தம்பி – எல்லோருக்கும் பிடிக்கும்!

தம்பி – எல்லோருக்கும் பிடிக்கும்!

தம்பி – இந்த வார்த்தைக்கென தமிழகத்தில் தனி மதிப்புண்டு. சகோதரர்களில் கடைக்குட்டியை மட்டுமே  தம்பி என்பது குறிப்பிட்டாலும் உறவு முறை இல்லாத இளையவர்களை விளிக்க உதவும் சொல்லும் இதுவே. அந்த வகையில் தமிழக அரசியலில் இந்த தம்பி என்று வார்த்தைக் கென தனி மதிப்புண்டு. அதிலும் திராவிட அரசியலில் அமோக வரவேற்பு பெற்ற இந்த தம்பி என்னும் தலைப்பில் குடும்பப் பாசத்தையும், அரசியலையும் சம அளவில் சேர்த்து போதுமான அளவு சமூக பொறுப்பு, அக்கறை, நாட்டு நடப்பு, குரோதம், மோசடி, த்ரில்லிங் போன்ற மசாலாக்களை போட்டு நான் வெஜ் சினிமா ஒன்றை ஜோதிகா & கார்த்தி மற்றும் சத்யராஜ் வழியாக வழங்கி இருக்கிறார் ஜீத்து ஜோசப். அரசியல்வாதியாக காலம் தள்ளும் சத்யராஜ் அவர் மனைவி சீதா. இவர்களின் மகள் ஜோதிகா. மகன் கார்த்தி. இதில் கார்த்தி ஸ்கூல் வயசிலேயே போதைக்கு அடிமையாகி, பிரச்னைக்குள்ளாகி 15 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய்விடுகிறான். அந்த…
Read More
ஹீரோ – அவசியம் பார்க்க வேண்டியவன்தான்!

ஹீரோ – அவசியம் பார்க்க வேண்டியவன்தான்!

உலக மயமாக்கலுக்குப் பின்னர், எல்லா வகையான செயல்களும் உலகளவில் நிலைப்படுத்தப் பட்டு வருகின்றன. தரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கல்வித்துறை மட்டும் நமது நாட்டில் பின்தங்கியே இருக்கிறது என்பது வேதனைதான். ஏகப்பட்ட வேறுபாடுகளும், சூழல்களும் நிறைந்த நம் நாட்டில் உள்ள மாநில அரசுகளின் முரண்பட்ட கல்விக்கொள்கைகள் ஒரு விசித்திரமான சூழலையே ஏற்படுத்தியுள்ளது. கலாச்சார மாற்றம் கல்வியோடு இணைந்தே சமுதாயத்திலும் உணவிலிருந்து உடை வரை பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கேற்றவாறு மாணவர் களைத் தயார்படுத்த வேண்டியது கல்வித் துறையில் பெரிய சவாலாக உள்ளது. கற்றுத்தரும் முறைகளில் பழங்கால முறை பொருந்தாத ஒன்றாகும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், தொலைக்காட்சி, கணினியின் வளர்ச்சியும் பயன்பாடெல்லாம் கல்விச் சாலைக்குள் நுழைவதே செய்தியாகும் அளவுக்குத்தான் இருக்கிறது. ஆனாலும் இந்தியாவில் கல்வி கற்றுக் கொடுக்கும் முறைகளில் மாற்றம் வேண்டும் என்று ஏகப்பட்ட பேர்கள் எழுதியும், பேசியும் ஓய்ந்து போன நிலையில் இந்த கல்வி பிரச்னையை வைத்து ஹீரோ என்றொரு சினிமாவே எடுத்து விட்டார்கள்.…
Read More
மிக மிக அவசரம் – ரிவியூ!

மிக மிக அவசரம் – ரிவியூ!

