தீரன் அதிகாரம் ஒன்று – கதை என்ன? – கார்த்தி ஓப்பன் பேட்டி!

தீரன் அதிகாரம் ஒன்று – கதை என்ன? – கார்த்தி ஓப்பன் பேட்டி!

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. வினோத் இயக்கியுள்ள இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் இணைந்துளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இதனை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரே நேரத்தில் தமிழிலும் கூடவே தெலுங்கில் ‘காக்கி’ என்ற பெயரில் வருகிற நவம்பர் 17-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு பரபரப்பாகி இயங்கி வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் கார்த்தி-யிடம் இந்த படம் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது “மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள ஃபிட்னஸையும், நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குணாதிசயங்கள் மற்றும் உடல்மொழி யையும் பயன்படுத்தியுள்ளேன். இப்போதுள்ள இளம் போலீஸ் அதிகாரிகள் எல்லாம் மீசை இல்லாமல் தான் இருக்கிறார்கள். விட்டால்…
Read More
சென்னையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பு!

சென்னையில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பு!

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் இருட்டு அரையில் முரட்டுக் குத்து படப்பிடிப்பைத் துவங்கியது.   இதில் சர்வர் சுந்தரம் மற்றும் சக்கப்போடு போடு ராஜா படத்தில் நடித்த வைபவி ஷாண்டில்யா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சந்த்ரிகா ரவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். சந்த்ரிகா இந்த படத்தில் பேயாக வருகிறார். யாஷிகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாய்லாந்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழு சென்னைக்குத் திரும்பியது. தற்போது சென்னையில் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தாய்லாந்திற்கு இறுதிக்கட்டப் படப்பிடிப்பிற்காக இக்குழு செல்ல உள்ளது. இந்தப்படத்தில் ராஜேந்திரன், கருணாகரன், பால சரவணன், மதுமிதா, மீசைய முறுக்கு புகழ் ஷா ரா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை- பாலமுரளி பாலு. ஒளிப்பதிவு- தருண் பாலாஜி. 2018ஆம் ஆண்டு துவக்கத்திலேயே இருட்டு…
Read More
நெஞ்சில் துணிவிருந்தால் – இப்போ புது வெர்சன் ரிலீஸ்!

நெஞ்சில் துணிவிருந்தால் – இப்போ புது வெர்சன் ரிலீஸ்!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரை படத்தின் எடிடட் வெர்சன் இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. சமூக பிரச்னையை மையமாக கொண்டு தயாரான  நெஞ்சில் துணிவிருந்தால் நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விமர்சகர்கள், மக்களின் கருத்து மற்றும் நலம் விரும்பிகளின் கருத்துகளை கருத்தில் கொண்டு நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட குழு கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியுள்ளது. இது பற்றி இயக்குநர் பேசியது ... நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் இருபது நிமிடத்தை நாங்கள் நீக்கி உள்ளோம். கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த நெஞ்சில் துணிவிருந்தால் திரை படத்தின் புதிய வெர்சன் இன்று நண் பகல் 12 மணி முதல் அனைத்து திரை அரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் நாங்கள் 15…
Read More
பாலகைலாசம் 2017ம் ஆண்டு நினைவு விருதுகள் விழா!

பாலகைலாசம் 2017ம் ஆண்டு நினைவு விருதுகள் விழா!

