சிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’

சிம்பு ரசிகராக மகத் நடிக்கும் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா’

பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்த மகத் ராகவேந்திராவும் ஐஸ்வர்யா தத்தாவும் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி வருகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ரசிகர்களை உடனடியாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற பின்னணியில் உருவாகும் ரொமாண்டிக காமெடி படமான இது அனைவரையும் வசீகரித்துள்ளது. கடந்த மாதம் பூஜையுடன் துவங்கிய இந்த படம், தற்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேற்று மாலை 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவண்டா' என்ற தலைப்பை மகத் ராகவேந்திரா வெளியிட்டார். STRன் ஒரு வெற்றி படத்தின் புகழ்பெற்ற பாடல்களில் இருந்து ஈர்க்கப்பட்ட ஒரு வரியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கிறார் மகத். இந்த படத்தில் STRன் தீவிரமான ரசிகராகவும் நடித்திருக்கிறார் மகத். இயக்குனர் பிரபு ராம் சி கூறும்போது, "மகத் ஒரு வட சென்னை இளைஞராக, STRன் தீவிரமான ரசிகராக…
Read More
எனக்கு கல்யாணம்? ஆ- விஷால் ரியாக்‌ஷன்!

எனக்கு கல்யாணம்? ஆ- விஷால் ரியாக்‌ஷன்!

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், நடிகர் சங்க பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். அரசியல் களத்திலும் அவ்வப் போது கருத்து கூறி வரும் விஷாலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது குறித்து ஆமோதித்து போட்டி கொடுத்ததாகவும் பின்னர் அதை மறுத்து ட்விட் போட்டுள்ளதாகவும் வந்துள்ள செய்திகள் பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது. திருமணம் பற்றி ‘அயோக்யா’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஷாலிடம் கேட்டபோது , “எனக்கும் அனிஷா ரெட்டிக்கும் திருமணம் என்ற தகவல் உண்மைதான். இது காதல் திருமணம். நிச்சய தார்த்தம் முடிந்துவிட்டதாக கூறுவது தவறு. நாளை (வெள்ளிக்கிழமை) தான் எனது பெற்றோரும் அனிஷா பெற்றோரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி முடிவு செய்யப்படும். இந்த ஆண்டு திருமணம் நடைபெறும். திருமண தேதியை இந்தவார இறுதியில் அறிவிப்போம்.…
Read More
இளையராஜா இசையில் பாடகியாகப் போகும் கல்லூரி மாணவிகள்!

இளையராஜா இசையில் பாடகியாகப் போகும் கல்லூரி மாணவிகள்!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம் பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி இளையராஜா. அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார். கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை…
Read More
எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் : கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு!

எடப்பாடி பழனிச்சாமிக்கு குருவாயூரப்பன் அருள் : கே.பாக்யராஜ் வேடிக்கைப் பேச்சு!

ஒரு படத் தயாரிப்பாளரின் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி யுள்ள படம் ‘கிரிஷ்ணம்’. இந்தப் படத்தை பி.என்.பி. சினிமாஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாரித்துள்ளது. தினேஷ் பாபு ஒளிப் பதிவு செய்து இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர். விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும்போது, “இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புதமான அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும் பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு ஒரு சதவிகிதம்தான் வாய்ப்புள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சத விகிதம் வாய்ப்புள்ளது என்றார்கள். நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக…
Read More
பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..!

பேட்ட படத்தின் விளம்பரமும், உலக மக்களின் எதிர்பார்ப்பும்..!

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.  இப்படத்தை மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்தியாவை தவிர உலகமெங்கும் வெளியிடும் உரிமையை பெற்று உள்ளது. இந்நிறுவனத்தின் விளம்பர யுக்தியை கண்டு உலக மக்கள் பலரும் வியந்து போய் உள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற ‘ட்ரிப்ட் சேலஞ்ச் 2018’ (DRIFT Challenge 2018) கார் ரேசில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட கார் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது. மேலும் மலேசியாவில் பல கார்களில் பேட்ட படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதுபோல் பேருந்துகளில் ஒட்டப்பட்ட போஸ்டர் அதிக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது மலேசியாவின் முக்கிய வீதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வீடியோக்கள் ஒளிபரப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஜினி ரசிகர்கள்…
Read More
நான் நடிகன் என்பதே நிரந்தரம்- கனா சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பேச்சு

நான் நடிகன் என்பதே நிரந்தரம்- கனா சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பேச்சு

திரையுலகில் தனக்கென தனியாக ஒரு பாதையை வகுத்து, குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் ஃபேவரைட் ஹீரோவாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரித்த முதல் திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் நடிக்க, சிவகார்த்திகேயன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்த இந்த படம் கடும் போட்டிக்கு இடையே வெளியாகினாலும் மிகப்பெரிய வெற்றியை பெற்று, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு ஷீல்டு வழங்கும் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் எடிட்டர் ரூபன் பேசும் போது, “இந்த படம் உருவாக மூலக்காரணமாக இருந்தாலும் அமைதியாக இங்கு அமர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கிரிக்கெட் தெரியாத என்னையும் இந்த 11 பேர் அணியில் சேர்த்துக் கொண்ட சிவா சாருக்கு நன்றி. எந்த ஹீரோவும் இல்லாமலேயே ஒரு ஸ்டாருக்குண்டான ஓபனிங்கை இந்த படத்துக்கு பெற்று தந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். எல்லோரும் சிறப்பாக உழைத்திருந்தாலும் மிகுந்த வருத்தத்தோடு நிறைய காட்சிகளை வெட்டி…
Read More
துப்பாக்கி முனை வெற்றி விழா!

