மகள் திருமண வரவேற்பில் தன் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் தனி மரியாதை கொடுத்த சீயான் விக்ரம்!

மகள் திருமண வரவேற்பில் தன் ரசிகர்கள் அத்தனை பேருக்கும் தனி மரியாதை கொடுத்த சீயான் விக்ரம்!

நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கும், கெவின் கேர் நிறுவனத் தலைவர் சி கே ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தொழிலதிபர்கள், திரையுலக பிரபலங்கள், நண்பர்கள், என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். விக்ரமின் ரசிகர்கள் அனைவரும் மேடையேறி தங்கள் நாயகனின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது. ஏனைய நட்சத்திரங்களின் வீட்டு விசேஷங்களில் ஒருசிலருக்கு மட்டுமே மேடையேறி வாழ்த்து சொல்லும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் விக்ரம், தன்னுடைய ரசிகர்கள் அனைவரையும் மேடையேற்றி, வாழ்த்துச் சொல்ல அனுமதித்தார். இதன் மூலம் ரசிகர்கள் உற்சாகமடைந்து, வரிசையில் நின்று மணமக்களைச் சந்தித்து, வாழ்த்து தெரிவித்து சந்தோஷமடைந்தனர். ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே ‘ஓ பட்டர்ஃப்ளை’ பாடலை பாடினார் விக்ரம். 'தமிழ் திரையுலகில் விக்ரமின் நடிப்பு எப்படி தனித்துவம் மிக்கதோ, அதே போல்…
Read More
சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படம்தான் ‘அறம்’

சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படம்தான் ‘அறம்’

பெண் சமத்துவம் என்பதை வெறும் பேச்சில் மட்டுமே கொண்டுள்ள பல துறைகள்  இருக்கும் இக்காலத்தில், அதனை நடைமுறையிலும் செயலாக்கிக்கொண்டிருக்கிறது தமிழ் சினிமா துறை. மிக வலுவான முதன்மை கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘அறம்’ படத்தை கோபி நைனார் இயக்கியுள்ளார். இது ஒரு சமுதாய பிரச்சனைகளை பற்றி பேசும் படமாகும். இப்படத்தை தயாரித்துள்ள KJR ஸ்டுடியோஸ்,  பிரம்மாண்ட  விளம்பர யுக்திகளை கையாளவுள்ளனர். ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் பட ரிலீசுக்கு இணையாக இப்படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் தமிழகமெங்கும் பல திரையரங்கங்களில் எழுப்பப்படவுள்ளன. ” ‘அறம்’ படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது. நயன்தாரா வின் பெரிய மார்க்கெட் வேல்யூவிற்கு ஈடான விளம்பர யுக்திகளை கையாள்வதே சரி”  என்கிறார்  ‘KJR ஸ்டுடியோஸ்’ ராஜேஷ் J கொட்டப்படி. தென்னிந்திய சினிமாவில்  பெண் கதாபாத்திரத்தை  மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் இது ஒரு மிக முக்கிய படமாக கருதப்படுகிறது. KJR ஸ்டுடியோஸும்…
Read More
நெஞ்சில் துணிவிருந்தால் படம் குறித்து இயக்குநர் சுசீந்தரன் பேட்டி!

நெஞ்சில் துணிவிருந்தால் படம் குறித்து இயக்குநர் சுசீந்தரன் பேட்டி!

அன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் டைரக்‌ஷனில் உருவாகியுள்ள புதிய படம், ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’ இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழாவில், டைரக்டர் சுசீந்திரன் கலந்து கொண்டு பேசிய போது, “நான் மகான் அல்ல படம் எப்படி வெற்றி படமாக அமைந்ததோ அதைப்போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ‘ஹிட்’ ஆகியுள்ளன. இமானுடன் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். சந்தீப் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருடன் நான், ‘ஜீவா’ படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ‘ஜீவா’ படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். தமிழில் விஷ்ணு விஷாலையும், தெலுங்கில் சந்தீப்பையும் வைத்து எடுக்க முடிவு செய்து, ஆரம்ப வேலைகளை தொடங்கினேன். 2 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகுதான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு கதாநாயகர்களை வைத்து படம் எடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில…
Read More
இப்படை வெல்லும் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்?! – உதய நிதி ஸ்டாலின் விளக்கம்

இப்படை வெல்லும் படத்தில் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்?! – உதய நிதி ஸ்டாலின் விளக்கம்

