விஜய் மில்டனின் ‘கடுகு’ ஆடியோ வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

விஜய் மில்டனின் ‘கடுகு’ ஆடியோ வெளியீட்டு விழாவின் ஹைலைட்ஸ்!

"கடுகு" திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பாடல்கள் குருந்தகடை வெளியிட, கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, போக்குவரத்து காவலர் குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். இந்த மூவரும் தங்களது சேவைகள் மூலம் மக்களை ஈர்த்தவர்கள் ஆவார். சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அண்ணாதுரை, தனது ஆட்டோவில் வைபை உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்பங்களை வைத்து வாடிக்கையாளர்களை கவர்ந்தவர் ஆவார்.சென்னை, சோழிங்கநல்லூரைச் சேர்ந்த போக்குவரத்து காவலரான குமார், பலவிதமான நடன அசைவுகளின் மூலமாக போக்குவரத்தை சீர் செய்து மக்களிடையே பிரபலம் அடைந்தவர்.கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதி ஈரோடு மாவட்டம் பெருந்துரை சேர்ந்தவர்கள். இவர்கள் தங்களது வீட்டில் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். இந்த ஓட்டலில் சாப்பிடுபவர்களிடம் பணம் ஏதும் வசூலிக்க மாட்டார்கள். சாப்பிடுபவர்கள் விரும்பும் தொகையை கொடுத்துவிட்டு செல்லலாம். கோவில் போல சேவையாக இவர்கள் நடத்தும் இந்த ஓட்டலில் 26 வகையான உணவு…
Read More
ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ்  ரூ 110 கோடி மட்டுமே?!

ரஜினி-யின் 2.0 திரைப்பட டி.வி. ரைட்ஸ் ரூ 110 கோடி மட்டுமே?!

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்சய் குமார், எமி ஜாக்சன் நடித்துவரும் பிரம்மாண்டமான சயின்ஸ் பிக்ஷன் திரைப்படம் 2.0. ஹாலிவுட் படங்களுக்கே சவால்விடும்படி இப்படம் 450 கோடி பட்ஜெட்டில் பல புதிய தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இதுதான் என்பது உறுதியான தகவல். அதேசமயம் ஆசிய அளவில் அதிக பட்ஜெட்டில் உருவான படங்களில் இதுவும் ஒன்றாம். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 90% நிறைவடைந்துள்ளதாம். இதை ஷங்கரே டிவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு பாடல் மற்றும் பேட்ச் வர்க் மட்டுமே மீதியுள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் மட்டும் ரூ. 110 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தொலைக்காட்சி நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து இந்த டீலை முடித்திருக்கிறதாம்.இந்த தகவலை தயாரிப்பு நிர்வாகி ராஜூ மகாலிங்கமும் உறுதிப்படுத்தி உள்ளார்
Read More
”மகளிர் மட்டும்” இயக்குநர் பிரம்மா  பேட்டி!

”மகளிர் மட்டும்” இயக்குநர் பிரம்மா பேட்டி!

‘மகளிர் மட்டும்’ எமோஷனலான திரைப்படம். படத்தின் ஒவ்வொரு ஃபிரேம்மையும் நீங்க சிரிச்ச முகமாகவே பார்த்து என்ஜாய் பண்ணுவீங்க என்கிறார் இயக்குநர் பிரம்மா.  ‘மகளிர் மட்டும்’  கதை ரெடியானதும் ஜோதிகாவுக்கு பொருத்தமான கதையா இருந்துச்சு. அவங்ககிட்ட கதை சொல்லும் போது, சில இடங்கள்ல சீரியஸா கேட்டாங்க. நிறைய இடங்கள்ல சிரிச்சாங்க. அப்பவே எனக்கு கான்பிடன்ட் வந்திடுச்சு. அடுத்து சூர்யா சார்கிட்ட கதையை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. ‘2டி’லேயே பண்ணிடலாம்’னு உற்சாகப்படுத்தினார். ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன்னு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதை. ‘மகளிர்மட்டும்’ டைட்டில் கிடைச்சா ரீச் அதிகமா இருக்கும்னு நினைச்சேன். சூர்யா சார் உடனே கமல் சார்கிட்ட பேசி, இந்த டைட்டிலை வாங்கிக் கொடுத்தார். இது ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. நாசர் சார், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் தவிர நிறைய புதுமுகங்கள் இருக்காங்க. முதல் படத்துல ரிகர்சல் சாத்தியமாச்சு. இந்தப் படத்துலேயே ஒரு மாசம் workshop வச்சிருந்தேன். இந்த மாதிரி…
Read More
‘கட்டப்பாவ காணோம்’  எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