துப்பாக்கி முனை வெற்றி விழா!

கலைப்புலி எஸ். தாணு வி நிறுவனமான V CREATIONS தயாரித்து ஹீரோ விக்ரம் பிரபு நடித்து திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் திரைப்படம் தூப்பாக்கி முனை. இந்த திரைப்படம் வெற்றிகரமாக 25-வது நாளை கடந்து பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக இன்றும் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த 25-வது நாள் வெற்றிவிழாவை சிறப்பாக எளிமையாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, துப்பாக்கி முனை திரைப்படத்தின் ஹீரோ விக்ரம் பிரபு, இயக்குநர் தினேஷ் செல்வராஜ், ஒளிப்பதிவாளர் ராசாமதி, இசையமைப்பாளர் L. V. முத்து கணேஷ், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீநிவாசன், டிசைனர் பவன், மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு  ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அம்மு அபிராமி.. மிர்ச்சி ஷா மற்றும் படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துகொண்டு துப்பாக்கி முனை திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
Read More
நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக  நடிக்கும் பரத்!

நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் ‘நடுவன்’ படத்தில் தந்தையாக  நடிக்கும் பரத்!

நடிகர் பரத் எப்போதும் நடிப்பிற்கு மிகவும்  சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர். முதல் முறையாக, நடிகர் ஷாரங்க் இயக்குனராக அறிமுகமாகும் 'நடுவன்' படத்தில் தந்தையாக  நடிக்கிறார். மலைப்பகுதி பின்னணியில் அமைந்திருக்கும் இந்த திரில்லர் ட்ராமா,  ஏராளமான சவால்களை கொண்டிருந்தது. இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிகர்களின் அர்ப்பணிப்பு பற்றிய சில மறக்க முடியாத தருணங்களை இயக்குனர் நம்முடன் பகிர்கிறார். "படத்தில் உள்ள அனைவருமே ஸ்டண்ட் காட்சிகளில் மிகச் சிறப்பாக நடித்திருந்தனர். இது பரத் மற்றும் கோகுல் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப்பெண் ஆரத்யா ஆகியோரும் சண்டைக்காட்சிகளில் அவர்களே நடித்திருந்தனர். இதை செய்ய சொல்லி யாரும் திணிக்கவில்லை, டூப் கலைஞர்கள் கூட தயாராக இருந்தனர். இருப்பினும், கதை மற்றும் சூழ் நிலையின் ஆழத்தை உணர்ந்து, கதையும் அதை கோரியதால், மழை மற்றும் மூடுபனியையும் பொருட்படுத்தாமல் அந்த சவாலான காட்சிகளில் தாங்களே முன் வந்து நடித்தனர். ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது …
Read More
ஸ்டன்ட் யூனியனில்  புது நிர்வாகிகள் பொறுபேற்றார்கள்!

ஸ்டன்ட் யூனியனில் புது நிர்வாகிகள் பொறுபேற்றார்கள்!

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப் பட்டு, உலகளவில் பல சாதனைகள் படைத்து ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பேர்பட்ட சங்கத்தில் தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திரு.தவசிராஜ். S.D – உபதலைவர் திரு.K.ராஜசேகர். S.D – துணைத்தலைவர் திரு.G.பொன்னுசாமி S.A – செயலாளர் திரு.V.மணிகண்டன் S.A – துணைச்செயலாளர் திரு.S.S.M.சுரேஷ் S.A – இணைச்செயலாளர் திரு.C.P.ஜான் S.A – பொருளாளர் செயற்குழு உறுபினர்கள் திரு.S.M.ராஜ் S.A திரு.P.ரவிக்குமார் S.A திரு.R.நாராயணன் S.A திரு.R.பாபு S.A திரு.A.வெங்கடேஷன் S.A திரு.U.ஆனந்தகுமார் S.A திரு.V.காசி S.A திரு.M.வெற்றிவேல் S.D…
Read More
வாட்ஸ் அப் குழு மூலம் பணம் திரட்டி தயாரான ‘நெடுநெல்வாடை’!

வாட்ஸ் அப் குழு மூலம் பணம் திரட்டி தயாரான ‘நெடுநெல்வாடை’!

நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கின் முன்னாள் மாணவர்களான 50 பேர் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘நெடுநல்வாடை’. இந்தப் படத்தில் ‘பூ’ ராமு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பு – பி-ஸ்டார் புரொடக்ஷன்ஸ், இயக்குநர் – செல்வக்கண்ணன், இசை- ஜோஸ் ஃபிராங்க்ளின், ஒளிப்பதிவு – வினோத் ரத்தினசாமி, பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, படத் தொகுப்பு – மு.காசி விஸ்வநாதன், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, சண்டைப் பயிற்சி – ராம்போ விமல், நடன இயக்கம் – தினா, சதீஷ் போஸ், மக்கள் தொடர்பு – மணவை புவன். 2000-ம் ஆண்டு நெல்லை சங்கர் பாலிடெக்னிக்கில் படித்தவர் இந்தப் படத்தின் இயக்குநரான செல்வக்கண்ணன். இவருடன் படித்த நண்பர்களில் 90 சதவிகிதம் பேர் தற்போது இந்தியா விலும், வெளிநாடுகளிலும் பெரிய நிறுவனங்களில் பொறியாளர்களாக வேலை செய்கிறார்கள். காந்தி கிருஷ்ணா, சாமி, ராஜேஷ் எம்.செல்வா ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்கு நராகப் பணியாற்றிவிட்டு, மற்றவர்கள் போலத்…
Read More