சேட்டன் சிங்கர் ஜெயசந்திரன் காலமானார்

சேட்டன் சிங்கர் ஜெயசந்திரன் காலமானார்

சிலரோட குரல் அம்புட்டு பேருக்கும் பிடிச்ச குரலாக அமைந்திருக்கும். முக்கியமாக, எல்லா மியூசிக் டைரக்டர்களுக்கும் அட்ராக்ட்டிவான குரலாக அமைஞ்ச்சிருக்கும். அப்படி, இசையமைப்பாளர் உணர்வுக்குப் பொருத்தமான குரல் கிடைச்சுட்டா, நம் உணர்வுகளை உசுப்பிவிடும் பாடல்களை அந்தக் குரல் நமக்குக் கடத்திவந்து கொடுத்துவிடும். பாடகர் ஜெயச்சந்திரனின் குரல் அப்படித்தான்! முன்னொரு கால சினிமாவில் கனமான குரல் வளம் கொண்ட பாடகர்கள் தான் அதிகம் இருந்தாய்ங்க. அவிய்ங்களை முன்னிலைப்படுத்தியே அந்த கால திரையிசை உலகமும், வெள்ளித் திரையும் இயங்கி வந்துச்சு. எம்.ஜி,சிவாஜி மற்றும் அதன் பிறகு ரஜினி, கமல் போன்றவர்களின் வருகையால் திரையுலகம் மென்மையான குரல்வளம் கொண்டவர்களால் நிறைஞ்ச்சிது. அந்த சமயத்தில் அவர்களைப் போன்ற இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் பிரதிபலிக்க எஸ்.பி.பி. என்ற பிதாமகன் கிடைத்தார். அதே போன்று எந்தவொரு ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நதியோட்டமாக மனதை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்பட்டார். இந்த இருவரும் தங்களது ஆளுமையால் திரையிசையை ஆண்டு வந்த சமயத்தில்…
Read More
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாள்!

முன்னொருக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் பெருமைப்படுத்தப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிந்தைய காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். அப்படி இருந்த நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்... டைரக்டர் ஸ்ரீதர். ஆம்.. நம் தமிழ்த் திரையுலகில் மிகச்சிறந்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் நிச்சயமாக ஸ்ரீதரின் பெயர் இடம்பெறும். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கமர்ஷியல்’ படங்களாக இருப்பதோடு, திரையுலகின் போக்கை மாற்றத்திற்கு உள்ளாக்கிய சிறப்பும் அவரது படைப்புகளுக்கு உண்டு. திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களை வைத்துப் படம் இயக்கியபோதும் சரி; இரண்டாம்…
Read More
பராசக்தி  ரிலீஸான நாளின்று(1952)!

பராசக்தி ரிலீஸான நாளின்று(1952)!

‘’ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓடப்பர் உதையப்பர் எல்லாம் மாறி ஒப்பொப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!’’ -ஒவ்வொரு வார்த்தையாக திரையில் ஒலிக்க.. ஒலிக்க.. தமிழ்நாடே கையை தூக்கி இரண்டு இளைஞர்களிடம் சரண்டர் ஆனது. ஒவ்வொரு வசனத்தையும் திருக்குறளைப்போல மனப்பாடம் செய்து ஒப்பித்தது. தமிழகம் முழுக்க மிகப்பெரிய அதிர்வலைகளை அந்த திரைப்படம் உருவாக்கியது. அந்த வசனங்கள் அரை நூற்றாண்டுகளுக்கு பின்னும் தமிழகமெங்கும் அன்றாடம் எங்காவது நினைவு கூறப்படுகிறது. பராசக்தி படத்துக்கு இந்த நாளோடு எழுபத்து இரண்டு வயதாகிவிட்டது. 1952ஆம் ஆண்டின் தீபாவளி தினம் அன்று. சிவாஜி கணேசனுக்கு அதுதான் முதல் படம். வசனம் எழுதியிருந்த மு. கருணாநிதிக்கு அது ஏழாவது படம். தமிழ்நாட்டில் படம் வெளியான திரையரங்குகளில் எல்லாம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்காக அந்த நேரத்தில் கருதப்பட்ட மதுரை தங்கம் திரையரங்கத்தில் முழுமையாகக்கூட கட்டுமானப் பணிகள் முடிவடையவில்லை. முதல் படமாக பராசக்தி வெளியானது. சுமார் 2,500 பேர் அமரக்கூடிய…
Read More
பிரதர் ஆடியோ லாஞ்சில் ஜெயம்ரவி சொன்ன ஹீலிங் – டீடெய்ல் ரிப்போர்ட்!

