தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து!

தியாகம் தோற்றதாக வரலாறே இல்லை – நெடுநல்வாடை படம் பற்றி வைரமுத்து!

"நெடுநல்வாடை" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வடபழனி கமலா தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழா வழக்கமாக நடைபெறும் சினிமா விழாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் என்று யாரும் இல்லாமல் புதுவிதமாக நடைபெற்றது எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்தப்படம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக, 50 நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 50 பேர்களும் சேர்ந்து படத்தில் பணியாற்றியவர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அவர்களே பாடல்களை வெளியிட்டது புதுமையாக இருந்தது.மேலும், பாடல்களைக் கேட்ட பொதுமக்களையே மேடையேற்றி அவர்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள வைத்தது ஆச்சர்யமான நிகழ்வாக இருந்தது. வழக்கமாக பிரபலங்கள் வெளியிட்டு பாடல்கள் மக்களைச் சென்றடையும். ஆனால், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மூலமாக, பிரபலங்களைச் சென்றடைந்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.சினிமா வட்டாரத்தில் இந்தப் படத்தின் பாடல்களும், அதை வெளியிட்ட விதமும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. படத்தையும், பாடல்களையும் பற்றி கவிப்பேரரசு வைரமுத்து பேசியதாவது: தலைப்புப் பஞ்சம் பிடித்து ஆட்டுகிறது தமிழ் சினிமாவை. தமிழில் பேர்…
Read More
துருவ நட்சத்திரம் படக்குழுவுக்கு வந்த சோதனை!

துருவ நட்சத்திரம் படக்குழுவுக்கு வந்த சோதனை!

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், டிடி உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்து வருகிறார். கவுதம் மேனின் ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தொடங்கியது. அடுத்ததாக இதன் படப்பிடிப்பு குன்னூர் மற்றும் பல்கேரியா, ஜார்ஜியா போன்ற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. அடுத்ததாகப் படத்தின் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க துருக்கி செல்வதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இதற்க்காக ஜார்ஜியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்குப் பயணம் செய்த படக்குழுவைத் துருக்கி எல்லையில் தடுத்து நிறுத்தி விட்டனர். உடனே இது குறித்து கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “கடந்த 24 மணி நேரமாகத் துருக்கி எல்லையில்…
Read More
இசை அமைப்பாளர் தரன் தன் தோழி தீக்‌ஷிதாவை கல்யாணம் செய்துக்க போறார்!

இசை அமைப்பாளர் தரன் தன் தோழி தீக்‌ஷிதாவை கல்யாணம் செய்துக்க போறார்!

தமிழ் திரையுலகில் தனது தனித்துவமான இசையால், நல்ல ஒரு இடத்தை பிடித்திருக்கும் இசையமைப்பாளர் தரண். பாரிஜாதம், போடா போடி, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் என நல்ல தரமான இசையை வழங்கிய தரன் இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆஹா கல்யாணம் படத்துக்கு இசையமைத்த தரண், கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணையவிருக்கிறார். சென்னையை சேர்ந்த  மாடல் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் தன் நீணட நாள் தோழியுமான  தீக்‌ஷிதாவை வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி மணக்கிறார். திருமண வரவேற்பு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. அவரும், மணப்பெண் தீக்‌ஷிதாவும் தங்களது திருமணம் குறித்து மனம் திறந்து பேசினர். தரண் கூறும்போது, “நான் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை 25 படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சமீபத்தில் தான் என் 25வது படமான பிஸ்தா படத்தின் இசைக் கோர்ப்பை முடித்தேன். என் எல்லா தருணங்களிலும் என் குடும்பம் எனக்கு…
Read More
விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”!

விஷாலை உற்சாகப்படுத்திய “தலைவன் வருகிறான்”-“விஷால் ஆன்தம்”!