‘கட்டப்பாவ காணோம்’ எனக்கு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு திரைப்படம்” – ஐஸ்வர்யா ராஜேஷ்

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று வெளியாகின்றது. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி, 'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படத்தை வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'கட்டப்பாவ காணோம்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் போது தான் எனக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே இந்த படத்தை நான் மிகவும் அதிர்ஷ்டமான திரைப்படமாக கருதுகின்றேன். சிபிராஜ் மற்றும் இயக்குநர் மணி சேயோன் ஆகியோரோடு இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்து இருக்கின்றது. இதுவரை நான் நடித்த…
Read More
குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை !

குழந்தைகளால் தொடங்கி வைக்கப்பட்ட அறக்கட்டளை !

குழந்தைகளின் நலனுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும்"நாரோ மீடியா " என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  குழந்தைகளின் நல வாழ்விற்காக அதிலும் குறிப்பாக எய்ட்ஸ் என்கிற உயிர்க்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக, கிரிக்கெட் உள்பட பல விதமான நல நிதி திரட்டும் நிகழ்ச்சிகளை இவர்கள் நடத்தியிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவ உதவிக்காக மனிதம் ஃபவுண்டேசன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கியிருக்கிறார்கள். இதன் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதியிலிருக்கும் ஏழைக் குழந்தைகள் பயன் பெறவிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக வறுமைக்கோட்டிற்கு கீழிருக்கும் அனைத்து பெண் குழந்தைகளும்,சாதி, சமய மற்றும் நிற வேற்றுமைகளைக் கடந்து, பயன்பெறும் வகையில் செயல்படத் திட்டமிட்டிருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் மாற்றுத்திறன் படைத்தவர்களின் குழந்தைகளுக்கும் தேவையான உதவிகளை வழங்கவும் தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், மிராக்கிள் பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் பாலியல் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான விழிப்புணர்வு படமாக தயாரித்த ‘நிசப்தம்’ படத்தினை, எட்டு வயது முதல் பதினைந்து…
Read More
ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

ஆட்சியை கலைத்து விட்டு உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் ! – கமல் பேட்டி

தனியார் தமிழ் தொலைகாட்சி ஒன்றிற்கு நேற்று கமல் அளித்த பேட்டியில், நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று கூறிய கமல்ஹாசன் அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்றார். அரசியல் வர்த்தகமாகிவிட்டது. எளிமையான அணுகுமுறையுடன் கூடிய தலைவர்கள் தற்போது தேவைப்படுகிறார்கள். அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் தனது முதல் தகுதி என்றும் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது எரிமலையின் ஒரு நுனிதான். நான் வரி கட்டுகிறேன். ஊழலில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அதை தைரியமாக சொல்வேன். ஊழல் என்பது வாக்காளர்களிடமிருந்தே தொடங்குவதாகக் கூறிய கமல்ஹாசன், வாக்குகளை விலைபேசும்போது கேள்விகளை எழுப்ப முடியாது என்றும் தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். நிகழ்கால அரசியலுக்கு எதிராக தான் குரல் கொடுப்பேன். காலத்தின் தேவைக்கேற்ப அரசியல் இயக்கங்கள் மாற வேண்டும். மக்களின் தேவைக்கேற்ப பழைய சட்டங்களை நீக்கிவிட்டு புதிய…
Read More
‘ தீரன் அதிகாரம் ஒன்று’  விஷுவல் ட்ரீட் – சொல்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன்  !!!

