கலைமாமணி அவார்ட்டை குடுங்கய்யா! – சித்ரா லட்சுமணன் நினைவூட்டல்!

கலைமாமணி அவார்ட்டை குடுங்கய்யா! – சித்ரா லட்சுமணன் நினைவூட்டல்!

தமிழகத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்துறை கலைஞர்களைக் கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு வழங்கும் ‘கலைமாமணி’ விருதுகள் கடந்த 8 ஆண்டுகளாக யாருக்கும் வழங்கப்படாமல் உள்ளது. கலை, பண்பாட்டை வளர்ப்பதற் காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால் 1959-ம் ஆண்டில் இருந்து இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிவாஜி கணேசன், எம்ஜிஆர், கருணாநிதி, முரசொலி மாறன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், எம்.எஸ்.விஸ்வ நாதன், இளையராஜா உள்ளிட்ட 1,079 கலைஞர்களுக்கு இதுவரை கலைமாமணி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். கடைசி யாக கடந்த 2010 மே மாதம் நடந்த விழாவில் அனுஷ்கா, தமன்னா, ஆர்யா, திண்டுக்கல் ஐ.லியோனி உள்ளிட்ட 26 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, கடந்த…
Read More
விக்ரம் படத்தில் நடித்ததால் விளம்பர வெளிச்சம்! – பரவசப்படும் மாஸ் ரவி

விக்ரம் படத்தில் நடித்ததால் விளம்பர வெளிச்சம்! – பரவசப்படும் மாஸ் ரவி

தான் 'ஸ்கெட்ச் 'படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் 'ஸ்கெட்ச்.' இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர் மாஸ் ரவி. ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி. தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, " எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் .டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன். பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி…
Read More
சீதக்காதி – விஜய் சேதுபதி பட டைட்டிலுக்கு எதிர்ப்பு?

சீதக்காதி – விஜய் சேதுபதி பட டைட்டிலுக்கு எதிர்ப்பு?

விஜய் சேதுபதி நடிப்பில் 25-வது படமான 'சீதக்காதி' பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேடைக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கைப் பயணமாக இக்கதை அமைந்திருக்கும் எனக் கூறப்படுகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு நாயகிகள் கவுரவ தோற்றத்தில் நடித்துவரும் இப்படத்தில் இயக்குநர் மகேந்திரன், அர்ச்சனா, மெளலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக சரஸ்காந்த், இசையமைப்பாளராக கோவிந்த் பி.மேனன், எடிட்டராக கோவிந்த்ராஜ் உள்ளிட்ட பலர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 16 அன்று விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, பாலாஜி தரணிதரன் 'சீதக்காதி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனிடையே கடந்த 300க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தமிழகத்தில் செத்தும் கொடுத்த சீதக்காதி என்ற…
Read More
விமலின் இன்னொரு பக்கத்தை ‘மன்னர் வகையறா’வில் பார்க்கலாம்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்!

விமலின் இன்னொரு பக்கத்தை ‘மன்னர் வகையறா’வில் பார்க்கலாம்” ; இயக்குனர் பூபதி பாண்டியன்!

கமர்ஷியல் படங்களை நூறு சதவீதம் நகைச்சுவை கியாரண்டியுடன் தரக்கூடியவர் தான் இயக்குனர் பூபதி பாண்டியன். இவர் வசனங்கள் எழுதிய வின்னர், கிரி ஆகிய படங்களின் காமெடி காட்சிகள் தான் இப்போதும் டாப் டென் காமெடிகளில் இடம்பிடித்திருக்கின்றன. அதேபோல இவர் இயக்கிய தேவதையையை கண்டேன், திருவிளையாடல் ஆரம்பம், மலைக்கோட்டை உள்ளிட்ட படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் நகைச்சுவைக்கும் சரிவிகித முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அப்படிப்பட்டவரின் இயக்கத்தில் விமல் – ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம், வரும் ஜன – 26 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், சாந்தினி, கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திர பட்டாளத்துடன் கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தப்படம் குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குனர் பூபதி பாண்டியன். “மன்னர் வகையறா படம் தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ளது. மூன்று குடும்பங்களுக்குள் இருக்கும் வீரம், பாசம் இவற்றை…
Read More
விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

விக்ரம் வேதா படம் 100 வது நாள் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை!

புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.  விஜய் சேதுபதி – மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.  இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் – காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா’ படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பின்னால் உழைத்த ஒவ்வொருவரையும் மேடையில் அழைத்து நினைவுக் கேடயம் கொடுத்து சிறப்பித்தார்கள். படத்துக்கு டி.ஐ செய்தவர்கள் முதல் ப்ரிவியூவுக்குக் கேட்டபோதெல்லாம் தியேட்டர் கொடுத்தவர்கள் வரை அத்தனை பேரும் மேடையில் ஏற்றப்பட்டனர். அதிலும்  நடிகர் விஜய் சேதுபதி, கதிர் மற்றும் நடிகைகள் வரலக்ஷ்மி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்…
Read More
துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

துணை முதல்வர் ஓ பி எஸ்ஸிடம் ஆசி பெற்ற ஆதவ் கண்ணதாசன்

தமிழகத்தின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அண்மையில் திருமணம் செய்து கொண்ட கவியரசு கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். கவியரசு கண்ணதாசனின் பேரனும், கலைவாணன் கண்ணதாசனின் மகனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும், வினோதினி என்பவரும் கடந்த வாரம் சென்னையில் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் திருமண வரவேற்பும் நடைபெற்றது. இதன் போது தயாரிப்பாளர் எஸ் தாணு, இயக்குநர் கே பாக்யராஜ் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அத்துடன் தொல் திருமாவளவன், ஜி கே வாசன், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்த முன்னணி தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் ஆசிகளை மணமக்களுக்கு வழங்கினர். திமுகவின் செயல் தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் கன்னியாகுமரிக்கு பயணம் மேற்கொண்டதால் அவர் வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் துணை முதல்வர் ஓ…
Read More
செங்கல்பட்டை தாண்டி படம் கல்லா கட்டும் – ’கொடி வீரன்’