ஒரு சினிமா என்பது சமூகத்திற்கு ஏதாவதொரு நல்லதொரு மெசெஜை கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அறுந்து போன ரீலாகி பல காலமாச்சு. ஆனால் இப்போ ரிலீஸ் ஆகியுள்ள மிக மிக அவசரம் என்றொரு படத்தின் மூலம் போலீஸ் அதிகார வர்க்கத்தின் குரூர போக்கு + நட்புணர்வை வெளிக்காட்டுவதுடன் பெண் போலீசின் அதுவும் கொஞ்சம் அழகான லேடி கான்ஸ்டபிள்களின் அவஸ்தையை சகலருக்கும் புரியும்படியும் எக்ஸ்ட்ராவா ஒரு ஹெல்த் அலெர்-டையும் செய்து இருக்கிறார் புது இயக்குநர் சுரேஷ் காமாட்சி. ஆமாமுங்க.. இந்தப் படத்தின் விமர்சனத்துக்குள் போகும் முன் ஒரு விஷயம்: நம் இதயத்தைப் போலவே ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்தி விட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறு நீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில்…
Read More
பிகில் -ரிவியூ!

பிகில் -ரிவியூ!

நீங்கள் தேவர் மகன் பார்த்து விட்டீர்களா? நீங்கள் ‘தளபதி’, பார்த்தாச்சா? நீங்கள் ‘வேட்டையாடு விளையாடு’, கண்டிருக்கீங்களா? அட.. ’பாட்ஷா’ -வை டிவியிலாவது வாட்ச் பண்ணி இருக்கீங்களா? அப்புறம் இந்த ‘சக்தே இந்தியா’, ‘இறுதிச்சுற்று’, ’கென்னடி கிளப்’ போன்ற படங்களில் இருந்து எதையாவது எப்போதாவது கண்டு ஸ்மைல் பண்ணி இருக்கீங்களா?- அப்படின்னா விஜய்- யை வைத்து அட்லீ இயக்கிய பிகில் படம் உங்களுக்கு முழுமையாக பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம் ஒரு சினிமா அதுவும் அட்லி & விஜய் காம்பினேஷன் படம் என்றால் சரவெடியாக இருக்கும் என்று நம்பிக்கையுடன் ஆசைப்பட்டால் உங்கள் விருப்பத்தை முழுமையாக நிறைவேற்றி இருக்கிறது இந்த பிகில். இந்தக் கால யூத்களின் ஒருவரான சகல ஆன்லைன் மீடியாக்களையும் அப்டேட்-டாக வாட்ச் பண்ணும் டைரக்டர் அட்லீ இந்த பிகில் என்ற டைட்டிலில் சொல்லி இருக்கும் கதை என்னவென்றால் தாதா ராயப்பன் (விஜய்)நார்த் மெட்ராஸ் தாதா. இவன் அண்மையில் வந்த…
Read More
கைதி விமர்சனம்!

கைதி விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக காட்டப்படும் அப்பா- மகள் பாசத்தையும், அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் அட்ராசிட்டை யையும் ட்ரீம் வாரியர் என்னும் பேமஸ் பானையில் போட்டு கரம் மசாலா, காரம், உப்பு ஆகியவற்றை தேவையான அளவு கலந்து வடிக்கப்பட்ட படையல்தான் ‘கைதி’ படம். இப்படத்தில் பாடலோ, காமெடி ட்ராக்கோ அல்லது ஹீரோயினோ இல்லைதான். ஆனால் அந்த குறைகள் கொஞ்சம் கூட தெரியாத அளவில் நாயகன் கார்த்தி புண்ணியத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறான் இந்த கைதி. கதை ரொம்ப சிம்பிள்தான்.. அதாவது கொலை கைதியாகி 10 வருட சிறைத் தண்டனையில் இருந்து வெளியே வரும் கார்த்தி, அநாதை இல்லத்தில் இருக்கும் தனது மகளை பார்க்க செல்கிறார், வழி யில் சந்தேகத்தின் பெயரில் மீண்டும் போலீசாரால் கைது செய்யப்படுகிறார். அதே நேரத்தில் எம் ஜி ஆரின் மானசிக தலைநகராம் திருச்சி போலீஸ் அதிகாரிகள் சில பலரை கொலை செய்து விட்டு , கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும்…
Read More
சூப்பர் டூப்பர் – விமர்சனம்!

சூப்பர் டூப்பர் – விமர்சனம்!