‘ தீரன் அதிகாரம் ஒன்று’ விஷுவல் ட்ரீட் – சொல்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் !!!

நேற்று வெளியான காற்றுவெளியிடை திரைப்படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்று சாதனைகளை ஒரு பக்கம் படைத்து வரும் வேளையில், கார்த்தி “சதுரங்க வேட்டை“ புகழ் வினோத் இயக்கிவரும் “தீரன் அதிகாரம் ஒன்று“ திரைப்படத்தின் படபிடிப்பில் கார்த்தி கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இப்படத்தின் படபிடிப்பு “ ஜெய்சல்மர் “ பகுதியில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து “பூஜ்“ பகுதியில் தொடர்ந்து 20 நாட்கள் படபிடிப்பு நடைபெறும். யதார்த்தமான லோக்கேஷனாக இருப்பதால் இப்பகுதியில் படபிடிப்பு நடத்துவதாக ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் கூறினார். எங்கள் கதைக்கு என்ன தேவையோ அது எங்களுக்கு இங்கே சரியாக கிடைத்துள்ளது. படத்தின் முக்கியமான காட்சிகள் இங்கே படமாக்கப்பட்டு வருகிறது. “பூஜ்” பகுதியில் ஆக்சன் காட்சிகளை பரபரப்பாக படமாக்கவுள்ளோம். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்ராயனின் ஸ்டன்ட் அமைப்பில் “ஹை வே“ ஆக்சன் காட்சி ஒன்றும் “பூஜ்” பகுதியில் நடைபெறவுள்ள படபிடிப்பில் படமாக்கப்படவுள்ளது. மொத்தம். இங்கே 40 நாட்கள்…
Read More
பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

பேயுடனும், நாயுடனும் ரொமான்ஸ் செஞ்சவன் ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ்! – சிபி மகிழ்ச்சி

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம், கற்பனை கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும்  'கட்டப்பாவ காணோம்'. அறிமுக இயக்குநர் மணி சேயோன் (இயக்குநர் அறிவழகனின் இணை இயக்குநர்) இயக்கி,  'விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் சார்பில் மதுசூதனன் கார்த்திக், சிவகுமார், வெங்கடேஷ், மற்றும் லலித் ஆகியோர் தயாரித்து இருக்கும் 'கட்டப்பாவ காணோம்' திரைப்படம் வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி அன்று  வெளியாகின்றது. இந்த படத்தை 'ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ்' சார்பில் சரவணன் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. சாந்தினி  தமிழரசன், காளி வெங்கட், மைம் கோபி, யோகி பாபு, திருமுருகன், ஜெயக்குமார், லிவிங்ஸ்டன், சித்ரா லக்ஷ்மன், 'டாடி' சரவணன், பேபி மோனிக்கா மற்றும் சேது ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 'கட்டப்பாவ காணோம்' படத்தில், ஒளிப்பதிவாளராக ஆனந்த் ஜீவா, இசையமைப்பாளராக சந்தோஷ் தயாநிதி, படத்தொகுப்பாளராக சதீஷ் சூர்யா, கலை இயக்குநராக எம் லக்ஷ்மி தேவ், பாடலாசிரியர்களாக…
Read More
“விழித்திரு படத்தை விடியல் ராஜு எப்படி வாங்கினார் தெரியுமா? – இயக்குநர் மீரா கதிரவன் நெகிழ்ச்சி!

“விழித்திரு படத்தை விடியல் ராஜு எப்படி வாங்கினார் தெரியுமா? – இயக்குநர் மீரா கதிரவன் நெகிழ்ச்சி!