பிரதர் ஆடியோ லாஞ்சில் ஜெயம்ரவி சொன்ன ஹீலிங் – டீடெய்ல் ரிப்போர்ட்!

ஜெயம்ரவியின் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளியன்று வெளியாக உள்ள பிரதர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.இதில் கதாநாயகன் ஜெயம்ரவி, கதாநாயகி பிரியங்கா, இயக்குநர் ராஜேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டாய்ங்க நிகழ்ச்சியில் நாயகன் ஜெயம்ரவி பேசியது : “ரசிகர்கள் கொடுக்கும் எனர்ஜியில் தான் என் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.எனது முதல் படத்தில் என்ன எனர்ஜியை கொடுத்த்தீர்களோ அதே எனர்ஜியை கடைசி படம் வரை கொடுப்பீர்கள் என்று தெரியும்.மக்களை சந்தோஷப்படுத்துவது தான் எனது வேலை. குழந்தை போல என்னை வழி நடத்துவது ஊடகம் தான்.பிரதர் என்ற தலைப்பை நான் தான் படத்திற்கு வைத்தேன்.அக்காவுக்கும் தம்பிக்குமான அழகான திரைக்கதை தான் பிரதர் படம்.  பிரதர் படத்தின் பாடல்கள் பிடிச்சிருந்துச்சா. நீங்கள் எல்லோரும் சொல்றதுக்கு முன்னாடி, முட்டி ஸ்டெப் ஆட வரல. சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த என் பையன் ஆரவ், என்னப்பா.. வயசாகிடுச்சா.. அப்படின்னு கேட்டான். தாங்கவே முடியல.…
Read More
மண்வாசனை வெளியான நாளின்று!

மண்வாசனை வெளியான நாளின்று!

தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு இதே செப் 15இல் வெளியானது ‘மண் வாசனை’.‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் டைரக்‌ஷனில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமானாய்ங்க அதோடு இந்தப் படம்தான் பத்திரிகை தொடர்பாளர், , இயக்குநர், நடிகருமான சித்ரா லட்சுமணன் தயாரிச்ச முதல் படமாகும். பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்துச்சு. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டு இருப்பாய்ங்க என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் கிராமத்துக் கலாசாரமும் பண்பாடும் நிலவெளியின் அழகியலும் மிக வலுவாக வெளிப்பட்ட படைப்புகளில் முக்கியமானது ‘மண் வாசனை’.தலைப்பிற்கு…
Read More
16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

16 வயதினிலே ரிலீஸான நாளின்று!

தமிழ் சினிமாவை மண் மணம் வீசும் கிராமத்து வாழ்வியலுக்கு எடுத்து சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் சகாப்தம் தொடங்கிய 16 வயதினிலே திரைப்படம் இன்றுடன் வெளியாகி 47 ஆண்டுகள் ஆகுது. கோலிவுட்டில் முதன் முதலில் என்ற வார்த்தையை பல்வேறு விஷயங்களில் செஞ்சு காட்டிய படம்தான் 16 வயதினிலே. அந்தக் காலத்துலே நம் தமிழ் சினிமாக்கள் அம்புட்டு, ஷூட்டிங்கும் அரங்குகளிலேயே எடுக்கப்பட்டு வந்துச்சு. அப்பாலே அந்த அரங்குகளைவிட்டு தமிழ் சினிமா வெளியே வந்து கொண்டிருந்த காலகட்டத்தில், முதன் முறையாக முழுப்படமும் ஒரு கிராமத்தில் எடுக்கப்பட்டது என்றால், அது 16 வயதினிலேதான்.இது அப்போதைய காலகட்டத்தில் மிகவும் பிரமிப்பா பேசப்பட்டுச்சு. ‘இதெப்படி இருக்கு?’ என்று காட்சிக்குக் காட்சி இவர் சொல்லும் வசனம்... பஞ்ச் வசனம்... ரஜினி பஞ்ச் வசனம் பேசிய வகையிலும் முதல்படம். ஸ்ரீதேவி அப்படியொரு அழகு தேவதையாக நாயகியானதும் இதுவே முதல் படம். எம்ஜிஆர், சிவாஜி காலத்து நடிகையாக இருந்தாலும் காந்திமதிக்கு அப்படியொரு நடிகையாகக் கிடைத்த…
Read More
நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