விஷால் ஆன்தம் குழுவினரை சந்தித்து பாராட்டினார் விஷால். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமாகிய நடிகர் விஷாலின் பிறந்தநாள் கடந்த ஆகஸ்டு மாதம் 29ம் தேதி கொண்டாடப்பட்டது. விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு "தலைவன் வருகிறான்" என்ற “விஷால் ஆன்தம்“ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. விஷாலின் அரசியல் வருகைக்கான முன்னறிவிப்பு தான் இந்த விஷால் ஆன்தம் என்றும் பேசப்பட்டது. “நேசம் கொண்ட தலைவன் வந்தான், நெஞ்சே நிமிர்ந்து நில்லு, நெருப்பைப் போல தீமை எரிக்கும் நேர்மை இவன்தான் சொல்லு வீரம் பாதி ஈரம் பாதி வெல்லும் எங்கள் விஷால் நீதி…” என்ற வரிகளுடன் அமைந்த இந்த பாடலை “கொலை விளையும் நிலம்” ஆவணப்படத்தை இயக்கிய க.ராஜிவ்காந்தி இயக்கி விஷாலுக்கு பிறந்த நாள் பரிசாக அளித்தார். இஷான் தேவ் இசையில் முருகன் மந்திரம், பாடல் வரிகளை எழுதி இருந்தார். நிகில் மேத்யூ, இஷான் தேவ் பாடி இருந்தனர். ஒளிப்பதிவு…
Read More
ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது

ஓம் புரியின் வாழ்க்கையைச் சொல்லும் படம் தயாராகவுள்ளது

இந்தியா, பாகிஸ்தான், பிரிட்டிஷ் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்து பிரபலமாவர். 1980 ஆண்டு வெளியான 'ஆக்ரோஷ்' படத்தின் தனது அபாரமான நடிப்பால் பல்வேறு விருதுகளை வென்றார். 1982ம் ஆண்டு உருவான 'காந்தி' படத்தில் சிறுகதாபாத்திரத்தில் நடித்தவர். உலகளவில் பிரிட்டிஷ் படங்களான 'My Son the Fanatic', 'East is East', 'The Parole officer' உள்ளிட்டவற்றில் நடித்து அறியப்பட்டவர். அப்படங்களைத் தொடர்ந்து 'City of Joy', 'The Ghost and the Darkness' போன்ற ஹாலிவுட் படங்களில் ஜாக் நிக்கேல்சன், வால் கில்மர், டாம் ஹாங்க்ஸ், ஜுலியா ரோபட்ஸ் உள்ளிட்ட நடிகர்களோடு நடித்துள்ளார்.பல்வேறு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார் ஓம் புரி, இந்தி படங்களில் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான், அக்‌ஷய்குமார் போன்ற நடிகர்களோடு நடித்துள்ளார்.…
Read More
‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

‘ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா! – விமர்சனம்

1980-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா. சிவப்பு மல்லி படத்தில் விஜயகாந்த் ஜோடியாக அறிமுகமானவர். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் பாரதி-வாசு ஜோடி இயக்கிய பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதில் அவர் சுரேஷ் ஜோடியாக நடித்தார். சின்ன முள் பெரிய முள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், அன்புள்ள மலரே, நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களில் நடித்தார். கொஞ்சம் பிசியாகவே இருந்த சாந்தி கிருஷ்ணா சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவரை அழைத்து வந்திருக்கிறார் மலையாள நடிகர் நிவின் பாலி. அவர் தயாரித்து, நடிக்கும் ஞண்டுகளூடே நாட்டில் ஓரிடவேளா படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். பெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் பிஜு படத்திற்கு பிறகு அவர் தயாரிக்கும் இரண்டாவது படம் இது தான். இப்படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக புதுமுக கதாநாயகி ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார்.…
Read More
ஆபாச இணையதளத்தின் பெயரில் உருவாகும் தமிழ்ப்படம் “எக்ஸ் வீடியோஸ்

ஆபாச இணையதளத்தின் பெயரில் உருவாகும் தமிழ்ப்படம் “எக்ஸ் வீடியோஸ்

ஆமாம் இது ஆபாசப் படம்தான் என்று தைரியமாகக் கூறுகிறார் "எக்ஸ் வீடியோஸ்" படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர். மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்கவேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது ."பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை," என்கிறார் இயக்குநர். "இந்த படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவு தான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளிஉலகத்துக்கு வந்தே தீரும் இதுவே படம் தரும் எச்சரிக்கை.’’ இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது…
Read More
அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லி விடவா’