நவம்பர் 9-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கவுரவ் இயக்கியுள்ள இப்படத்தில் மஞ்சிமா மோகன், சூரி, ஆர்.கே.சுரேஷ், ராதிகா உள்ளிட்ட பலரும் உதயநிதியுடன் நடித்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரித்தி ருக்கிறது. முன்னதாக 'இப்படை வெல்லும்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியொன்றில் உதயநிதி ஸ்டாலின், "'மெர்சல்' படத்தின் முழு விளம்பரம் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய 'இப்படை வெல்லும்' படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்னு நினைக்கிறேன்" என்று தெரிவித்தார். இச்செய்தி சமூகவலைத் தளத்தில் பகிரப்பட்டது. இதனைக் குறிப்பிட்டு பாஜக தேசிய செயலாளர்களில் ஒருவரான ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.இப்படி ஹெச்.ராஜாவின் பதிலால் இயக்குநர் கவுரவ் சந்தோஷமடைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் "ஹெச்.ராஜா சார் தங்களுடைய விளம்பரப்படுத்துதலுக்கு நன்றி. எங்களுடைய முழு குழுவும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறது. கலக்குங்க சார். கவுத்துறாதீங்க" என்று…
Read More
உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

உதவி கேட்க / உதவி செய்ய ஒரு புது ஆப்! – இது ஒரு விஷால் தயாரிப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான் விஷால் ஏற்கனவே நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலருக்கும் தனது தேவி அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவி செய்து வருகிறார் என்பது சகல்ருக்கும் தெரிந்த செய்திதான். இந்த நிலையில் அவரும் அவருடைய நண்பர்களும் இணைந்து 'V Shall' என்ற அப்ளிகேசனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேசன் எதர்கு தெரியுமோ? உதவி தேவைப்படும் மற்றும் உதவும் குணம் சகலரையும் ஒன்று சேர்க்கும் வகையில் இந்த ஆப் உருவாகிறதாம். இந்த அப்ளிகேசன் மூலம் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களும், உதவ முன் வருபவர்களும் நேரிடையாக உதவவோ, உதவி பெறவோ செய்யலாம். இந்த அப்ளிகேசன் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது மேலும் இந்த ஆப் குறித்து விஷால் வீடியோ வடிவில் விளக்கியுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம். பொதுவாகவே ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பார்ப்பது அல்லது செல்ஃபி எடுக்க பயன்படுத்துவோம். ஆனால், அதைத் தாண்டி ஸ்மார்ட்…
Read More
ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி நடிக்கும் ’ஒரு கதை சொல்லட்டா?’

ஆஸ்கர் வின்னர் ரசூல் பூக்குட்டி நடிக்கும் ’ஒரு கதை சொல்லட்டா?’

கலை துறையில், இந்தியாவிலிருந்து உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிக சிலரே. அந்த மிக சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் gv gv ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் டிசைன்கள் உலக பிரசித்தி பெற்றவை . தற்பொழுதைய பரபரப்பு செய்தி, ரசூல் பூக்குட்டி நடிகர் அவதாரம் எடுத்திருப்பது தான். பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்த படத்தில் திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலக புகழ் பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவு செய்ய விரும்பும் கனவோடு இருக்கும் ஒரு சவுண்ட் டிசைனராகவே ரசூல் பூக்குட்டி நடித்துள்ளார். இந்த படத்தை ‘Palm Stone Multimedia’ ராஜிவ் பனகல் தயாரித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு பிரம்மாண்ட படங்களோடு தொடர்புள்ள தயாரிப்பு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து இயக்குனர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், ”இந்த படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி என உறுதியாக கூறுவேன். கேரளாவில்…
Read More
அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

அறம் திரைப்படத்தில் அரசியல் இருக்கு.. ஆனா இல்லை!

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் தண்ணீர் பிரச்சனை குறித்து பேசும் படம் தான் “அறம்”. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் நயன்தாரா நடித்து இருக்கிறார். இப்போதெல்லாம் லேடி சூப்பர்ஸ்டார் என்ற அடைமொழியை புன்னகையோடு ஏற்றுக் கொள்ளும் நயன் நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. நயன்தாராவிற்கு 55-வது படமான “அறம்” திரைப்படம் இதில் நயன்தாரா கலெக்டராக நடிக்கிறார். இப்படத்தில் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி, ஈ. ராமதாஸ், சுனுலட்சுமி, ராம்ஸ் உட்பட பலர் நடித்து உள்ளனர். இந்த படத்திற்கு ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.. ‘அறம்’ படத்தின் ட்ரெய்லர் நேற்று (நவம்பர் 1) மாலை வெளியாகியது.. சமூகப் பிரச்னைகளுள் ஒன்றான குடிநீர் பஞ்சத்தை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள இதில் மாவட்ட கலெக்டராக அரசியல்வாதிகளை எதிர்க்கும் கேரக்டரில் நயன்தாரா நடித்திருக்கிறார். “அஞ்சாறு மாசமா மழை இல்லாம இருந்தப்பகூட தண்ணீர் பஞ்சம் இல்ல… என்னிக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கே…
Read More
தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

தஞ்சையில் கமல் அரசியல் அறிவிப்பு கூட்டத்திற்கு ஆயத்தம் செய்யும் பப்ளிக் ஸ்டார்!