நவரச நாயகன் கார்த்திக் பர்த் டே!

கோலிவுட்டோ, பாலிவுட்டோ எல்லா சினிமா உலகிலும் எம்புட்டோ வாரிசு நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மாத்திரமே தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனசில் நீங்கா இடம் பிடிச்சிருக்காய்ங்க. அவர்களில் முக்கியமான நடிகர் நவரச நாயகன் கார்த்திக். நடிகர் முத்துராமனின் மகனாக தமிழ் சினிமாவில் அறியப்பட்டாலும் பிற்காலத்தில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மத்தியில் சிறந்த நடிகர் என்று பெயரெடுத்தவர். துறுதுறு சிட்டி பாய், கிராமத்து இளைஞன், அப்பாவி, சீரியஸ் கேரக்டர், காமெடி ஹீரோ என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது நடை, உடை, பாவனை, தோரணை என அனைத்தையும் தனது நடிப்பில் வெளிப்படுத்தக்கூடிய அசாத்திய திறமை கொண்ட நடிகரிவர் இதுவே இவரது வெற்றிக்கு சான்று. கொஞ்சூண்டு விரிவா சொல்றதானா முத்திரை என்பது சினிமாவில் மிக எளிதாகச் செஞ்சிடும் காரியம். இரண்டு மூன்று படங்களிலேயே ‘இந்த நடிகர் இப்படி நடிப்பதற்கானவர்’ அப்படீன்னு முத்திரை குத்திப்புடுவாய்ங்க ரசிகர்கள். ஆனால், அவரை ‘அமுல்பேபி’ என்று கொண்டாடிக்…
Read More
சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

சினிமாவில் ஒரு சிற்றரசர் என்று வர்ணிக்கப்பட்ட மாடர்ன் தியேட்டர் சுந்தரம்!

கல்கத்தாவிலும், பம்பாயிலும் கோலாப்பூரிலும் மட்டும் இயங்கி வந்த இந்திய சினிமாவை சேலம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைச்சவர் இந்த ‘செல்லுல்லாய்ட் சீமான்’. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 150 படங்களைத் தயாரிச்சவர். 55 படங்கள் இயக்கியவர். 40 ஆண்டுகள் இடைவிடாமல் இயங்கிச் சாதனை படைத்த அவர்தான், மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற சினிமா சாம்ராஜ்யத்தைக் கட்டி எழுப்பிய டி.ஆர். சுந்தரம். “முதலாளி” அப்படீன்னு முன்னணி நட்சத்திரங்களாலும் ஸ்டூடியோ தொழிலாளர்களாலும் நிஜ அன்போடும் அழைக்கப்பட்ட சுந்தரத்தின் சாதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘திரைப்படத் தயாரிப்பு முறை என்றாலே ஹாலிவுட்டுக்கு இணையாக யாருமில்லை’ என அங்கலாய்ப்பவய்ங்க நாற்பதுகளில் வாழ்ந்திருந்தால் அப்படிக் கேட்க வாய்ப்பே இல்லை. ஹாலிவுட்டுக்குச் சற்றும் குறையாத முழுமையான கட்டமைப்பு வசதிகளுடன் ஒரு பிரம்மாண்ட ஸ்டூடியோவை இயற்கை எழில் சூழ்ந்த சேலம் – ஏற்காடு மலையடிவாரத்தில் அமைச்சாரிவர். அங்கே ஷூட்டிங் ஃப்ளோர் , பாடல் ஒலிப்பதிவுக்கூடம்,…
Read More
எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் . நடித்த நாடோடி மன்னன் ரிலீஸான நாளின்று!