அர்ஜுன் இயக்கத்தில் அவர் மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லி விடவா’

முதல்வன், ஜென்டில்மேன், ஜெய்ஹிந்த், ஜெய்ஹிந்த்-2 போன்ற தேசப்பற்றுமிக்க திரைப்படங்களின் நாயகன் ஆக்சன் கிங் அர்ஜுன், எழுதி, இயக்கி, தயாரிக்கும் திரைப்படம் “சொல்லிவிடவா” தீபாவளிக்குத் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாக-முக்கிய வேடத்தில் நடிக்க, தேசப்பற்றோடு காதலையும் சேர்த்து ஒரு புதிய பரிமாணத்தில் படைத்திருக்கிறார்.  தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இத்திரைப்படத்தில், ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு இணையாக புதுமுகம் சந்தன் குமார் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தின் கதைக்களம் வெகு சுவாரசியமானது. இதுவரை காணாத வகையில், ஒரு முற்றிலும் புதிய பின்னணியில் இந்த கதை பயணிக்கிறது. ஒரு ஆணும், பெண்ணும், தங்களுடைய வேலையில் உள்ள ஆபத்துகளையும், நெருக்கடிகளையும் தாண்டி, எப்படி தங்கள் காதல் வாழ்விலும் பயணிக்கிறார்கள் என்பதை பிரமிக்கும் வகையில் இத்திரைப்படம் வெகு நேர்த்தியாகப் படம்பிடித்து காட்டியிருக்கிறது. ஜனரஞ்சகமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், கதையின் தேவைகேற்ப பெரும் நட்சத்திரங்களான சுகாசினி, இயக்குனர் கே.விஸ்வநாத், பிரகாஷ்ராஜ், மற்றும் பலர் தங்களது இயல்பானப் பங்களிப்பின்…
Read More
ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

ஓவியா ஃப்ரீதான் – ஆனா அவர் படங்கள் ஸ்பீடா ரெடியாகுது!

தனியார் சேனல்  ஒன்று  தன் வளர்ச்சிக்காக தயாரித்து வழங்கி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலிருந்து நடிகை ஓவியா வெளிவந்ததிலிருந்து அந்நிகழ்ச்சியின் டி.ஆர்.வி. குறைந்து விட்டதாம். அதே சமயம் ஓவியாவுக்கு அடுத்தடுத்து  பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆனாலும், அவர் எந்தப் படங்களிலும் கமிட் ஆகாமல்  தவிர்த்து வருகிறார். இதனிடையே  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவர் நடித்த படங்கள் கிடப்பில் இருந்தன. தற்போது அவர் நடித்த படங்களை வெளியிட திட்டமிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது, மலையாளத்தில் அவர் நடித்த படங்களைத் தமிழில் டப் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் முதற்கட்டமாக அவர் நடித்த ‘மனுஷ்ய மிருகம்’ என்ற திரைப்படம் தமிழில் வெளிவரவிருக்கிறது. அப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே ‘ஓவியா ஆர்மி’ என அவரது ரசிகர்கள் எக்கச்சக்கமானோர் ஆதரவு தெரிவித்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடிகை ஓவியாவுக்கு…
Read More
பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் அருண் விஜய்!

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. இந்த ஒற்றை படம் மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் கவர்ந்தவர் பிரபாஸ். இதனால் பாகுபலி வெற்றிக்கு பின் அவரின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அடுத்ததாக சாஹோ என்கிற படத்தில் பிரபாஸ் நடித்து வரும் நிலையில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் இந்த படம் உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இந்த படத்தில் பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி வேடம் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். இந்த தகவலை அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். சாஹோ படத்தில் தாம் இணைவது தமக்கு பெரு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாஸ்-க்கு போலீஸ் அதிகாரி கெட்டப் என கூறப்படுவதால் அதற்கு இணையான வில்லன் கெட்டப்பில் அருண் விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
Read More