27
Apr
பிரபல மலையாள இயக்குனர்கள் காலித் ரஹ்மான் மற்றும் அஷ்ர்ப் ஹம்சா ஆகியோரை கஞ்சா வைத்திருந்ததாக கலால் துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். அனுராகா கரிக்கின் வெல்லம், உண்டா, காதல், தள்ளுமாலா, ஆலப்புழா ஜிம்கானா ஆகிய படங்களை இயக்கியவர் காலித் ரஹ்மான். தமாஷா, பீமன்டே வழி, சுலைகா மன்சில் ஆகிய படங்களை இயக்கியவர் அஷ்ரப் ஹம்சா. கொச்சியில் உள்ள ஒளிப்பதிவாளர் சமீர் தாஹிரின் பிளாட்டில் இருந்து கைது செய்யப்பட்டனர். படம் தொடர்பான விவாதங்களுக்காக அவர்கள் அந்த பிளாட்டுக்கு வந்தார்கள். அந்த பிளாட்டில் ரகசிய தகவலின் அடிப்படையில் கலால் துறையினர் சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட இயக்குநர்கள் தொடர்ந்து போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் என்று கலால் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே நடிகர் ஷைன் டாம் சாக்கோ சர்ச்சையைத் தொடர்ந்து திரைப்படத் துறையில் போதைப்பொருள் பரவுவது பரவலான விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், இளம் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மலையாளத் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.