கிருஷ்ணா - வித்தார்த் - வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம்   'விழித்திரு'. ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி  இருக்கும் இந்த விழித்திரு படத்தை 'ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்' சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.  விழித்திரு படத்தின் விநியோக உரிமையை 'சவுந்தர்யன் பிச்சர்ஸ்' சார்பில் வாங்கி இருக்கும் விடியல் ராஜு, இந்த படத்தை தமிழகமெங்கும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. 'விழித்திரு' திரைப்படத்தில்  டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக  டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.சத்யா,அல்ஃபோன்ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள்  இந்த 'விழித்திரு' படத்தில்  ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.   விஜய் மில்டன், ஆர்.வி,சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த…
Read More
காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

காதலை கவித்துவமாக கூறும் “ஏனோ வானிலை மாறுதே”

வெளியான நாள் முதல் யூ டியுபில் தொடர்ந்து முதல் #10 Trendingக்குள் வலம் வந்த Youthful Magic "ஏனோ வானிலை மாறுதே" குறுத்திரை படத்தை வெள்ளித்திரை தரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்படி ரசனையாக இயக்கியுள்ளார் இயக்குனர் புனித். ஒவ்வொரு  Shotம்  Sweetஅஹ் Cuteஅஹ் கண்ணுக்கு குளிர்ச்சியா ஒளிப்பதிவு செய்துள்ளார் வினோத்ராஜேந்திரன். புனித்தின் கதை களத்திற்கும் வினோத்தின் ஒளிப்பதிவிற்கும் இணைந்து காவியமாய்  அமைந்துள்ளது.சிந்துகுமாரின் இசை. தமிழ்குமரனின் எடிட்டிங் ஏனோ வானிலை மாறியதை எதார்த்தமாய் காட்யிருக்கிறது. இந்த ஒட்டு மொத்த குழுவின் உன்னத உழைப்பு மக்களின் ஆதரவிலும் படத்தின் தரத்திலும் தெரிகிறது. இன்று இணையத்தை  ஆட்கொண்டிருக்கும்  "ஏனோ வானிலை மாறுதே" இளைஞர்கள்   மனதில்  "அழகாய் காதல் தூதே" ஏனோ வானிலை மாறுதே குறும்படம்  தலர்களை  காதலுக்கும் கடத்தி செல்லும் கவிதை.வெளியிட்டதிலிருந்து 9 நாட்களில்  18 லட்சத்திற்கும் மேல் பார்வை களை   பெற்றுள்ள ஏனோ வானிலை மாறுதே,  இன்னும் ஒரு நாளிள் அது 20 இலட்சம் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதலும் காமெடியும் கலந்த கதம்பம், இந்த மாதிரி ஒரு காதல் நம்ம வாழ்க்கையிலும் வரனும்னு ஆசைப்படுற அளவுக்கு அழகாய் இருக்கிறது படம். பேபி மனுஸ்ரீ கொஞ்சி கொஞ்சி நடிச்சிருக்காங்க, நக்ஷத்த்ராவும் அருணும் காதலை கண்ணியமா பிடிச்சிருக்காங்க. எப்ப வரும் எப்படி  வரும்னு தெரியாத காதலை இந்த படம் Youtube ல் வந்து அழகாய் சொல்லிருக்கு. காதலை கண் குளிரும் தரத்தில், காதலை காதலின் நிறத்தில், சொல்லிய அழகிய குறும்படம் "ஏனோ வானிலை மாறுதே" நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் விவரங்கள் :- நடிப்பு  : அருண், நக்ஷத்ரா நாகேஷ், கல்லூரி மதன் எழுத்து & இயக்கம் : புனித் இசை : சித்துகுமார் ஒளிப்பதிவு : வினோத் ராஜேந்திரன் படத்தொகுப்பு : தமிழ் குமரன் பாடல்கள் : அஜித் சாய் , விக்னேஷ் ராமகிருஷ்ணன் Vfx - Naren And Manikanda Prabhu Design - Yuvaraj and Saba Singers - Rahul Hariharan, Ananthu Nair , Joe Yamini G Mixed and Mastered - Abin Pushpakaran Helicam - Anand Light Unit - Raj…
Read More