சினிமா-ன்னா ரொம்ப புதுசான கதையை யோசிச்சு, ஆறேழு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணி, டாப் ஆர்டிஸ்டிங்களைக் கமிட் பண்ணி இன்னும் என்னவென்னவோ தகிடுத்தத்தம் பண்ணி எடுக்கறது-ன்னு நெனச்சா ரொம்ப தப்பு. சகலருக்கும் புரியற அல்லது விரும்பற ஒரு கதையை செலக்ட பண்ணி அந்த கதைக்கு தோதாக நியூ ஆர்டிஸ்டா இருந்தா கூட கமிட் பண்ணி  ஸ்கிரீன் பிளேக்கு கொஞ்சம் முளையை கசக்கி ஜஸ்ட் ஃபன்னா படம் பார்க்க வந்தவங்க மனசு விட்டு சிரிச்சிட்டு போற மாதிரி எடுக்கறதும் சினிமா. அப்படி தயாரான படம்தான் ’சூப்பர் டூப்பர்’ படம். சின்ன சின்ன திருட்டு புழைப்பு செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் ஹீரோ துருவாவும், அவருக்கு மாமா ரோலில் வரும் ஷாராவும், போலீஸ் ஆபீசர் மகள் இந்துஜாவை கடத்தி அவரது தந்தையிடம் பணம் பறிக்க திட்டம் போட்டு செயலில் இறங்கிறார்கள். அதன் படி, அவர்கள் பணம் வாங்க போகும் போது இந்துஜாவின் அப்பா கொலை…
Read More
ஒத்த செருப்பு – விமர்சனம்!

ஒத்த செருப்பு – விமர்சனம்!

ஒற்றை மனிதனாக சாதனை செய்யும் சோதனை முயற்சியில் பார்த்திபன் ஒருவர் மட்டுமே எழுதி நடித்து உருவாக்கியிருக்கும் படம். சினிமாவில் மட்டுமின்றி சகல துறைகளிலும் இம்மாதிரியான சோதனை முயற்சிகள் சர்வதேசம் முழுக்க நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தமிழில் – குறிப்பாக கோலிவுட்டில் ரொம்பக் குறைவு தான். அந்த வகையில் இந்த ஒ. செ. படம் எப்படி இருக்கு என்று கேட்டால் பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவன் இருப்பான் எப்போதும் அமைதியாக இருப்பான். ஆனால் அடுத்து இருக்கும் மாணவன் தன்னை நிரூபிக்கும் பொருட்டு ஆர்வக் கோளாரில் எதையாவது செய்து கொண்டே இருப்பான். அவை சில நேரங்களில் நன்றாக இருக்கும் பல நேரங்களில் வெற்று ஆர்வக்கோளாறாகவே முடிந்து விடும். அப்படித்தான் இருக்கிறது இந்த ஒத்த செருப்பு சைஸ் 7 படமும். கிட்டத்தட்ட 110 நிமிடங்கள் கொண்ட இப்படத்தின் கதை என்னவென்று கேட்டால் கொலை விசாரணைக்கு ஒரு கைதி அழைத்து வரப்படுகிறான். அந்தக் கைதியின் மனைவி காணாமல்…
Read More
தர்ம பிரபு – விமர்சனம்!

தர்ம பிரபு – விமர்சனம்!

கோலிவுட்டோ அல்லது ஹாலிவுட்டோ காதல், ஆக்சன், பேமிலி செண்டிமெண்ட் சினிமா எடுப்பதில் வல்லவர்கள் எக்கச்சக்கமானோர் உண்டு. ஆனால்,அந்த மாதிரி சுவையான முழுமை யான காமெடி படம் எடுக்கும் இயக்குநர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  காமெடி படம் என்றால் நடிகர்களின் பங்களிப்பு மிக முக்கியமாக வேண்டும். அந்த வகையில் நம் தமிழ் சினிமா வில் நகைச் சுவைக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அதிலும் இந்திய மொழிகளில் எல்லா தரப்பினருக்கும் சவால் விடும் வகையில் கலைவாணர் தொடங்கி தங்கவேலு, சந்திரபாபு, நாகேஷ் என்று அறுபடாத சங்கிலி தொடரில் தேங்காய், சுருளி, கவுண்டமணி – செந்தில், விவேக், வடிவேலு என்று போய் கொண்டிருந்தது அந்த வீரியம். ஆனால் அந்த நகைச்சுவை இப்போது நீர்த்து போய் விட்டது என்றே இப்போதைய தமிழ் சினிமாக்களைப் பார்க்கும் போது சொல்ல தோன்றுகிறது. அதை உறுதிப்படுத்தும் விதத்தில் – அதாவது நடிப்பு என்றால் என்னவென்றாலே தெரியாத யோகிபாபுவை வைத்து…
Read More
கொலைகாரன் – விமர்சனம்!

