கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடித்துள்ள “ஒத்த ஓட்டு முத்தையா” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

  கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக இயக்கி வருகிறார் கடந்த மூன்று மாதங்களாக பரபரப்பாக நடந்து வந்த "ஒத்த ஓட்டு முத்தையா" படப்பிடிப்பு நல்ல முறையில் முடிவடைந்தது..பூசணிக்காய் உடைக்கப் பட்டது.. கவுண்ட மணி.. யோகி பாபு..சித்ரா லட்சுமணன்..'மொட்டை ராஜேந்திரன்- ரவிமரியா..ஓ ஏ கே சுந்தர்..C.ரங்கநாதன் மற்றும் பலர்- மகிழ்ச்சியாக நடித்து முடித்தனர்.. இந்த படத்தில் மூன்று இளம் ஜோடிகளாக..நடிகர் சிங்க முத்து அவர்களின் மகன் வாசன்கார்த்தி & பிந்து மயில்சாமி அவர்களின் மகன் அன்பு மயில்சாமி & சாய் தான்யா நாகேஷ் பேரன்- கஜேஷ் & அபர்ணா. கவுண்டமணி மனைவியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்..இது தவிர- சிங்கமுத்து..தாரணி..ரவிமரியா, வையாபுரி, முத்துக் காளை, பயில்வான் ரங்கநாதன், டாக்டர் காயத்ரி, லேகா ஶ்ரீ, மிலிட்டரி கதாபாத்திரத்தில் இயக்குனர்…
Read More
‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

‘கனா’ புகழ் தர்ஷன்- ‘ஹிருதயம்’ தர்ஷனா ராஜேந்திரன் நடித்திருந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !

  'சேத்துமான்' என்ற இயல்பான படம் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் இயக்குநர் தமிழ். இப்போது அவர் பெருமாள் முருகன் கதை வசனத்தில் செ. வினோத்குமார் தயாரிப்பில் தனது மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். லவ் ஃபேமிலி டிராமா ஜானரில் உருவாகியுள்ள இந்தக் கதையில் உண்மையான காதல் என்றால் என்ன என்பதும் அதனைச் சுற்றியுள்ள அரசியலும் இந்தப் படத்தில் பேசப்பட்டுள்ளது. "நம் நாட்டில் எங்கும் அரசியல் , எதிலும் அரசியல். அதிகார அரசியல் மட்டுமின்றி ,சாமானிய அரசியல் கூட இந்த சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. இரு இதயங்கள் இணையும் காதலில் அரசியல் செய்யும் மாற்றங்களை வெகு விமரிசையாக சித்தரிக்கும் படம் இது" என்கிறார் இயக்குநர் தமிழ். 'ஹிருதயம்', 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் தர்ஷனா ராஜேந்திரன், 'கனா' புகழ் தர்ஷன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகர்கள் ஆதிரா, ஆதித்யா கதிர் மற்றும் பல புதுமுக நடிகர்களும் நடித்துள்ளனர்.…
Read More
‘சுயம்பு’ படத்திற்காக இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் நடிகர் நிகில் !

‘சுயம்பு’ படத்திற்காக இரு கைகளாலும் வாள் சண்டை பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார் நடிகர் நிகில் !

  ஹீரோ நிகில், பாரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கவுள்ள தனது 20வது படமான 'சுயம்பு' படத்திற்காக வியட்நாமில் கடுமையான பயிற்சிக்காக கிட்டத்தட்ட ஒரு மாதம் தங்கியுள்ளார். தாகூர் மது வழங்கும் பிக்சல் ஸ்டுடியோஸின் புவன் மற்றும் ஸ்ரீகர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் போர் வீரனாக நடிக்க ஆயுதங்கள், தற்காப்புக் கலைகள் மற்றும் குதிரை சவாரி ஆகியவற்றில் பயிற்சி பெற்று இருக்கிறார் நிகில். இந்தப் படத்தில் சில நம்பமுடியாத சண்டைக் காட்சிகளை திரையில் கொண்டு வர இருக்கிறார் நிகில். இதற்கான பயிற்சியை முடித்த பின்பு இப்போது நிகில் வாள் சண்டையில் நிபுணராகி உள்ளார். இதற்கு காரணம் இவ்வளவு நாட்கள் நிகில் எடுத்த கடுமையான பயிற்சிகள் தான். இப்போது இரண்டு கைகளாலும் வாள் சண்டை பயிற்சி செய்யும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது நடிகர் நிகில் பகிர்ந்துள்ள வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நிகிலின் சினிமா பயணத்தில் அதிக பொருட்செலவில் உருவாகும் இந்தப்…
Read More
பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

  தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது
Read More
‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

‘நானி 31’ படத்தில் இணைந்துள்ளார் நடிப்பின் அரக்கன் எஸ். ஜே. சூர்யா!