நடிகர் கமல்ஹாசன் அரசியல் விமர்சனங்களை தன்னுடைய ட்விட்டர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு ஆளும் தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தது. எதிர்க்கட்சிகள் தரப்பில் இருந்து வரவேற்கப்பட்டது. தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் இப்போது நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்தும் தொடர்ந்து டுவிட்டரில் கருத்துகள் பதிவிட்டு வருகிறார். நான் அரசியலுக்கு வந்து விட்டேன். கோட்டை நோக்கிய எனது பயணம் தொடங்கி விட்டது என்றும் பகிரங்கமாக அறிவித்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். புதிய கட்சிக்கு பெயர் தேர்வு செய்வது, கொடியை உருவாக்குவது போன்ற வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கின்றன. விரைவில் கட்சி பெயரை அறிவித்து அரசியல் களத்தில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் பிறந்த நாள் அடுத்த மாதம் (நவம்பர்) 7-ந் தேதி கொண்டாடப்படுகிறது.அப்போது ரசிகர்களை…
Read More
ஜாக்கிசான் நடித்துள்ள ‘தி பாரினர்’ தமிழில் நவம்பர் 3 முதல்!

ஜாக்கிசான் நடித்துள்ள ‘தி பாரினர்’ தமிழில் நவம்பர் 3 முதல்!

உலகம் முழுக்க ஆக்சன் படங்கள் பார்ப்பவர்களின் அன்புக்குரிய அபிமான கதாநாயகன் ஜாக்கிசான். மொழி, இனம் கடந்து ஆறிலிருந்து அறுபது வரை சினிமா ரசிகர்களால் ஆராதிக்கப்படும் நாயகன் இவர். அப்படிப்பட்ட ஜாக்கிசான் நடித்து எந்த நாட்டில் படம் வெளியாகிறதோ அந்தநாட்டு மக்களின் பிராந்திய மொழிகளில் மொழி மாற்றுப் படமாக உருவாக்கி படத்தைக் கொண்டு வர பல தயாரிப்பாளர்கள் போட்டி போடுவார்கள். அவ்வகையில் தமிழில் இதைக் கொண்டு வருகிறது ஒயிட் பாக்ஸ் நிறுவனம் . 'தி பாரினர் ' என்று பெயர் இருந்தாலும் இப்படத்தில் ஜாக்கிசான் சென்னையைப் பற்றி லோக்கலாக வசனம் பேசுகிற காட்சிகளுக்கு தியேட்டரில் கை தட்டல்கள் கல கலக்கும் . ஆரவாரம் அலையடிக்கும். ஜாக்கிசான் நடித்த மூலப்படமான ''தி பாரினர் '(The Foreigner)ஆங்கிலப்படம் அக்டோபர் 13 அன்று இந்தியா தவிர்த்து உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் நவம்பர் 3-ல் தமிழகத்தில் 150 திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்க்ஷன், சென்டி…
Read More
கடைசி வரை கவரிமான் போல் வாழந்த ‘ தியாகராஜ பாகவதர்’

கடைசி வரை கவரிமான் போல் வாழந்த ‘ தியாகராஜ பாகவதர்’

மயிலாடுதுறையில் 1910 மார்ச் முதல் தேதி கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதி யின் மகனாக தியாகராஜன் பிறந்தார். அவரின் சிறுவயதிலேயே தந்தை கிருஷ்ணமூர்த்தி, தமது குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்றுவிட்டார். சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். தந்தைக்கு இது பிடிக்கவில்லை. தியாகராஜன் படிக்க வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தியபடி இருந்தார். தொல்லை தாங்காமல் திடீரென்று மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். எங்கே தேடியும் தாயும் தந்தையும் அவதிப்பட்ட நிலையில், கடப்பாவில் அவர் இருப்பதாகச் செய்தி வந்தது. தனிமைப்பட்டு, கையில் காசில்லாமல் சென்றவர் எவ்வளவு அவதிப்படுகிறாரோ என்ற கவலையுடன் தந்தை கடப்பா சென்றார். அங்கு அவர் ஆச்சரியப்பட்டார், கடப்பாவில் ஒரு மண்டபத்தில் மக்களின் கூட்டம் அவர் பாடுவதைக் கேட்டு ஆரவாரித்தபடி இருந்ததாம். திருச்சி திரும்பிய பாலபாடகனின் பாட்டைக் கேட்டுப் பலரும் பாராட்டினார்கள்.…
Read More