கொலைகாரன் – விமர்சனம்!

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியவில்லை என்றே சொல்லலாம். இப்போது உள்ளங்கைக்குள் வந்துவிட்டது உலகம்; அதை சாத்தியமாக்கியிருக்கிறது ஸ்மார்ட்போன்… மறுப்பதற்கில்லை. ஃபேஸ்புக் அப்டேட்ஸ் பார்க்கிறோம், வாட்ஸ்அப்பில் வரும் குறுந்தகவல்களை வாசிக்கிறோம், செய்தித் தாளில் தலைப்புச் செய்திகளை லேசாக நோட்டமிடுகிறோம்… ஆனால், முழுமையாக ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது எல்லோராலும் முடியாத காரியமாகவே இருக்கிறது. நம்மில் பெரும்பாலானவர்கள் இணைய தேடல்களுக்குள் சிக்கி, பொழுதைக் கழிக்கிறோம். சுருக்கமாகச் சொல்வதானால் நேரத்தை விரயம் செய்கிறோம். அவ்வளவுதான். ஆனால் 1980களில் தமிழகத்தில் வாசிப்பு பழக்கம் என்பது சுனாமி அலையாய் வியாபித்தது என்று சொன்னால் மிகையல்ல.. அந்த காலக் கட்டத்தில் ஏகப்பட்ட துப்பறியும் நாவல்கள் கைக்குக் கிடைக்கும்.. அவைகளைப் படித்து விட்டு செய்த காரியங்கள் சுவையானவை. அதாவது படித்த கிரைம் நாவலை தனித் தனி தாளாகக் கிழித்து கூடவே ஒவ்வொரு பக்க நம்பரையும் நீக்கி விட்டு நண்பர்களிடம் நீட்டி கரெக்டான பக்கங்களை…
Read More
வெள்ளைப்பூக்கள் விமர்சனம்!

வெள்ளைப்பூக்கள் விமர்சனம்!

நம் தமிழ் சினிமாவில் காமெடியன்கள் ஹீரோவாக நடிக்க விரும்பி ஓரிரு படங்களில் நடிப்பது தப்பில்லை. ஆனால் வடிவேலு மற்றும் சந்தானம் மாதிரி நடித்தால் நாயகன்தான் என்று அடம் பிடிக்கும் போது இந்த திரையுலகம் அவர்களை கறிவேப்பிலை மாதிரி தூக்கி போட்டு விடுகிறது. இதை முன்னரே அறிந்திருந்ததால்தான் விவேக் என்னும் சிரிப்பு நடிகன் தன்னைத் தேடி வரும் சகல ரோலையும் ஒப்புக் கொண்டு காமெடியனாகவும் நடித்த படி இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்க வாழ் இளைஞர்கள் தயாரித்த ஒரு படத்தில் ஹீரோ ரேஞ்சிலான ஒரு ரோலில் நடித்து இருக்கிறார். அந்த படம்தான் வெள்ளைப் பூக்கள். அது சரி.. படத்தின் கதை என்ன? சென்னையில் துப்பறியும் சாம்பு மாதிரி இருந்தவர் ரிட்டய்ர்ட் ஆன நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரிலுள்ள தன் மகன் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு தான் வசிக்கும் பகுதியிலேயே அடுத்தடுத்து தொடர்ந்து நடக்கும் மர்மமான கடத்தல் கொலைகளை தானாக முன் வந்து புலனாய்வு…
Read More