 பால கைலாசம்  மூன்றாமாண்டு நினைவு விருது வழங்கும் விழா, நேற்று சனிக்கிழமை மாலை சென்னை ரஷ்யன் கல்சரல் சென்டரில் நடைபெற்றது. சமூகத்தின் முன்னேற்றத்துக்காக மீடியாவைப் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பிய, பால கைலாசத்தின் பெரும் விருப்பத்தையும், நோக்கத்தையும் தற்போது செயல்படுத்தி வரும் ஆளுமைகளுக்கு அவருடைய பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. அச்சு ஊடகம், உலகளாவிய வலைத்தளம், தொலைக்காட்சி, வானொலி, ஆவணப் படம் ஆகிய துறைகளில் இயங்கும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களில் சமூக மாற்றத்துக்காக இயங்குபவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசு கேடயத்துடன் 50000 ரூபாய் பரிசுத் தொகையையும் கொண்டது. இந்த 2017-ம் ஆண்டிற்கான பால கைலாசம் நினைவு விருதினை தொலைக்காட்சி பிரிவில் News 18 நிறுவனத்தின் செய்தி ஆசிரியரான குணசேகர் பெற்றார். ஆவணப் பட பிரிவில் ‘Ko Ki Pa Lu’ என்கிற ஆவணப் படத்திற்காக ஈஸ்வர் ஸ்ரீகுமாரும், அனுஷ்கா மீனாட்சியும் விருதினைப் பெற்றார்கள். இணையத் தளப் பிரிவில் TheWire.in &…
Read More
டிசம்பர் 6 முதல் 10ம் மதுரையில் சர்வதேச திரைப்பட விழா!

டிசம்பர் 6 முதல் 10ம் மதுரையில் சர்வதேச திரைப்பட விழா!

மதுரையில் டிசம்பர் 6 முதல் 10ம் தேதி வரையில் 19வது மதுரை சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படவிழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஆவண மற்றும் குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் சர்வதேச மற்றும் இந்திய அளவிலான திரைத்துறை பிரபலங்களுடன் நேரடியாக கலந்துரையாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்திய படங்கள், சர்வதேச படங்கள், நினைவுகூரல் படங்கள் (சமீரா ஜெயின், பட்ரிக் ரௌசெல்), இயக்குநர்களை மையப்படுத்திய படங்கள் மற்றும் சிறப்புப் பிரிவு படங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்டு படங்கள் திரையிடப்படவுள்ளன. இந்த விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக்குழு தலைவர் அமுதன்.ஆர்.பி., “மதுரையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்படவிழாவில் 50க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன. இதற்காக மதுரையில் குறிப்பிட்ட சில திரையரங்குகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விழா குறித்த முழுமையான தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்” என்று தெரிவித்தார்.
Read More
தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ஒரு நடிகை  – ஷாதிகா!

தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும் தெரிந்த ஒரு நடிகை – ஷாதிகா!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் 'நெஞ்சில் துணி விருந்தால்' படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர் தான்  இந்த ஷாதிகா. படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும்  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் . இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா . சென்னைப் பெண்ணான  இவர், லயோலாவில் பி.டெக் படித்து  முடித்தவர். இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் 'மங்கை' தொலைக்காட்சித்  தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு…
Read More
பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு! – ரசூல் பூக்குட்டி!

பூரம் விழாவை லைவாக ரெக்கார்டு செய்வது என் கனவு! – ரசூல் பூக்குட்டி!

பால்ம்ஸ்டோன் மல்ட்டிமீடியா ராஜீவ் பனகல் & பிரசாத் பிரபாகர் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஆஸ்கர் விருது பெற்ற  ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி முதல் முறையாக நடிகர் அவதாரம் எடுத்து, கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘ஒரு கதை சொல்லட்டுமா’. பிரசாத் பிரபாகர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் வைரமுத்துவின் வைர வரிகளுக்கு ராகுல்ராஜ் இசையமைத்திருக்கிறார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையை வெளியிட இயக்குனர் ஷங்கர் பெற்றுக்கொண்டார். படத்தின் டீசரை கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்டார். விழாவில் பேசிய வைரமுத்து, “இது ஒரு சராசரி விழா அல்ல, கலையில் ஒரு பெரிய சரித்திர நிகழ்வு. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஏ ஆர் ரகுமான், ஷங்கர், ரசூல் பூக்குட்டி ஆகியோர் இந்தியாவுக்கு வெளியே நம் இந்தியாவின் கலை அடையாளங்கள். ரசூல் பூக்குட்டி ஆஸ்கர்…
Read More
தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!

தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள்!