  நேச்சுரல் ஸ்டார் நானியும், 'அந்தே சுந்தரானிகி' போன்ற கல்ட் என்டர்டெய்னரை வழங்கிய இயக்குநர் விவேக் ஆத்ரேயா 'நானி 31' படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை 'ஆர் ஆர் ஆர்' போன்ற ஆஸ்கார் விருது பெற்ற படத்தை தயாரித்த  டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ்   சார்பில் டி வி வி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள். 'நானி 31' தொடர்பாக ஒரு சிறிய அறிவிப்பு வீடியோவை வெளியிடுவதன் மூலம் படக் குழு தங்களின் திட்டத்தையும் விவரித்தது. இதனால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் தங்கள் இரண்டாவது பயணத்தில் இந்த முறை வித்தியாசமான படைப்பை தருவதற்கு முயற்சிக்கப் போவதாகவும் சுட்டிக்காட்டி உள்ளனர். தற்போது 'நானி 31' படத்தின் நடிகர்கள் பற்றிய தகவல்களை வெளியிட தொடங்கியுள்ளனர். இப்படத்தின் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தற்போது நடிகர் எஸ். ஜே. சூர்யா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்…
Read More
நேச்சுரல் ஸ்டார் நானியின் 31வது படத்தை வெற்றி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க்கவுள்ளார்!

நேச்சுரல் ஸ்டார் நானியின் 31வது படத்தை வெற்றி இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்க்கவுள்ளார்!

  முன்னணி நட்சத்திரமான நேச்சுரல் ஸ்டார் நானியும், அந்தே சுந்தராணிகி எனும் ஒரு கல்ட் எண்டர்டெய்னர் படத்தை வழங்கிய திறமையான இயக்குநர் விவேக் ஆத்ரேயாவும் #Nani31 மூலம் மீண்டும் இணைந்துள்ளனர். ஆஸ்கர் விருது வரை அசத்திய RRR படத்தை வழங்கிய DVV தனய்யா மற்றும் DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ் கல்யாண் தாசரி இருவரும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்கள். இந்த முறை இந்தக் கூட்டணி, மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் ரசிகர்களை அசத்தப்போகிறார்கள் என்பது, இன்று வெளியான அறிவிப்பு வீடியோவில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. படப்பிடிப்பிற்கு முன்னதான முன் தயாரிப்பு பணிகளைப் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை இந்த சிறிய வீடியோ வழங்குகிறது. வீடியோவில் நானியின் வசீகரமிக்க தீவிரமான கண்கள் இந்த முறை மிக உற்சாகமான விருந்து ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. இந்த வீடியோவில் வரும் வண்ணங்கள், இசை அனைத்தும் இந்த படைப்பு மிக வித்தியாசமான ஜானரில் இருக்குமென்பதை தெறிவிக்கிறது. வீடியோவின் இறுதியில்,…
Read More
பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

பிருத்விராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன் !

  லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் 'லூசிபர் 2 எம்புரான்' எனும் படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் 'லூசிபர் 2 எம்புரான்' படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை…
Read More
மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

மாரடைப்பால் உயிரிழந்தார் இயக்குனர் மாரிமுத்து ! சன் டீவி சீரியலில் குணசேகரணாக பிரபலமானவர்!

சீரியல் ஒன்றில் இந்த கால திருமணத்தில் நடக்கும் நிகழ்வுகளை விமர்சித்துப் பேசியதால் மக்களிடையே ட்ரெண்டானவர் நடிகர் ஜி.மாரிமுத்து. இன்றைய தலைமுறைக்கு அவரை சினிமா, சீரியல் நடிகராகத் தான் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆனால், இயக்குநராகவே அவர் தனது சினிமா பயணத்தைத் தொடங்கினார். ஆரம்பகாலத்தில் வைரமுத்துவிடம் பணியாற்றிய மாரிமுத்து, பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் பணியாற்றியவர் பின்னர், மணிரத்னம், வசந்த், சீமான் போன்ற இயக்குநர்களிடம் வேலை பார்த்தார். மன்மதன் படத்தில் சிம்பு டீமில் கோ-டைரக்டராகவும் பணிபுரிந்தார். பிரசன்னா, உதயதாரா நடித்து 2008-ல் வெளியான கண்ணும் கண்ணும் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலைக் குவிக்கவில்லை என்றாலும் வித்தியாசமான திரைக்கதைக்காக மாரிமுத்து பாராட்டப்பட்டார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு 2014-ல் விமல், பிரசன்னா நடித்து வெளியான புலிவால் படம் மூலம் கம்பேக் கொடுத்தார். இடையில், அவரை நடிகராகத் தனது யுத்தம் செய்…
Read More
பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

  நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி. அதுமட்டுமல்லாமல், 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர். கமலின் வெற்றிப்படங்களான 'விக்ரம்', 'சத்யா', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'குணா', 'கலைஞன்' என எல்லா படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 1989ல் வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. '8 தோட்டாக்கள்', 'வனமகன்', என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடனான இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார். மேலும் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல்…
Read More
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘800’ படத்தின் அறிவிப்பு!

  இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து '800' என்ற படம் தயாராகி வருகிறது. மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கியுள்ளார். இதில் 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் மதுர் மிட்டல் மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். புக்கர் பரிசை வென்ற ஷெஹான் கருணாதிலக்க இப்படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றியுள்ளார். ஸ்ரீதேவி மூவீஸின் தயாரிப்பாளரான சிவலெங்க கிருஷ்ண பிரசாத் '800' படத்தின் அகில இந்திய திரையரங்கு உரிமையைப் பெற்றுள்ளார். '800' முதலில் ஒரிஜினல் வெர்ஷன் தமிழில் படமாக்கப்பட்டது. இப்போது அது தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றிலும் வெளியிடப்படுகிறது. இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொச்சின், சண்டிகர்…
Read More