செங்கல்பட்டை தாண்டி படம் கல்லா கட்டும் – ’கொடி வீரன்’

பா.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு முத்தையாவின் படங்களும் முக்கியமானவை. 'கொடி வீரன்' அதற்கு விதிவிலக்கல்ல.  மைக்ரோ செகண்ட் கூட / ஒரு ப்ரேமில் கூட சைவ / வைணவ / சாக்த கடவுள்கள் எட்டிப்பார்க்கவில்லை. அது போலவே பூணல் அணிந்தவர்களும்.  மண் சார்ந்த தெய்வங்களை, வழிபாடுகளை, சடங்குகளை இப்படத்தில் முத்தையா ஆவணப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலிருந்தே பெண் கதாபாத்திரங்களுக்கு முத்தையா அழுத்தம் கொடுத்து வருகிறார். பெரும் ஆய்வுக் கட்டுரைக்கான புதையலின் வழியை எல்லா படங்களிலும் தூவி வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் 3 பெண்கள். மூவருமே அண்ணன் பாசமும், காதல் நேசமும் ஒருங்கே கொண்டவர்கள். என்றாலும் ஒருவருக்கொருவர் வேறுபடும் புள்ளிகள் தெளிவாக பதிவாகி உள்ளன. 1950, 60, 70களின் தென் தமிழக கிராமங்களை பாரதிராஜா டாக்குமெண்ட் + ரொமான்டிஸைஸ் செய்தார் என்றால் - 1980, 90, 2000ம் வருடங்களின் தென் மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சமூகப் பிரிவினரை முத்தையா 'ரா' ஆக பதிவு செய்து…
Read More
என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள்! அவ்வளவுதானே! – சிம்பு பேச்சு!.

என்னை நடிக்கவிடாமல் தடுப்பீர்கள்! அவ்வளவுதானே! – சிம்பு பேச்சு!.

ஜஸ்ட் நடிகனாக இருந்த சிம்பு தற்போது ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இப்படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா நடித்துள்ளார். மேலும் விவேக், சம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சேதுராமன் இயக்கியுள்ள இப்படத்தை விடிவி கணேஷ் தயாரித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 22ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானம், சிம்பு, தனுஷ், யுவன் சங்கர்ராஜா, இயக்குனர் ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷ் பாடல் சிடியை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்ட தனுஷ் பேசியதாவது, “இந்த விழாவிற்கு சிம்பு அழைப்பு விடுத்ததாலேயே வந்தேன். நான் விழாக்களுக்கு அழைப்பு விடுத்தால் அவரும் வருவார். அவரும் நானும்…
Read More
விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

விஜய் ஆண்டனியோட ‘அண்ணாதுரை’ பட பாடல்களை இலவசமா டவுண்லோட் செய்ய அனுமதி!

புதுமைக்கும் சுவாரஸ்யமான விஷயங்களுக்கும் பெயர் போனவர் விஜய் ஆண்டனியும் அவரது படங்களும். அவரது 'சைத்தான்' படத்தின் முதல் பத்து நிமிடங்களை பட ரிலீசுக்கு முன்பே வெளியிட்டு புது விளம்பர யுக்தியை கையாண்டு வெற்றிபெற்றவர் விஜய் ஆண்டனி. அவரது அடுத்த படமான 'அண்ணாதுரை' யில் அவருக்கு ஜோடியாக டயானா சம்பிகா மற்றும் மஹிமா நடித்துள்ளனர். இப்படத்தை G ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா இன்று  -நவம்பர் 15 ஆம் தேதி கோலாகலமாக நடக்கவுள்ளது. 'அண்ணாதுரை' படத்திலும் ஒரு சுவாரஸ்யமான விளம்பர யுக்தியை விஜய் ஆண்டனி கையாளவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியான நிமிடமே விஜய் ஆண்டனியின் வலைத்தளமான 'www.vijayantony.com ' மில் இப்பட பாடல்களை மக்கள் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம். ஒரே கிளிக்கில் ஒரிஜினல் தரத்தோடு டவுன்லோட் செய்து கொண்டு ரசிகர்கள் இப்பாடல்களை ரசிக்கலாம். இந்த யுக்தியை தமிழ் சினிமா வரவேற்று உள்ளது. இது பலருக்கு முன்மாதிரியாக இருக்கும் என…
Read More
அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

அமலா பால் பென்ஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு?

பிரபல நடிகை அமலா பால் போலி முகவரி கொடுத்து புதுச்சேரியில் தனது பென்ஸ் காரை பதிவு செய்து வரி ஏய்ப்பு செய்ததாக நடிகை அமலா பால் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி சென்னை டிரான்ஸ் கார் நிறுவனத்தில் இருந்து ஏ கிளாஸ் வகை பென்ஸ் காரை ஒன்றை ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.இந்த காரை புதுச்சேரி முகவரி ஒன்றை கொடுத்து அந்த மாநிலத்தில் இருந்து பதிவு எண் பெற்று நடிகை அமலா பால் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரி முகவரி என்று நடிகை அமலா பால் கொடுத்தது போலி முகவரி என்று தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் அமலா பால் கொடுத்த முகவரியில் தங்கியிருக்கும் கல்லூரி மாணவர் தனக்கும் அமலா பாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரி…
Read More