தமிழ் நாடகக் கலையின் தந்தை, தமிழ் நாடக தலைமை ஆசிரியர், மறு மலர்ச்சியாளர், தமிழ் நாடக விடிவெள்ளி என்றெல்லாம் கொண்டாடப்பட்ட தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 95-வது நினைவு நாள் விழா இன்று புதுவையில் அனுசரிக்கப்படுது. இந்நிகழ்ச்சியை ஒட்டி ஆண்டுதோறும் புதுச்சேரி அரசின் சார்பாகவும், கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பாகவும் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது சமாதிக்கு, ஏராளமானோர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி இன்று நடந்த விழாவில் திரைப்பட நடிகர் சங்கத் தலைவர் நாசர் , பொன்வண்ணன் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். தமிழ் நாடகத் தந்தை, தமிழ் நாடக மறுமலர்ச்சியாளர் என்று போற்றப்படுபவர் சங்கரதாஸ் சுவாமிகள். ஏறத்தாழ 30 ஆண்டு களுக்கும் மேலாக தமிழ் நாடகத்தை தனது மூச்சாகக்கொண்டு சுமார் 63 நாடகங்களை அரங்கேற்றியவர். மிகவும் பிரபலமான கலைஞர்களான எஸ்.ஜி.கிட்டப்பா, டி.கே.சண்முகம் சகோதரர்கள், எம்.ஆர்.ராதா போன்ற முன்னணி நடிகர்களை…
Read More
உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.! – சக்க போடு போடு ராஜா இசை அமைப்பாளர் வருத்தம்!

உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன்.! – சக்க போடு போடு ராஜா இசை அமைப்பாளர் வருத்தம்!

சிம்பு தற்போது மணிரத்னம் படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என கமிட்டாகியுள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவரவுள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பில் பிஸியாக இருக்கிறார். முன்பு, ‘அன்பாதவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் போது எழுந்த சர்ச்சைகளால் சமூக வலைதளத்திலிருந்து சிம்பு வெளியேறினார். அதன் காரணமாக ரசிகர்களின் தொடர்பில் இருந்து தள்ளியே இருந்தார். இந்த நிலையில் நீண்ட நாள்கள் கழித்து ரசிகர்களுக்காக வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில், “அனைவருக்கும் வணக்கம். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களுக்கும், ட்ரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி. உங்கள் அனைவரிடமும் பேசி நீண்ட நாள்களாச்சு; அதனால் பேச வேண்டும் என தோன்றியது. எனது மற்ற பாடலுக்கு நல்லதொரு வரவேற்பு கொடுத்து வருகிறீர்கள். சமூக வலைதளத்தில் இல்லாததால் ரசிகர்களிடம் பேசி ரொம்ப நாளாகிவிட்டது. உங்களை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். நீங்கள் அனைவருமே இருக்கும்போது பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இது படத்தின்…
Read More
தன் மகனுக்கு ஜோடி தேடும் விக்ரம்!

தன் மகனுக்கு ஜோடி தேடும் விக்ரம்!

சீயான் விக்ரம் தன் மகன் துருவ் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு தற்போது நாயகி தேடி வருகிறார். அதை ஒட்டி லேட்டஸ்ட்டாக ஒரு வீடியோ அறிவிப்பை அவர் வெளியிட்டு உள்ளார். தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை பாலா இயக்குகிறார். பெரும்பான்மை ரசிகர்கள் யூகிக்கப்பட்ட ‘சீயான்’ பெயருக்குப் பதிலாக 'வர்மா' எனப் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு நாயகி தேடும் வேலையில் இறங்கியுள்ளது படக் குழு. இது குறித்து விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அவளைக் காணவில்லை. அந்த அவள் நீங்களாக இருப்பின் அல்லது அவள் உங்களைப் போல இருப்பின் உங்கள் புகைப்படத்தையும், வீடியோவையும் [email protected]என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களைச் சந்திப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க முடியாது. கொஞ்ச நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் வேகமாக அனுப்பி வையுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த…
Read More