எம்.ஜி.ஆர் நடிச்ச நாடோடி மன்னன் படத்துக்கான அப்போதைய பட்ஜெட் ஜஸ்ட் ரூ.18 லட்சம். ‘இந்தப் படம் ஓடினால் நான் மன்னன், இல்லையேல் நாடோடி’ அப்படீன்னு ஓப்பனா அறிவிச்சுப்புட்டு படத்தை ரிலீஸ் செஞ்சார் எம்.ஜி.ஆர். படம் மெகா ஹிட். கூட்டம் கூட்டமாக பெரும் கொண்டாட்டமாகக் கொண்டாடி தீர்த்தாய்ங்க ரசிகர்களுங்க. உலகம் முழுவதும் 23 திரையரங்குகளில் 100 நாள்கள் ஓடி புதிய சாதனையை படைச்சுது. அத்துடன் 175 நாள்களை கடந்து வெள்ளிவிழா கண்டுச்சு. அப்பவே நெசமா ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டி கொட்டிக் கொடுத்துச்சாம். இந்தப் படம்.எம்.ஜி.ஆருக்கும் தமிழ் சினிமாவுக்கும் திருப்புமுனை தந்த இந்தப்படம். அதே சமயம் நாடோடி மன்னனின் வெற்றியை திமுக தனது சொந்த வெற்றியாகக் கொண்டாடிச்சு. 1958 அக்டோபர் 16 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்ட கூட்டத்தில் திமுக தலைவர் அண்ணாதுரை எம்ஜி ராமச்சந்திரனுக்கு தங்க வாள் பரிசளிச்சார். இதனை பிறகு எம்ஜி…
Read More
அவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) நினைவு நாள்!

அவிச்சி மெய்யப்பச் செட்டியார், (ஏவிஎம், ஏ. வி. மெய்யப்பன்) நினைவு நாள்!

இன்றைய கோலிவுட் என்னும் ஆலமர விருட்சத்தின் ஆரம்பகாலமென்பது ஏ.வி.எம். ஸ்டுடியோவிலும் வளர்ந்தது,, அந்த ஏவிஎம்-மை உருவாக்கிய மெய்யப்ப செட்டியார் இந்த ஸ்டுடியோவை சென்னையில் தொடங்கி, பின் தேவகோட்டையில் சிறிது காலம் இயங்கி, மீண்டும் சென்னைக்கே வந்த கதை சுவாரஸ்யமானது. ஏ.வி.எம். நிறுவனத்தின் நிறுவனரான ஏ.வி.மெய்யப்பன் செட்டியார் புதுமையாக எதையாவது செய்து கொண்டே இருப்பார். அதற்காக முதலீடு செய்வதற்கும் தயங்காதவர். ஆரம்பகாலத்தில் காரைக்குடியில் 'ஏவி அண்டு சன்ஸ்' என்ற பெயரில் இசைத் தட்டுகளை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். அதை பெரிய அளவில் விரிவு படுத்தினார். 1932-ல் தென்னிந்தியா முழுவதற்கும் விற்பனை உரிமையைப் பெற்றார். சிறிய ஊரில் இருந்து பெரிதாக சிந்தித்தவர். அதன் பின் சென்னையில் சிவம் செட்டியார், நாராயண அயங்கார் என்ற இருவரை சேர்த்துக் கொண்டு 'சரஸ்வதி ஸ்டோர்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது ஜெர்மனியில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த ஓடியன் கிராமபோன் கம்பெனியுடன் ஒப்பந்தம் ஒன்று செய்து வியாபாரத்தை…
Read More