19
Mar
ரகுவரன்- மிகப்பெரிய, யாரும் எதிர்பார்க்க முடியாத திறமைகளுக்குச் சொந்தக்காரர். சினிமா ரசிகர் ஒவ்வொரு வருக்கும் நன்கு தெரிந்தவரும் கூட. 1980-ல் திரைப்படக் கல்லூரி மாணவராயிருந்த ஹரிஹரன், தனது சக மாணவரான ரகுவரனை வைத்து இயக்கிய படம் ஏழாவது மனிதன். தொழிற்சாலைக் கழிவுகளின் கெடுதலை விளக்கிய அந்தப் படத்துக்கு விருது கிடைத்தது. அடுத்து ஸ்ரீதர் இயக்கிய ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் சுமலதாவின் ஜோடியாக நடித்தார். இளையராஜாவின் நல்ல பாடல்கள், ஸ்ரீதரின் திரைக்கதை என எல்லாம் இரும்தும் வணிக ரீதியான வெற்றி கிட்டவில்லை அந்தப் படத்துக்கு. பின்னர் வி.சி.குகநாதன் இயக்கத்தில் இந்திரகுமாரி தயாரித்த ‘நீ தொடும்போது’ எனும் படத்தில் ராஜேஷ் – லட்சுமியுடன் நடித்தார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு எஸ்.பி.முத்துராமன் இயக்கிய ‘ஒரு மனிதனின் கதை’ என்ற ஏவிஎம்மின் 13 வார தொடர் ஒன்றில் நடித்தார். தனியார் தொலைக்காட்சிகள் வராத அந்த நாட்களில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இத்தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.மீண்டும் ஏவிஎம்மின்…