயிகளையும் ஆதரிப்போம் என்றார் ஷங்கர். விவசாயம் அரசியல் ஆக்கப்பட்டு விட்டது. மூன்று போகம் விளையக்கூடிய தஞ்சையில், யாரும் காசு கொடுத்து அரிசி வாங்கியதே இல்லை. ஆனால் தற்போது நிலைமை தலை கீழ். தஞ்சையில் இருந்த ஆறுகள் கூட இல்லை. அமெரிக்க ஏகாதிபத்தியம் கியூபாவை அழிக்க,…
Read More
அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர்  சிவா அப்செட்!

அஜித் சாருக்கு சிலையா? -இயக்குநர் சிவா அப்செட்!

திருநெல்வேலி மற்றும் கும்பகோணத்தில் அஜித்துக்கு சிலை அமைக்க, அவருடைய ரசிகர்கள் அடிக்கல் நாட்டியுள்ளார்கள். மேலும், அஜித் சிலையின் புகைப்படங்களும் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக "அஜித்துக்கு சிலை வைப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறதே. இது குறித்து அஜித்திடம் ஏதேனும் பேசியுள்ளீர்களா" என இயக்குநர் சிவாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, "அஜித் சாருக்கு இது சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சார் எப்போதும் சொல்வது ஒன்று தான். அம்மா, அப்பா, பார்க்கும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்றது அனைத்துமே. நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருந்து ஒரு சில நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு போய் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் ஜெயிப்பது மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கும்.…
Read More
விஜய் நடித்து வரும்  ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ – ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்!

அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தில் எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப் படத்துக்கு இன்னும் சுமார் 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஒரே ஒரு பாடல் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டியதுள்ளது. இதனால் ஜூலை 31-ம் தேதி நடத்த படப்பிடிப்பின் போது, படக்குழுவினர் அனைவருக்கும் தங்க நாணயத்தை பரிசாக அளித்துள்ளார் விஜய். விரைவில் இறுதிக்கட்டக் படப்பிடிப்பையும், பாடல் படப்பிடிப்பையும் தொடங்க திட்டமிட்டு வருகிறது படக்குழு. அனைத்துப் பாடல்களையும் ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்துவிட்டார். இறுதிக்கட்டப் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பாக, படத்தின் எடிட்டிங் பணிகளை முடித்து ஏ.ஆர்.ரஹ்மானிடம் பின்னணி இசைக்கு அளிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். அண்மையில் பிரமாண்ட வெற்றிகண்ட ‘பாகுபலி’ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் இவர்தான். தற்போது அட்லீ…
Read More
கதிர்  – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ !

கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் “ சத்ரு “ !

போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட்  பட நிறுவனம் சார்பில்   ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன்  ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் “ சத்ரு “ இந்த படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி,பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கீயன், சாது, குருமூர்த்தி, பாலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராட்டினம் படத்தில் நடித்த லகுபரன் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார்.     ஒளிப்பதிவு   -   மகேஷ் முத்துசாமி இசை  -  அம்ரிஷ் பாடல்கள்   -  கபிலன், மதன்கார்க்கி, சொற்கோ எடிட்டிங்   -  பிரசன்னா.ஜி.கே கலை  -  ராஜா மோகன் ஸ்டன்ட்   -  விக்கி தயாரிப்பு   -  ரகுகுமார் என்கிற திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நவீன் நஞ்சுண்டான்   இந்த படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்... இது ஒரு ஆக்‌ஷன் திரில்லர் படம் இது. 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்.  ஒவ்வோர் ரசிகனும் சீட்…
Read More
2019-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?

2019-ல் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்?

ஆக்‌ஷன், திரில்லர், ரொமாண்ஸ், புதிய தொழில்நுட்பம் என அனைத்து அம்சங்களும் கலந்து ஹாலிவுட் ஜனரஞ்சக படமாக ஜேம்ஸ்பாண்ட் படங்கள் அமைந்து இருக்கும். ஐயன் பிளம்மிங் என்ற பிரிட்டீஷ் எழுத்தாளர் எழுதிய 'தி ஜேமஸ் பாண்ட்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படங்கள் உருவாகி வருகின்றன. மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற நடிகர்களில் ஒருவர் ஜேம்ஸ் பாண்டாக தேர்வு செய்யப்ப டுவார். அந்த நடிகரின் நடிப்பில் இரண்டும் அல்லது அதற்கு மேற்பட்ட ஜேமஸ்பாண்ட் படங்கள் உருவாகி வெளியாகும். அந்த வகையில் தற்போதைய ஜேம்ஸ் பாண்டாக அமெரிக்க நடிகர் டேனியல் கிரேக் திகழ்கிறார். இவர் கடந்த 2006-ஆம் வெளியான 'கேசினோ ராயல்' படம் மூலம் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திர த்தில் நடிக்கத் தொடங்கினர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜேம்ஸ்பாண்டாக வலம் வரும் கிரேக், பாண்ட பட வரிசையின் 25-வது படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத்…
Read More
தமிழிலும்  வரும் (மலையாள ) ”சோலோ”!

தமிழிலும் வரும் (மலையாள ) ”சோலோ”!

எதிர்பாராத ஒரு கூட்டணி அமைந்து அதன் மூலம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்குவது தமிழ் திரை உலகில் ஏராளம்.கடந்த காலத்தில் இதற்கு சான்றாக பல படங்கள் அமைந்து உள்ளன. பாலிவுட்டின் திரைக்கதை எழுத்தாளரும், தமிழில் வெளிவந்த 'டேவிட்' மற்றும் ஹிந்தியில் வெளிவந்து பேராதரவு பெற்ற 'ஷைத்தான்', அமிதாப் பச்சன் நடித்த "வாசிர்" படங்களை இயக்கி இளைய இயக்குனர்களில் கவனிக்கத்தக்கவர் என்று இந்திய திரை உலகம் போற்றும் பெஜோய் நம்பியார். இவர் தற்பொழுது, இளைய தலைமுறையின் தற்போதைய கனவு நாயகனான துல்கர் சல்மானுடன் இணையவுள்ளார். இந்த கூட்டணி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது. இப்படம் குறித்து பெஜாய் நம்பியார் பேசுகையில், ''துல்கர் சல்மான் போன்ற அபரிமிதமான நடிப்பு திறன் கொண்ட ஒரு நடிகருடன் பணிபுரிய ஆவலோடு இருந்தேன். இக்கதையை அவருக்கு கூறியபொழுது, அவரை அது மிகவும் கவர்ந்தது. இருவரும் இணைந்து பணிபுரிய முடிவு செய்தோம். இப்படத்திற்கு 'சோலோ' என பெயரிட்டுள்ளோம். படப்பிடிப்பு…
Read More